்‌ இக தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை | சென்னை - 600008 | 3 i 2017 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2048

spe

தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌. 48

தமிழ்நாட்டுக்‌ கல்ஷட்டுகள்‌ எதாகுதீ -1% (காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கல்வவட்டுகள்‌ - ஒதாகுதி-5)

தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை ண்‌. 48

தமிழ்நாட்டுக்‌ கல்வவட்டுகள்‌ எதாகுதீ -1%

(காஞ்சீபுரம்‌ மாவட்டக்‌ கல்வட்டுகள்‌ - ஒதாகுதி-5)

பொதுப்பதிப்பாசிரியர்‌ முனைவர்‌ டி. ஜகந்நாதன்‌, ஆ.ஆ.ப.,

ஆணையர்‌ மு.கூபா)

பதிப்பாசிரியர்‌ உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர்‌ / துணை இயக்குநர்‌ டுபோ)

எவளியீடூ தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை சென்னை-600 ௦0௦8 2017 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2048

BIBLIOGRAPHICAL DATA

TITLE : Tamilnattuk Kalvettukal - Vol. IX (Kanchipuram Mavattak-Kalvettukal - Vol.5)

Editor : SIVANANTHAM

Copy Right Tamilnadu State Dept. of Archaeology

Subject Epigraphy

Language Tamil

Edition First

Publication No. 286

Year 2017

Type Point 12

No. of Pages 300

No. of Copies 1000

Paper Used

Printer

Publisher

Price

80 Gsm Maplitho

Tharamani Womens Co-operative Society,

46, Peters Road, Royapettah, Chennai-600 014

State Dept. of Archaeology, Tamil Valarchi Valaagam, Thamizh Saalai, Egmore, Chennai - 600 008.

Rs. 98.00

பதிப்புரை

முன்னுரை

. பெருநகர்‌

ஆத்தூர்‌ பாலூர்‌

. புலிப்பாக்கம்‌ . திருவானைக்கோயில்‌

. திருநீர்மலை

பம்மல்‌

. திரிசூலம்‌

ஆலந்தூர்‌

. நங்கநல்லூர்‌ . பள்ளிக்கரணை

. வேளச்சேரி

Summary சொல்லடைவு

நிழற்படங்கள்‌

உள்ளடக்கம்‌

113 136 165 168 191 192 193 196 223 251 262

இ.க.ஆ.அறிக்கை - இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை தெ.க.தொ. - தென்னிந்திய கல்வெட்டுத்‌ தொகுதி

ஊ.க.எண்‌ - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

*,

முனைவர்‌ ம. ஜகந்நாதன்‌, அ.ஆ.ப., தொல்லியல்‌ துறை, ஆணையர்‌ மூ.கூ.பொ) தமிழ்வளர்ச்சி வளாகம்‌,

தமிழ்ச்சாலை, எழும்பூர்‌, சென்னை - 600 008.

பதிப்புரை

வரலாற்றினை எழுதுவதற்கு துணைபுரியும்‌ சான்றுகளாகத்‌ திகழ்பவை அகழாய்வுத்‌ தொல்பொருட்கள்‌, கல்வெட்டுகள்‌, காசுகள்‌, செப்பேடுகள்‌, வரலாற்றுச்‌ சின்னங்கள்‌, இலக்கியங்கள்‌ போன்றவையாகும்‌. வரலாற்றினை அறிய உதவும்‌ கல்வெட்டுகளைப்‌ பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்‌. தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறையானது தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகளைப்‌ படியெடுத்து, படித்து, பதிப்பித்து, நூலாக வெளியிடும்‌ பணியினைத்‌ தனது முதன்மைப்‌ பணிகளில்‌ ஒன்றாகச்‌ செய்து வருகிறது.

இத்துறைக்‌ கல்வெட்டுப்‌ பிரிவு வாயிலாக சென்ற ஆண்டு வரை 6827 கல்வெட்டுகள்‌ 47 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. '2016-17-ஆம்‌ ஆண்டில்‌ நான்கு கல்வெட்டு நூல்கள்‌ வெளிவருகின்றன. இவற்றில்‌ இந்நூல்‌ கல்வெட்டு வரிசை எண்‌ 48-ஆவது நூலாக வெளியிடப்படுகின்றது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்திலுள்ள பெருநகர்‌, ஆத்தூர்‌, பாலூர்‌, புலிப்பாக்கம்‌, திருவானைக்கோயில்‌, திருநீர்மலை, பம்மல்‌, திரிசூலம்‌, ஆலந்தூர்‌, நங்கநல்லூர்‌, பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய ஊரிலுள்ள 147 கல்வெட்டுகள்‌ இந்நூலில்‌ இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே காஞ்சிபுரம்‌ மாவட்டத்திலுள்ள 639 கல்வெட்டுகள்‌ நான்கு தொகுதிகளில்‌ வெளிவந்துள்ளன. இந்நூல்‌ “தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி-1X (காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி -V)' என்னும்‌ தலைப்பில்‌ வெளிவருகின்றது.

இக்கல்வெட்டுகளைப்‌ பதிப்பித்து நூலாக வெளிக்கொணரும்‌ பணியில்‌ ஈடுபட்ட

இத்துறை உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர்‌ திரு இரா. சிவானந்தம்‌ அவர்களுக்கு எனது பாராட்டுகள்‌.

இந்நூலில்‌ இடம்பெற்றுள்ள கல்வெட்டு வாசகங்களைத்‌ தட்டச்சு (DTP) செய்த திருமதி தே. சத்தியவதி மற்றும்‌ திருமதி ௪. சரஸ்வதி அவர்களுக்கும்‌, அட்டைப்படத்தினை வடிவமைத்த திரு த. பிரகாஷ்‌ அவர்களுக்கும்‌ எனது பாராட்டுகள்‌.

தமிழ்நாடு அரசு புதுமை முயற்சிகள்‌ திட்டம்‌ 2016-17 திட்டத்தின்‌ கீழ்‌ நான்கு கல்வெட்டு நூல்களை வெளியிட நிதியுதவி நல்கிய தமிழ்நாடு அரசிற்கு உளங்கனிந்த நன்றியினைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

துறை அலுவலர்களின்‌ உழைப்பாலும்‌, பெரும்‌ முயற்சியாலும்‌ இது போன்ற நூல்களை வெளியிடுவதில்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. முதன்மைச்‌ சான்றாக உள்ள இக்கல்வெட்டு வாசகங்களை ஆய்வாளர்கள்‌, ஆர்வலர்கள்‌, மாணவர்கள்‌ பயன்படுத்தி இப்பகுதியின்‌ வரலாற்றினை எழுதுவதற்கு உதவும்‌ என்ற நோக்கில்‌ இந்நூலினை வெளியிடுவதில்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌.

Cnn

ஆணையர்‌

முன்னுரை

பெருநகர்‌

விசையகண்டகோபால தேவர்‌ தனது 21-ஆவது ஆட்சியாண்டில்‌ இக்கோயில்‌ இறைவனுக்கு வைகாசி விசாகத்‌ திருநாளன்று திருவிழா எடுப்பதற்காக 47 கழஞ்சுப்‌ பொன்‌ அளித்து, அதனின்‌ வாயிலாக வரும்‌ வட்டியைக்‌ கொண்டு நடத்திட வழிவகைச்‌ செய்திருந்தார்‌. இந்த வைகாசித்‌ திருநாள்‌ நீண்ட நாட்களாக நடைபெறாமல்‌ இருந்துள்ளது. வீரப்பெருமாள்‌ மகன்‌ ஆளப்பிறந்தான்‌ என்னும்‌ இராசராச சம்புவராயன்‌ என்பவன்‌ இரு தூண்களில்‌ இருந்த பழையக்‌ கல்வெட்டு ஆவணங்களைச்‌ சரிபார்த்த பின்னர்‌ மீண்டும்‌ இத்தானத்தினைப்‌ புதுப்பித்து மீண்டும்‌ வைகாசித்‌ திருநாள்‌ நடத்திட ஆணை வழங்கியுள்ளான்‌.

அழகிய பல்லவன்‌ கோநந்திபன்மர்‌ நலன்‌ வேண்டி இவ்வூரைச்‌ சார்ந்த வில்லி திருவன்‌ திரிகத்த ராயன்‌ என்பவன்‌ இக்கோயில்‌ (கருவறை) மற்றும்‌ திருமண்டபம்‌ ஆகியவற்றைக்‌ கட்டியுள்ளதை கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டுக்‌ கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. சேதிமண்டலத்தைச்‌ சேர்ந்த வாணவதரையன்‌ என்பவன்‌ மன்னன்‌ சுந்தர பாண்டியனின்‌ நலனுக்காக பிரமீசுவரமுடைய மகாதேவர்‌ கோயிலுக்குத்‌ தேவதானமாக 2 வேலி நிலம்‌ அளித்துள்ளான்‌. பிரமீசுவரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ இவ்வூரைச்‌ சார்ந்த காழி காக்கு நாயகன்‌ என்பவன்‌ எடுப்பித்துள்ள “முதலியார்‌ காக்கு நாயகர்‌” என்னும்‌ இறைவனுக்கு காக்கு நாயகன்‌ விசையன்‌ செம்பியதரையன்‌ என்பான்‌ ஆறு சந்தி விளக்குகள்‌ வைத்துள்ளான்‌.

பெருநகர்‌ பிரமீசுரம்‌ உடைய நாயனார்‌ கோயில்‌ திருமடைவளாகத்தில்‌ குடியிருக்கும்‌ கைக்கோளர்கள்‌ அரசுக்குச்‌ செலுத்தி வரும்‌ தறிக்கடமை, வாசல்வரி ஆகிய வரிகளையும்‌ மற்றும்‌ பல தொழில்‌ செய்பவர்களிடம்‌ வசூலிக்கப்படும்‌ வரிகளை சர்வமான்னியமாக இக்கோயிலில்‌ நடைபெறும்‌ பங்குனித்‌ திருநாள்‌, திருப்பரிவட்டம்‌ திருப்பணி ஆகியவற்றிற்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள இக்கோயில்‌ நிர்வாகிகளுக்கு சம்புவராயன்‌ ஆணையிட்டுள்ளான்‌. கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டில்‌ பெருநகரில்‌ வசித்த கைக்கோளர்கள்‌ வரி செலுத்த இயலாமல்‌ வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்‌. மீண்டும்‌ அவர்களை ஊர்ச்சபையார்‌ அதே ஊரில்‌ குடியமர்த்தி செலுத்த வேண்டிய வரிகளைக்‌ குறைத்து பெற்றுக்கொள்ளச்‌ சம்மதித்துள்ளனர்‌. புலியூர்‌ திருமடைவிளாகத்தில்‌ குடியிருக்கும்‌ கைக்கோள முதலிகளுக்கு உரிய பங்கில்‌ இரண்டு பங்கு நிலத்தினைப்‌ பெருநகர்‌ திருமடைவிளாகத்தில்‌ இருக்கும்‌ முப்பது வட்டத்து தானத்தார்‌ (கோயில்‌ நிர்வாகிகள்‌) பெற்றுக்கொண்டு தாங்களே இந்நிலத்தினை உழுது பயிர்‌ செய்து கொண்டு, இந்நிலத்திற்கு செலுத்தும்‌ வரிகளை கோயில்‌ ஸ்ரீபண்டாரத்தில்‌ அளிப்பதாக கைக்கோள முதலிகளுக்கு உடன்படிக்கை செய்து எழுதிக்‌ கொடுத்துள்ளனர்‌.

உத்திரமேரூரின்‌ புறனர்களான ஆலத்தூர்‌ மற்றும்‌ அத்திப்பற்று ஊரவர்‌ களுக்கிடையே தண்ணீர்‌ பாய்ச்சுவதில்‌ பிரச்சினை ஏற்பட்டது. மகாபிரதானி அரசர்‌ திப்பரசர்‌ முன்னிலையில்‌ இரண்டு ஊரவர்களும்‌ கூடினர்‌. ஆலத்தூர்‌ ஏரிக்கும்‌ விசுவூர்‌ ஏரிக்கும்‌ பாதிப்‌ பாதியாக பயன்படுத்திக்‌ கொள்ளவும்‌, திருத்தின நிலத்துக்கு நீர்‌ பாய்ச்சிக்‌ கொள்ளவும்‌, மடைவெட்டித்‌ திறக்க கூடாது என்றும்‌ சம்மதம்‌ ஏற்பட்டு ஒப்பந்தம்‌ செய்துள்ளனர்‌. ஆற்றூர்‌

ஆற்றூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊர்‌ மக்களுக்கு மதுராந்தகப்‌ பொத்தப்பிச்‌ சோழன்‌ ஆணையிட்டுள்ளச்‌ செய்தி. இவ்வூர்‌ வழித்துணையப்பன்‌ ஈசுவரமுடையார்‌ கோயிலுக்கு இரண்டு வேலி நிலம்‌ குடிநீங்கா தேவதானமாக இறையிலியாகக்‌ கொடுத்துள்ளான்‌.

தனியூர்‌ பெரும்பற்றப்புலியூர்‌ (சிதம்பரம்‌) உடையார்‌ திருச்சிற்றம்பலமுடையார்‌ கோயில்‌ தெற்குத்‌ திருவாசலில்‌, இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ தனது பெயரால்‌ 'சொக்கச்சீயன்‌ திருநிலை' என்னும்‌ பெயரில்‌ ஏழுநிலைகளைக்‌ கொண்ட கோபுரம்‌ செய்ய வேண்டி ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற ராஜராஜ நல்லூர்‌ என்னும்‌ ஊரிலிருந்த 364 வேலி நிலத்தின்‌ தேவதானம்‌, திருவிடையாட்டம்‌, பிடாரிப்பட்டி, துக்கைப்பட்டி, பள்ளிச்சந்தம்‌ உள்பட 44 வேலி நிலம்‌; மகாவிபூதிச்‌ சதுர்வேதிமங்கலத்தின்‌ 12 வேலி நிலம்‌, பட்ட விருத்தி 1 வேலி நிலம்‌, கடிகையார்‌ நிலம்‌ 31; ஆக மொத்தம்‌ 621, வேலிநிலம்‌ நீக்கி மீதமுள்ள 301% வேலி நிலத்தின்‌ அனைத்து வரிகளையும்‌ அழகியசீயன்‌ அவனியாளப்‌ பிறந்தான்‌ காடவன்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ கொடையாக வழங்கியுள்ளான்‌. இக்கல்வெட்டினை ஆற்றூரிலும்‌, காஞ்சிபுரம்‌ திருவேகம்பமுடைய நாயனார்‌ (ஏகாம்பரநாதர்‌) கோயிலும்‌ வெட்டிக்‌ கொள்ள உத்திரவிட்டுள்ளான்‌. இந்த ஆவணத்தில்‌ கோப்பெருஞ்சிங்கன்‌, குருகுலராஜன்‌, வில்லவராஜன்‌ ஆகியோர்‌ கையெழுத்திட்டுள்ளனர்‌.

இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கனை வடமொழி சுலோகத்திலுள்ள கல்வெட்டொன்று பின்வருமாறு போற்றிப்‌ புகழ்கிறது. இது மூவுலகத்து அரசர்களுடைய முடிகளிலுள்ள மாணிக்கங்களுக்கு அலங்காரம்‌ செய்வது, பூமியிலுள்ள நரசிரேஷ்டரான (கோநரசிம்மன்‌) கட்கமல்லனுடைய சாசனம்‌. மூன்று உலக அரசர்களுக்கும்‌ தலைவன்‌, எல்லா உலகத்திலுள்ள அரசர்களுடைய தலையிலுள்ள இரத்தினத்தில்‌ தன்னுடைய திருவடித்‌ தாமரைகளை வைத்தவன்‌. சோழ இராச்சியத்தை ஸ்தாபித்தவன்‌, பாண்டிய மண்டலாதிபதி, தொண்டை மண்டலமான தாமரைக்குச்‌ சூரியன்‌ போன்றவன்‌.

கர்நாடகமான சமுத்திரத்திற்கு அகத்தியர்‌ போன்றவன்‌. ஆந்திரமாகிய சமுத்திரத்திற்கு மந்தரமலை போன்றவன்‌. சேதி மன்னனுடைய மலைக்‌ கோட்டைகள்‌, அகழிகள்‌ இவற்றை அழித்து ஜயபேரிகை முழக்கியவன்‌, எதிரி அரசர்களை அமுக்குவதில்‌ இயந்திரப்‌ பொறி போன்றவன்‌, பகை மன்னருடைய பெருஞ்தேவியரின்‌ கன்னம்‌ காது கழுத்து இவற்றிலுள்ள மங்கல அணிகளாகிய நரிகளுக்குச்‌ சுழல்‌ காற்று போன்றவன்‌.

ii

அபிமான துங்கன்‌, சங்கிராமராமன்‌, அசகாயவீரன்‌, ஆகவதீரன்‌, பரத மல்லன்‌, பாரதமல்லன்‌, கட்கமல்லன்‌, பல்லவ குல பாரிசாதன்‌, காடவகுல சூடாமணி, அவநி ஆளப்பிறந்தான்‌ (அவனிபாஜன ஜாதன்‌), மங்கள நிலையன்‌, வீர விநோதன்‌, தியாகத்தைச்‌ சுவைப்பவன்‌ (தியாக விநோதன்‌), பகை மன்னன்‌ கண்டகோபாலனின்‌ பண்டாரத்தைக்‌ கவர்ந்தவன்‌ (கண்டபண்டாரலுண்டாகன்‌), பகை மன்னரின்‌ அந்தப்புரத்தைச்‌ சிறைப்பிடிப்பவன்‌ (பரராஜ அந்தப்புர பந்திகாரன்‌), இலக்கியப்‌ பெருங்கடல்‌ (ஸாஹித்ய ரத்நாஹரன்‌), மல்லைக்‌ காவலன்‌ (மல்லாபுரி நாயகன்‌), காஞ்சிக்‌ காவலன்‌ (காஞ்சி புரிகாந்தன்‌), காவிரியை மணந்தவன்‌ (காவேரி காமுகன்‌), பாற்கடலின்‌ பிரிய நாயகன்‌ (க்ஷீராபகா தசஷீண நாயகன்‌), பெண்ணைக்‌ கேள்வன்‌ (பெண்ணா நதி நாயகன்‌), கநக சபாபதி, சபா சர்வகார்ய ஸர்வகால நிர்வாகன்‌, கோப்பெருஞ்சிங்கன்‌ (கோபிருது சிம்ஹ மகாராஜ: ) ஸகலபுவன சக்கிரவர்த்தி.

கட்கமல்லனான அரசன்‌ தொண்டை மண்டலத்திலுள்ள அரசர்களால்‌ பிரசித்தமான இராசராசநல்லூர்‌ ஆகிய ஆத்தூர்‌ நகரத்தையும்‌, ஆளுடைய நாயனாருக்கு வெளிக்கோபுரம்‌, மதில்‌ இரு சுடரளவும்‌ நிகழ்த்துவதற்குரிய பூசை முதலியவற்றையும்‌ செய்வித்தனன்‌. எல்லா அரசர்களிடமிருந்தும்‌ திறைபெறும்‌ ஜகதேக வீரனான கட்கமல்லன்‌ பூமியை ஆண்ட காலத்தில்‌ காஞ்சி கைப்பற்றப்பட்டது. அங்கம்‌ கலங்கியது. மத்திய தேசம்‌ முறியடிக்கப்பட்டது. அளகாபுரி மிகவும்‌ நடுங்கியது.

பாலூர்‌

சோழ மன்னன்‌ மூன்றாம்‌ குலோத்துங்கனின்‌ அதிகாரி நந்தியராயன்‌ என்பவன்‌ ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூர்‌ என்கிற இராசேந்திர சோழ நல்லூர்‌ திருப்பதங்காடுடையார்‌ கோயிலுக்குரிய திருநாமத்துக்காணி, தேவதானம்‌ ஆகிய நிலங்கள்‌ மீது வசூலிக்கப்படும்‌ வரிகள்‌, தறிஇறையாகப்‌ பெறப்படும்‌ காசு, செக்குக்குடியினர்‌ கொடுக்கும்‌ எண்ணெய்‌ மற்றும்‌ காசுகள்‌ ஆகியவற்றினை, இக்கோயில்‌ இறைவனின்‌ பூசைக்கும்‌, கோயில்‌ திருப்பணிக்கும்‌, முதலீடாக வைத்துக்‌ கொள்ள மன்னனிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. மன்னனும்‌ இருபத்தொன்பதாவது ஆண்டு முதல்‌ திருப்பணிக்கும்‌, பூசைக்கும்‌ முதலீடாக வைத்துகொள்ள ஆணை வழங்கியுள்ளான்‌.

விசயநகர அரசர்‌ விருப்பண்ண உடையார்‌ ஆட்சிக்காலத்தில்‌ திருப்பதங்காவுடைய நாயினார்‌ கோயில்‌ திருமடைவளாகத்தினைச்‌ சுற்றியுள்ள சன்னதி தெருவில்‌ 70 குழி அளவுள்ள மனை மற்றும்‌ மனைப்படையும்‌ கைக்கோளர்‌, தேவரடியார்கள்‌ ஆகியோருக்குக்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்‌ விற்பனைச்‌ செய்துக்‌ கொடுத்துள்ளனர்‌. விசயநகர அரசர்‌ நரசிங்கய்ய தேவமகாராயர்‌ பாலையூரில்‌ வாழும்‌ பள்ளிகளின்‌ வீட்டு மனைகள்‌ மீதான வரிகளை நீக்கம்‌ செய்து ஆணையிட்டுள்ளார்‌. புலிப்பாக்கம்‌

சோழமண்டலத்து மண்ணி நாட்டு சிற்றேயில்‌ ஊரைச்‌ சார்ந்த அம்பலங்கோயில்‌ கொண்டான்‌ திருநட்டப்பெருமாள்‌ என்பவன்‌ இக்கோயிலில்‌ நடராசர்‌ திருமேனியை எடுப்பித்துள்ளான்‌. ஸ்ரீபொன்மலை உடையார்‌ கோயில்‌ திருநடைமாளிகையில்‌ இவ்வூரைச்‌ சார்ந்த குரவசேரி சோமிதேவ பட்டன்‌ ஆட்கொண்டான்‌ என்றழைக்கப்படும்‌ தொண்டைமண்டலத்துப்‌ பிள்ளை என்பவன்‌ தனது பெயரால்‌ “ஆட்கொண்டதேவர்‌ * (சிவலிங்கம்‌) உருவினை எடுப்பித்துள்ளான்‌.

iii

புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து பொன்மலை உடைய நாயனார்‌ கோயிலைச்‌ சார்ந்த பிள்ளையார்‌ முதலிகளில்‌ இளவரசனின்‌ படைத்‌ தலைவன்‌ ஒருவன்‌ தான்‌ எடுப்பித்த துர்க்கை திருமேனிக்குச்‌ சந்திவிளக்கு எரிக்க இக்கோயிலில்‌ காணியுடைய திருஞானசம்பந்தன்‌ என்னும்‌ சிவபிராமணனிடம்‌ மூன்று பசுக்கள்‌ தானமரளித்துள்ளான்‌.

திருவானைக்கோயில்‌

வல்ல நாட்டு நென்மலி ஊரிலுள்ள நஞ்சை புஞ்சை நிலங்கள்‌ சிலவற்றினைச்‌ சேர்த்து “குலோத்துங்கசோழன்‌ திருநீற்றுச்சோழ நல்லூர்‌” என்னும்‌ பெயரிட்டு புதிய ஊர்‌ ஒன்றினை உருவாக்கி திருவாலக்கோயில்‌ மகாதேவர்‌ கோயில்‌ இறைவன்‌ வழிபாட்டுக்காக மன்னன்‌ குலோத்துங்கன்‌ வழங்கிய நேரடி ஆணையாகும்‌. இக்கோட்டத்து உழலூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊரின்‌ புற ஊரான அரும்பாக்கம்‌ ஊரின்‌ நிலங்களிலிருந்து குறிப்பிட்ட நிலங்களைப்‌ பிரித்து அநபாயநல்லூர்‌” என்று மன்னன்‌ தனது பெயரினைச்‌ சூட்டி கோயிலுக்குத்‌ தானமளித்துள்ளான்‌.

காளாமுகன்‌ கோமடத்தைச்‌ சார்ந்த ஞானராசி பண்டிதன்‌, சயிலராசி பண்டிதன்‌ ஆகியோர்‌ பற்றிய குறிப்புகள்‌ இவ்வூர்‌ கல்வெட்டுகளில்‌ காணப்படுகின்றன. வெண்குன்றக்‌ கோட்டத்து குவளை என்னும்‌ ஊரைச்‌ சார்ந்த பாரசிவன்‌ தழுவக்குழைந்தான்‌ ஆளுடையான்‌ என்பவன்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ ஊரில்‌ உள்ள திருவாலக்‌ கோயிலுடைய மகாதேவர்‌ கோயிலில்‌ வைத்த சந்தி விளக்கினை இக்கோயில்‌ காளாமுகன்‌ மடத்தைச்‌ சார்ந்த ஞானராசி பண்டிதன்‌, சயிலராசி பண்டிதன்‌ ஆகிய இருவரும்‌ இவ்விளக்கினை எரிப்பதாகப்‌ பொறுப்பேற்றுள்ளனர்‌.

ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டுக்‌ களத்தூர்‌ திருவாலக்கோயிலுடைய நாயனார்‌ கோயிலுக்கு வடக்கே உள்ள திருமலையில்‌ இரவு நேரத்தில்‌ விளக்கு எரிக்கவும்‌, இதற்கு தினம்‌ மூன்று நாழி எண்ணெய்‌ குடுக்கவும்‌, மலை மேல்‌ எண்ணெய்‌ இட்டு விளக்கெரிக்கின்ற நபருக்குக்‌ தினக்கூலியாக குறுணி நெல்லும்‌ வழங்கிடவும்‌, கரிகாலசோழத்‌ தமிழதரையன்‌ என்பவன்‌ 56 குழி நிலம்‌ தானமாக வழங்கியுள்ளான்‌.

திருநீர்மலை

திருநீர்மலை சிங்கப்பெருமாள்‌ இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச்‌ சார்ந்த வாணியன்‌ ஆயிரவண்ணன்‌ ஆள்கொண்ட வில்லி எனும்‌ திருக்கச்சிநம்பி தாசன்‌ என்பவன்‌ ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான்‌. பூவிருந்தமல்லி நகரத்தைச்‌ சார்ந்த வாணியன்‌ ஒருவன்‌ திருநீர்மலை நாயனார்‌ நீர்வண்ணனுக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளான்‌.

ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டத்து கோவூர்‌ என்கிற உலகமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன்‌ அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத்‌ திருநீர்லை திருமலையில்‌ உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும்‌, மலை அடிவாரத்தில்‌ உள்ள கருவண்ணமேனி எம்பெருமானுக்கும்‌ தேவையான வழிபாட்டுச்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

iv

அணைக்கரைச்சேரி என்கிற சோழகங்கதேவ நல்லூர்‌ ஊரைச்‌ சார்ந்த பஞ்சநதிவாண நீலகங்கரையன்‌ நல்லநாயன்‌ என்றழைக்கப்பட்ட சோழகங்கதேவன்‌ என்பவன்‌ பம்மல்‌ நக்க நாயனார்க்‌ கோயிலுக்கு 10 வேலி நிலத்தினைத்‌ தேவதானமாக வழங்கியுள்ளான்‌. மதுராந்தகப்‌ பொத்தப்பிச்‌ சோழன்‌ கண்டகோபாலன்‌ என்பவன்‌ திருநீர்மலை எம்பெருமானுக்கு “திருவாழிபரப்பினான்‌ சந்தி?யின்போது அமுதுபடி, சாத்துபடி, திருநந்தாவிளக்கு ஆகியவற்றிற்‌ காகப்‌ பத்து வேலி நிலம்‌ தானம்‌ அளித்துள்ளான்‌. பம்மல்‌

பம்மல்‌ ஊரில்‌ இருக்கும்‌ வியாபாரி குன்றமுடையான்‌ மெய்ஞ்ஞான வித்தகன்‌ திருவெண்காடுடையான்‌ என்பவன்‌ பம்மனக்கர்‌ நாயனார்‌ வழிபாட்டிற்காகவும்‌, திருப்பங்குனி, திருவைகாசி ஆகிய திருநாள்களில்‌ வழிபாட்டுச்‌ செலவினங்‌ களுக்காகவும்‌ கோயில்‌ தானத்தாரிடம்‌ தானம்‌ வழங்கியுள்ளான்‌.

வீரராஜேந்திர சோழன்‌ என்ற பட்டப்‌ பெயர்‌ கொண்ட மூன்றாம்‌ குலோத்துங்கசோழ தேவனுடைய 35ஆவது ஆட்சியாண்டில்‌ ஜஐயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டுத்‌ தாம்புரமான குணசீல நல்லூரில்‌ இருந்த நிலங்களில்‌ சிலவற்றினை திருவிடையாட்டமாக பம்மல்‌ அழகப்பெருமாள்‌ கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரிசூலம்‌

சோழ மன்னன்‌ முதலாம்‌ குலோத்துங்கன்‌ சுங்க வரியினை நீக்கினான்‌ என்பது வரலாற்றுச்‌ செய்தியாகும்‌. தமிழகத்தில்‌ கிடைக்கப்‌ பெற்ற கல்வெட்டுகளில்‌ 'சுங்கந்‌ தவிர்த்த குலோத்துங்க சோழன்‌' என்று குறிப்பிடும்‌ கல்வெட்டு இது ஒன்றே ஆகும்‌. சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழன்‌ திருச்சுரம்‌ உடைய நாயனார்‌ கோயில்‌ பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாசாரியர்‌, தேவகன்மி, ஸ்ரீமாகேசுவரக்‌ கண்காணி, கோயிற்‌ கணக்கன்‌ ஆகியோருக்கு அரசாணை ஒன்று அனுப்பியுள்ளான்‌. திருச்சுரமுடைய நாயநார்‌ கோயிலில்‌ திருவைகாசித்‌ திருநாளன்று திருவெழுச்சிப்படிக்காக முந்நலூர்‌ ஊரிலுள்ள நீர்நிலம்‌ முப்பது வேலியும்‌, கொல்லை நிலம்‌ பதினொரு வேலியும்‌ சேர்த்து “திருநீற்றுச்சோழ நல்லூர்‌” என்னும்‌ பெயரிட்டு புதிய ஊரினை உருவாக்கி இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர்‌

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில்‌ காணப்படும்‌ இக்கல்வெட்டு மாங்காடு ஊரைச்‌ சார்ந்தது. மாங்காட்டில்‌ இருந்த “திருவராந்தானம்‌” எனப்பட்ட சமணப்பள்ளிக்கு திருவமுதுக்காக வேண்டி ஆர்க்காட்டுக்‌ கூற்றத்து பரிசை ஊர்த்‌ தலைவன்‌ அம்நிலையார்‌ என்பாரின்‌ மகளும்‌ சமணப்பள்ளியின்‌ ஆசிரியர்‌ அனந்த வீரக்குரவரின்‌ மாணக்கியருமான அடிகள்‌ என்பவள்‌ அறுபது காடி நெல்‌ அளித்துள்ளாள்‌. மேலும்‌, முப்பது பலம்‌ எடை கொண்ட தட்டு ஒன்றும்‌ வழங்கியுள்ளாள்‌.

பள்ளிக்கரணை

பள்ளியாகாரணையில்‌ குடியிருக்கும்‌ குடிகளுக்கும்‌, காசாக வரி செலுத்தும்‌ குடிகளுக்கும்‌ மாதம்‌ ஒன்றுக்கு ஒன்றே கால்‌ வசூலித்து, பார்வதீஸ்வரமுடையார்‌ கோயிலுக்கும்‌ வீராத்தாள்‌ கோயிலுக்கும்‌ பாதிப்பாதியாக பிரித்துக்‌ கொண்டு, இக்கோயில்களின்‌ திருப்பணிகளுக்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்‌, திருபாணப்‌ பெருமாள்‌ கோயிலுக்கும்‌ தானம்‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி

புலியூர்க்‌ கோட்டத்து வெளிச்சேரி சபையார்‌ இவ்வூரிலுள்ள காளா பிடாரி இறைவிக்கு ஒரு நந்தா விளக்குக்கும்‌ திருஅமுதுக்கும்‌ வேண்டிப்‌ பயிரிடப்படாத நிலம்‌ (மஞ்சிக்கம்‌) ஒன்றினைக்‌ கொடுத்துள்ளனர்‌. சோழநாட்டு மழநாட்டுப்‌ பிரிவில்‌ உள்ள திருவேட்பூர்‌ என்ற ஊரைச்‌ சார்ந்த திருவேட்ப்பூர்‌ உடையான்‌ தேவடிகள்‌ என்பான்‌, புலியூர்‌ கோட்டத்து வெளிச்சேரியில்‌ உள்ள சப்தமாதர்கள்‌ (ஏழு கன்னிகையர்‌) வழிபாட்டிற்கு வேண்டி, இவ்வூர்‌ மகாசபையாரிடம்‌ விலை கொடுத்து நிலம்‌ ஒன்றினை வாங்கித்‌ தானமளித்துள்ளான்‌.

புலியூர்க்‌ கோட்டத்துக்‌ கோட்டூர்‌ நாட்டு வெளிச்சேரி புறஊர்ப்‌ பகுதியான தரமணியில்‌ உள்ள தரமணி மகாதேவர்‌ கோயில்‌ வழிபாட்டுச்‌ செலவினங்களுக்கும்‌, சந்தி விளக்குகள்‌ வைப்பதற்காகவும்‌, சோழநாட்டு கிழார்‌ கூற்றத்து வைகாவூர்ச்‌ சேரி ஊரைச்‌ சார்ந்த அமுதன்‌ பிச்சன்‌ என்கிற செம்பியன்‌ கீழானாட்டுக்‌ கோன்‌ என்பவன்‌ தரமணியிலிருந்த நிலம்‌ ஒன்றினை வாங்கிக்‌ கோயிலுக்குத்‌ தானமளித்துள்ளான்‌.

வெளிச்சேரியைச்‌ சார்ந்த பத்தங்கி தேவநாத பட்டன்‌ என்பானின்‌ மனைவி நங்கைச்‌ சானி என்பவள்‌ சிங்கப்பெருமாள்‌ என்னும்‌ கோயிலைக்‌ கட்டியுள்ளாள்‌. இக்கோயிலைக்‌ கட்டிய தச்சருக்கு மூலதனமாக இவள்‌ வழங்கிய தோட்ட நிலத்தினை ஆராவழுது பட்டன்‌ என்பவனிடம்‌ விற்று இருபது பழங்காசுகள்‌ பெற்றுத்‌ தச்சுப்பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர்‌ ஊரிலிருந்த திருநாவுக்கரைசர்‌ மடத்தினை நிர்வகிப்பதற்காக வெளச்சேரி எனும்‌ ஜினசிந்தாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்தில்‌ இருந்து 10 வேலி நிலத்தினை சேதிராய தேவர்‌ என்பவர்‌ வழங்கியுள்ளார்‌.

இவ்வூர்களிலுள்ள கல்வெட்டுகள்‌ அக்கால அரசியல்‌ வரலாறு, பொருளாதாரம்‌ மற்றும்‌ சமுதாயச்‌ செய்திகளை வெளிக்காட்டும்‌ காலக்‌ கண்ணாடியாக திகழ்கின்றன.

இரா. சிவானந்தம்‌

உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர்‌

த.நா.௫. ஒதால்லியல்‌ துறை தர்‌ எண்‌: 639,017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு

வட்டம்‌ காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1241

ஊர்‌ பெருநகர்‌ இ.க.ஆ.அறிக்கை : 48/1898

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : கன V1./331 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ 1

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ மேற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக்‌ கோட்டத்துப்‌

பெருநகர்‌ நாட்டுப்‌ பெருநகர்‌ ஆளுடையார்‌ பிரமீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌, இம்மண்டலத்து எயிற்‌ கோட்டத்து மாகறல்‌ நாட்டு மாகறல்‌ ஊரைச்‌ சார்ந்த பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தேவப்பெருமாள்‌ என்பவன்‌ நான்கு சந்திவிளக்குகள்‌ எரிக்க 4 கழஞ்சுப்‌ பொன்னினை, இக்கோயில்‌ சிவபிராமணர்களிடம்‌ வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ திருபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ செவர்க்கு யாண்டு ௨௰ரு வது ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக்‌ கோட்டத்துப்‌ பெருநகர்‌ நா-

2. ட்டுப்‌ பெருநகர்‌ ஆளுடையார்‌ பிரமீமுமமுடைய நாயனார்க்கு இம்மண்டலத்து எயிற்‌ கோட்டத்து மாகறல்‌ நாட்டு மாகறல்‌ பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தே-

3. வப்‌ பெருமாள்‌ வைத்த சந்திவிளக்கு நாலுக்கு இவர்‌ பக்கல்‌ இக்கோயில்‌ மமிவவம்மணரோம்‌ உபையத்துக்கு கைக்கொண்ட) செம்பொன்‌ இப்பொன்‌ நா-

4. ற்‌ கழஞ்சுக்கும்‌ இந்த சந்திவிளக்கு நாலும்‌ சந்திராதித்தவரை(£) விளக்கு எரிக்கக்‌ கடவோமாக உபையம்‌ கைக்கொண்டோம்‌ இக்கோயில்‌ மிவஷாம்மணரோம்‌ இது

5. பன்மாஹேறா ஈகை :- இப்படிக்கு இவை செவர்கன்மி திருவேகம்ப பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை செவர்கந்மி திருச்சிற்றம்பலமுடையான்‌ எழுத்து இப்படிக்கு இ-

6. வை ஜெவர்கந்மி நாற்பத்தெண்ணாயிர பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை செவர்கந்மி திருச்சிற்றம்பல நாட்டுப்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை ஜெவர்கன்மி பெரியநம்பி பட்ட-

7. ன்‌ பிரமீழரமுடையான்‌ எழுத்து

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧40/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 25

வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1241 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 351/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கல்‌ எனும்‌ விக்கிரமாபரணச்‌ சதுர்வேதிமங்கலத்து சபையினர்‌ இவ்வூரின்‌ வடபிடாகை கிராமமான மதகன்மேடு என்னும்‌ ஊரும்‌, இவ்வூரிலுள்ள நீர்நிலம்‌, கொல்லைநிலம்‌, நத்தம்‌, மனை, மனைபடைப்பை உட்பட அனைத்தையும்‌ எயிற்கோட்டத்து மாகறல்‌ நாட்டு மாகறல்‌ ஊரைச்சார்ந்த பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தேவப்பெருமாள்‌ என்பவனிடம்‌ 180 கண்டகோபாலன்‌ மாடை பொன்னினைப்‌ பெற்றுக்‌ கொண்டு விற்றுக்கொடுத்துள்ளனர்‌. இந்த ஆவணத்தில்‌ உக்கல்‌ சபையைச்‌ சார்ந்த 96 நபர்கள்‌ கையெழுத்திட்டுள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹஹிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாகத்‌ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீசாஜமாஜ தேவர்க்கு யாண்டு ௨௰ர வது கும்ப நாயற்று அமர பக்ஷத்து தி, தியையும்‌ வியாழக்கிழமையும்‌ பெற்ற உத்திரத்து நாள்‌ ஜயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க்‌ கோட்டத்து பாகூர்‌ நாட்டு உக்கலான விக்கிரமாபரணச்‌ சதுவே-திமங்கலத்து மமாஸலெயோம்‌ இம்மண்டலத்து எயிற்‌ கோட்டத்து மாகறல்‌ நாட்டு மாகறல்‌ பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தேவப்‌ பெருமாளுக்கு நாங்கள்‌ எங்கள்‌ கீழ்‌ பிடாகையில்‌ விற்றுக்‌ குடுத்த மதகன்‌ மேட்டுக்கு எங்கள்‌ எழுத்துதிட்ட வ,மாணப்படியே கல்லுவெட்டுவித்துக்‌ குடுத்ததாவது இத்தேவர்க்கு இவ்வாண்டைக்‌ கும்ல நாயற்று அபரபக்ஷத்து ஒமமியும்‌ வியாழக்கி-

2. ழமையும்‌ பெற்ற மூலத்து நாள்‌ ஜஐயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க்‌ கோட்டத்து பாகூர்‌ நாட்டு உக்கலான விக்கிரமாபரணச்‌ சதுவே-திமங்கலத்து மஹாஸலலெயோம்‌ ஊர்விலை வ,மாணக்‌ கைஎழுத்து இம்மண்டலத்து எயிற்‌ கோட்டத்து மாகறல்‌ நாட்டு மாகறல்‌ பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தேவப்‌ பெருமாளுக்கு நாங்கள்‌ விற்கின்ற ஊராவது எங்கள்‌ ஊர்‌ கீழ்‌ பிடாகையில்‌ மதகன்‌ மேடென்று பேருடைய ஊர்க்கு கீழ்பாற்கெல்லை மாத்தூர்‌ பூசந்தை உள்ளிட்டார்‌ எங்கள்‌ பக்கல்‌ கொண்டுடைய வீராணக்குறுச்சி எல்லைக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை செய்யாறு பாதி உட்பட வடக்கும்‌ மேல்பாற்கெல்லை விழல்வாய்‌ எல்லைக்கும்‌ சிறுநல்லூர்‌ எல்லைக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை சோமன்வாய்‌

3. எல்லைக்கும்‌ சன்னைவளாகம்‌ எல்லைக்கும்‌ கிழக்கும்‌ தெற்கும்‌ இந்னாற்பாற்கெல்லை ஊருநடுவுபட்ட நீர்நிலமுங்‌ கொல்லை நிலமும்‌ ஊர்‌ நத்தமும்‌ மனையும்‌ மனைப்படப்பையும்‌ மேல்‌ நோக்கின மரமுங்‌ கீழ்ணோக்கின கிணறும்‌ நீரும்‌ நீர்ப்பாய்ச்சலும்‌ நீர்போக்கும்‌ வழியும்‌ வழிபோக்கும்‌ குளமுங்‌ கரையும்‌ ஆற்றுக்காலிற்‌ அஞ்சிட்டு இருகூறும்‌ இக்கால்‌ ஆடிப்பாயுமிடத்து எங்கள்‌ ஊருக்குப்‌ பாயும்‌ தலைப்பேழை வாய்க்கால்‌ ஆற்றில்‌ திறந்த முகப்புக்கு கிழக்கு ஆடுகால்‌ தோண்டி நீர்ப்பாய்ச்சக்‌ கடவதாகவும்‌ எங்கள்‌ உள்ளூர்‌ ஏரியில்‌ நீர்‌ பண்டாடு பழநடை பாயக்கடவதாகவும்‌ இப்படியே எங்களுக்கு பாய பரிசே உரித்தாவதாகவும்‌ நாங்கள்‌ இவ்வூர்‌ விற்றுக்‌ குடுத்துக்‌ கொள்வதான எம்பிலிசைந்த விலைப்பொருள்‌ அந்றாடு நன்றான கண்டகோபால-

4. ன்‌ புதுமாடை ஈஅம இம்மாடை நூற்று எண்பதும்‌ ஆவணக்களியே கிழிகைச்‌ செலவறக்‌ காட்டேற்றிக்‌ கைக்கொண்டு விற்றவிலை வ,மாணம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ மாகறல்‌ பட்டியர்‌ பேரயன்‌ பெருங்கந்‌ தேவப்பெருமாளுக்கு உக்கலான விக்கிரமாபரணச்‌ சதுர்வே-திமங்கலத்து மஹாஸலெயோம்‌ இப்படி இவர்க்கு விற்றுக்குடுத்த இவ்வூர்க்கு எப்பேற்பட்ட கலனும்‌ இல்லை கலனுள்‌ வாய்த்தோற்றில்‌ நாங்களே தீர்ந்து குடுக்கக்‌ கடவோமாகவும்‌ இதுக்கு இதுவே விலையாவதாகவும்‌ இவ்வூர்‌ இவர்க்கு விற்றொற்றி வ, திக்கிரய தாயதானங்களுக்கு உரித்தாவதாகவும்‌ இப்படி சம்மதித்து விற்று விலைய, மாணம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ மாகறல்‌ பட்டியர்‌ பெரியந்‌ பெருங்கந்‌ தேவப்பெருமாளுக்கு உக்கலான விக்கிரமா-

5. பரணச்சதுவேதிமங்கலத்து மஹாஸலெயோம்‌ . . . தினேன்‌ இவ்வூர்‌ . . . போற்றிக்குடிந்‌ உக்கலுடையான்‌ சூர்யதேவனு . . உடையானேன்‌ இவை

4

என்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை வெண்ணைக்‌ கூத்த லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கோட்டுரர்‌ . . போநவில்லி ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவ்வூர்‌ வ,யாகை வரதராச லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்றுக்‌ கோலவராக லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகைத்‌ திருவேங்கட ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து நந்தகோபால லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து வெண்ணைக்‌ கூத்த ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து இரா-

. பிரான்‌ மட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை கேசவ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வயாகை இளைய கேசவ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கிராஞ்சி இராமபிரான்‌ லட்டண்‌ எழுத்து இப்படிக்கு இவை கோட்டூர்‌ கருமாணிக்க லட்டணன்‌ எழுத்து இப்படிக்கு இவை வ,யாகை நாராயண லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை யஐ. புருஷ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று வெண்ணைக்‌ கூத்த மட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வூ,யாகை வெண்ணைக்கூத்த மட்டன்‌ மகந்‌ திருவாய்க்குல ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பை அருளாள லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை பாடகத்து வரதராஜ ட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை பங்கனூர்‌ ஸ்ரீசுஷூ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை சீராம லட்டன்‌ மகன்‌ சிங்கப்பிரான்‌ மட்டன்‌ எழுத்து

. இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து சிங்கப்பிரான்‌ மட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து ஸ்ரீரூஷ ட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை செருப்பள்ளி வெண்‌ . . . லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து சிங்கப்பிரான்‌ ஸட்டன்‌ மகன்‌ அத்தாம லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து னந்தகோபால ஷட்டன்‌ மகன்‌ அத்தாம லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று ௭ஐ புருஷ மட்டன்‌ மகன்‌ ஸ்ரீசுஷூ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று ௭ஐ புருஷ ஹட்டன்‌ மகன்‌ மாதவ லட்டனுக்கும்‌ மாந்தப்பி வரந்தருவானுக்கும்‌ இவை மாதேவ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வ,யாகை ஸ்ரீ[ஆ1ஷஹ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று ௭ஐ புருஷ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை ஒதுமுக்கி[ல்‌] நாராயண பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை

8. கோட்டூர்‌ இராமபிரான்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வ,யாகை

சீராம மட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று புருஷ பட்டன்‌ மகன்‌ சிங்கப்பிரான்‌ [ப]ட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பை நாராயண பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பை மதுரை அலங்கார

. மகன்‌ அதிமுக்தி நாராயணப்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை அனஷ நாராயணப்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை பாடகத்து மூத்த உலோக ஹாக்ஷி பட்டன்‌ இப்படிக்கு இவை கோட்டூர்‌ தேர்பொலிய நின்றான்‌ பட்டனுக்கு இவன்‌ மகன்‌ மனபொன்‌ வில்லி ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை அரணைப்புறத்து ஸ்ரீரூஷ பட்டன்‌ மகன்‌ கேசவன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று வீரநாராயண ஹட்டன்‌ ஸயிஜைக்கு இவை பள்ளிகொண்டான்‌ பட்டன்‌ மகன்‌ வெண்ணைக்கூத்த ஸட்‌-

. டன்‌ எழுத்து இப்படிக்கு இவை அரணைப்புறத்து வெண்ணைக்‌

கூத்தன்பட்டன்‌ ஸயிஜைக்கு இவை வடயாகை நாராயண லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை உ,யாகை நந்தகோபால பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பை கேசவ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று பள்ளிகொண்டாந்‌ பட்டனுக்கும்‌ எனக்கும்‌ வெண்ணைக்கூத்த பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை அண்டத்து காலவராச லட்டண்‌ எழுத்து இப்படிக்கு இவை வ,யாகை எஜாத ஹட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பை தாமோதர லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து ஸ்ரீரூதே லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை மூத்த நாராயண ட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து ஸ்ரீரூஷே லட்டன்‌ எழுத்து மகன்‌ அத்தாம லட்டன்‌

. எழுத்து இப்படிக்கு இவை வ,யாகை சீராம எழுத்து இப்படிக்கு இவை

வடயாகை வெண்ணைக்கூத்த பட்டன்‌ மகன்‌ அருளாள பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை செருப்பார்‌ நாராயண பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை

.. இப்படிக்கு இவை கண்டேறுக்‌ கேசவ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை பங்கநூர்‌ எஜமூர்த்தி பட்டநுக்கும்‌ எனக்கும்‌ இவந்‌ தம்பி மாதவபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை இயக்கி கேசவ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை மதிசூதநப்‌ பட்டன்‌ எழுத்து இப்படி இவை காரம்பிச்சேட்டு அருளாளப்பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை பாடகத்து உலோக ஸாக்ஷி லட்டன்‌ எழுத்து இப்படிக்கு

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 641,202

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 1 5 காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : - பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 353/1923 :. தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 எழுத்து : தமிழ்‌ சம்புவராயன்‌ ஊ.க.எண்‌ : 3 அரசன்‌ : இராசராச சம்புவராயன்‌

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : விசையகண்டகோபால தேவர்‌ தனது 21-ஆவது ஆட்சியாண்டில்‌

இக்கோயில்‌ இறைவனுக்கு வைகாசி விசாகத்‌ திருநாளன்று திருவிழா எடுப்பதற்காக 47 கழஞ்சுப்‌ பொன்‌ அளித்து, அதனின்‌ வாயிலாக வரும்‌ வட்டியைக்‌ கொண்டு நடத்திட வழிவகைச்‌ செய்திருந்தார்‌. இந்த வைகாசி திருநாள்‌ நீண்ட நாட்களாக நடைபெறாமல்‌ இருந்துள்ளது. வீரப்பெருமாள்‌ மகன்‌ ஆளப்பிறந்தான்‌ என்னும்‌ இராசராச சம்புவராயன்‌ என்பவன்‌ இரு தூண்களில்‌ இருந்த பழையக்‌ கல்வெட்டு ஆவணங்களைச்‌ சரிபார்த்த பின்னர்‌ மீண்டும்‌ இத்திருவிழாவினை நடத்திடுவதற்கு 47 கழஞ்சின்‌ வழியாக வரும்‌ ஏழு கழஞ்சு இரண்டு மஞ்சாடி நாலு மா வட்டியினைக்‌ கொண்டு தானத்தார்‌, நியாயத்தார்‌, நியாய முதலிகள்‌ நடத்திட வேண்டுமென இத்தானத்தினைப்‌ புதுப்பித்து ஆணை வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. திருமுகத்துக்குப்‌ படி சம்புவராயன்‌ ஒலை பெருநகர்‌ ஊரவர்‌ கண்டு விடைத்‌ தங்களூர்‌ ஆளுடையார்‌ பிரமீசுரமுடைய நாயனாற்கு ஸ்ரீகோராஜகேசரி படிற்‌ . . . ப்புறமாக தாங்கள்‌ கைக்கொண்‌-

2. பொன்‌ பதினேழு கழஞ்சரையும்‌ வைகாசி விசாகந்‌ தீத்தமாக திருநாள்‌ எழுந்தருளுவிக்க கைக்கொண்ட பொன்‌ முப்பதின்‌ கழஞ்சும்‌ ஆகப்பொன்‌ நாற்பத்‌[தேழு கழஞ்சு]* . . . . கல்வெட்டுப்படியாலுள்ள பொ-

3. லிசைப்‌ பொன்னுக்கு நேராக உபைய நடத்தாதபடியாலே தாங்களுந் தானத்தாரும்‌ நாயனார்‌ விசையகண்ட கோபால தேவற்கு இருபத்தொன்றாவது வைகாசி மாதத்‌ . . . . இக்கல்வெட்டின தூண்‌ இரண்டும்‌

7

4. நாம்‌ அத்தியேற அழைப்பித்துப்‌ பாத்த இடத்து தூண்‌ ஒன்றினால்ப்‌ பொன்‌ முப்பதின்‌ கழஞ்சும்‌ தூண்‌ ஒன்றினால்‌ பொன்‌ பதினேழு கழஞ்சரையும்‌ ஆகப்‌ பொன்‌ நாற்பத்தேழு [கழஞ்சரை]*க்கும்‌ ஆண்டு ஒன்றுக்கு கழஞ்சுக்கு மூன்று மஞ்சாடியால்‌

5. வந்த பலிசைப்‌ பொன்‌ ஏழு கழஞ்சே யிரண்டு மஞ்சாடியே நாலுமாவுக்கும்‌ நேராக உபைய நடத்தி எழுந்தருளுவியுங்கோளென்ன தாங்களெழுந்தருளு விடாதபடியாலே இப்பலிசைப்‌ பொன்‌ ஏழு கழஞ்சே இரண்டு (ம)ஞ்சாடியே நாலுமாவும்‌ ஆண்டு தோறுந்‌ தானத்தார்கு நியாய-

6. த்தார்‌[க்‌]கு நியாயமுதலிகளுக்குமே தாங்கள்‌ குடுக்க இது கொண்டு தானத்தாருந்‌ நியாயத்தாருந்‌ நியாயமுதலிகளும்‌ திருநாளுக்கு வேண்டுவன அழிந்து இத்திருநாள்‌ எழுந்தருளுவிக்கக்‌ கடவர்களாகவுஞ்‌ சொன்னோம்‌ இப்படிக்கு வீரபெருமாள்‌ மகன்‌ ஆளப்பிறந்தான்‌ இரா[ச]ராச சம்புவராயனேன்‌

த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 642௨/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : -

வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13- நூற்‌. ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 46/1898

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ 1/329 எழுத்து தமிழ்‌

அரசு : பிற்காலப்‌ பல்லவர்‌ ஊ.க.எண்‌ : 4

அரசன்‌ : இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌

இடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : அழகிய பல்லவன்‌ கோநந்திபன்மர்‌ நலன்‌ வேண்டி இவ்வூரைச்‌ சார்ந்த வில்லி திருவன்‌ திரிகத்த ராயன்‌ என்பவன்‌ இக்கோயில்‌ (கருவறை) மற்றும்‌ திருமண்டபம்‌ ஆகியவற்றைக்‌ கட்டியுள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹஹிஸ்ரீ அழகிய பல்லவன்‌ கோ னந்தி 2. பன்மர்க்கு நன்றாக இத்திருக்கற்றளியு- 3. ந்‌ திருமண்டபமுஞ்‌ செய்வித்தான்‌ 4. இவ்வூர்‌ வில்லி திருவன்‌ திரிகத்த ராயன்‌

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌: 643/2017

மாவட்டம்‌ காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 7

வட்டம்‌ காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13 - நூற்‌.

ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 354/1923

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தது

எழுத்து கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 5

அரசன்‌ சுந்தரபாண்டியன்‌

கடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌

குறிப்புரை சேதி மண்டலத்தைச்‌ சேர்ந்த வாணவதரையன்‌ என்பவன்‌ மன்னன்‌ சுந்தர பாண்டியனின்‌ நலனுக்காக பிரமீசுவரமுடைய மகாதேவர்‌ கோயிலுக்குத்‌ தேவதானமாக 2 வேலி நிலம்‌ தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு

1. ஷஹிஸ்ரீ தி, வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ கோநேரின்‌-

2. மைகொண்ட சுந்தரபாண்டிய தேவற்கு நன்றாக

3. ஏழாவது சேதி மண்டலத்துச்‌ சேகண்டி ஆண்டி ஆன

4. (வாண)வாணவதரையனேன்‌ வ, ஷீராறமுடைய 8ஹா-

5. ரெவற்கு அமுதுபடிக்கு கிணறு மாவிலே தலைவரிசையிே

6. கண்டஞ்சேரி இரண்டு வேலி நிலம்‌ பொன்வரி அனைத்தா-

7. யங்களும்‌ உட்பட தேவதானமாக விட்டோம்‌ இத்தன்மஞ்‌ சந்திரா-

8. தித்தவரை செல்வதாகவு[ம்‌] விலக்குவார்‌ கெங்கை இடைக்‌ குமரி

9. இடை செரய்‌]தார்‌ செ[ய்‌]த பாவங்கொள்வார்‌.

10

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 644/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 441

வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - நூற்‌. ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 47/1898

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ.//330 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 6

அரசன்‌ : கோஇரவிவன்மர்‌ திரிபுவன ஸ்ரீவீரபாண்டிய தேவர்‌

இம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக்‌ கோட்டத்து பெருநகர்‌ நாட்டுப்‌ பிரிவு பெருநகர்‌ ஊரில்‌ உள்ள ஆளுடையார்‌ பிரமீசுவரமுடைய ' நாயனார்‌ கோயிலில்‌ இவ்வூரைச்‌ சார்ந்த காழி காக்கு நாயகன்‌ என்பவன்‌ எடுப்பித்துள்ள “முதலியார்‌ காக்கு நாயகர்‌” என்னும்‌ இறைவனுக்கு காக்கு நாயகன்‌ விசையன்‌ செம்பியதரையன்‌ என்பான்‌ ஆறு சந்தி விளக்குகள்‌ வைத்துள்ளான்‌. முன்னாளில்‌ சேத்துப்பட்டு என்னும்‌ ஊரில்‌ திருநந்தா விளக்குபட்டியாக இருந்த நிலத்தினை அடைமானம்‌ வைத்து வாங்கின 40 பணம்‌ மற்றும்‌ இதனின்‌ வட்டியால்‌ வந்த பணம்‌ உட்பட 60 பணத்தினைக்‌ கொண்டு இந்த ஆறு விளக்குகள்‌ எரிப்பதாக இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ உடன்பட்டுள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹஹிஸ்ரீ கோஇரவிவன்மர்‌(தி)ரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு வதுக்கு

2. எதிராம்‌ ஆண்டு ஜயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்றக்‌ கோட்டத்து பெருநகர்‌

3. நாட்டு பெருநகர்‌ ஆளுடையார்‌ வ,ஹீ முடைய நாயனார்‌ மயிலில்‌ இவ்வூர்‌ இருப்பை பாக்கிழான்‌

4. காழி காக்கு நாயகன்‌ ஏறி அருளப்பண்ணின முதலியார்‌ காக்கு நாயகர்க்கு காக்கு நாயகன்‌ விசையன்‌

11

a

. செம்பியதரையன்‌ வைத்த சந்தி விளக்கு ஆறு இவ்விளக்கு ஆறுக்கும்‌

இக்கோயில்‌ மமிவஷ;ாஹணரோம்‌

. முன்னாள்‌ சேற்றுப்பட்டில்‌ திரிநுந்தா விளக்குப்பட்டியாக

நாற்பத்தெண்ணாயிரவன்‌ ஒற்றியாக வைத்து வா-

. ங்கின பணம்‌ நாற்பதுக்குப்‌ பலிசையேற்றிப்‌ பணம்‌ அறுபதும்‌ உபயம்‌ ஆகக்‌

கைக்கொண்டு இவ்விளக்கு ஆறும்‌

அஞ ாகித்தவரை இடக்கடவோம்‌ இக்கோயில்‌ மிவவாாஹணரோம்‌ இது பன்மாஹெறாற ஈணெெ

12

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 645/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு :

வட்டம்‌ காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : -

ஊர்‌ பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 352/1923 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு து எழுத்து தமிழ்‌

அரசு சம்புவராயர்‌ ஊ.க.எண்‌ டீ அரசன்‌

இடம்‌ பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு ஜகதி.

குறிப்புரை : பெருநகர்‌ பிரமீசுரம்‌ உடைய நாயனார்‌ கோயில்‌ திருமடைவளாகத்தில்‌

குடியிருக்கும்‌ கைக்கோளர்கள்‌ அரசுக்கு செலுத்தி வரும்‌ தறிக்கடமை, வாசல்வரி ஆகிய வரிகளையும்‌ மற்றும்‌ பல தொழில்‌ செய்பவர்களிடம்‌ வசூலிக்கப்படும்‌ வரிகளையும்‌ சர்வமான்னியமாக அளித்து, இக்கோயிலில்‌ நடைபெறும்‌ பங்குனித்‌ திருநாள்‌, திருப்பரிவட்டம்‌ திருப்பணி ஆகியவற்றிற்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள இக்கோயில்‌ நிர்வாகிகளுக்கு சம்புவராயன்‌ ஆணையிட்டுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ சம்புவராயன்‌ ஓலை சளுக்கிப்‌ பற்றுப்‌ பெருநகர்‌ உடையார்‌

2. பிரமீசுரம்‌ உடைய நாயனார்‌ கோயில்‌ தானத்தார்‌ கண்டு தங்கள்‌ நாயனார்‌

3. திருமடைவிளாகம்‌ ஐஞ்சாவது வைகாசி மாத முதல்‌ கைக்கோளர்‌ பேரால்‌ தறி- 4. க்கடமை வாசல்வரி மற்றும்‌ புறக்கலனை குடிமக்கள்பேறு கடமை வாசல்வரி

5. இப்பற்றில்‌ கொள்ளும்‌ பல உபாதிகளும்‌ உட்பட இன்னாயநார்க்குப்‌ பங்குனித்‌ திருநாளுக்கு-

6. ம்‌ திருப்பரிவட்டத்துக்கும்‌ திருப்பணிக்கும்‌ ஷவ-மான்னியமாகச்‌ சந்திராதித்தவரை-

7. யும்‌ செல்லக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்கொள்ளும்படி சொன்னோம்‌

8. இப்படி செய்வதே

13

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧46/2017

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1304 காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1382 பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 350/1923

தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 8

ஸ்ரீவீர அரியண உடையார்‌ (இரண்டாம்‌ அரிகரர்‌)

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு மற்றும்‌ மேற்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

ஜெயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கல்‌ எனும்‌ விக்ரமாபரணச்சதுர்வேதி மங்கலத்துச்‌ சபையார்‌ இவ்வூரின்‌ வடபிடாகை (புறஊர்‌) ஊர்களான ஏழாயிரச்சேரி, திருப்புலித்தாங்கல்‌ ஆகிய இரண்டு ஊர்களின்‌ மூன்றில்‌ இரண்டு பங்கினை சகம்‌ 1303- ஆம்‌ ஆண்டில்‌ (கி.பி. 1381) முட்டைப்புறம்‌ ஊரைச்‌ சார்ந்த சீராம பட்டன்‌ என்பவனுக்கு 400 பணம்‌ பெற்றுக்‌ கொண்டு விற்பனை செய்து கொடுத்துள்ளனர்‌. முட்டைப்புறத்தைச்‌ சார்ந்த சீராம பட்டன்‌ தான்‌ வாங்கிய மேற்படி பங்கினை சகம்‌ 1304 (கி.பி. 1382)ஆம்‌ ஆண்டில்‌ ஊற்றுக் காட்டுக்‌ கோட்டத்துத்‌ தமனூர்‌ நாட்டு வேலூர்‌ என்கிற இராஜேந்திரசோழ நல்லூர்‌ ஊரினனான சாத்தன்‌ சேனாபதிப்பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனிடம்‌ 500 பணம்‌ பெற்றுக்‌ கொண்டு விற்றுக்‌ கொடுத்துள்ளான்‌.

1. ஷஹி ஸ்ரீ; ஹாமண்டலீமுறற அரி[ய]*ராய விபாடன்‌ பாஷெஷக்குத்‌ தப்புமராயர்‌ கண்டன்‌ மூவராயர்‌ கண்டன்‌ பூவ தக்ஷிண பச்சிம ஸமுத்திராதிபதி ஸ்ரீவீர அரியண உடையார்‌ வூ, கிவிராச்சியம்‌ பண்ணியருளா நின்ற காலத்தில்‌ செல்லா நின்ற சகாத்தம்‌ ஆயிரத்து முன்னூற்றில்‌ நாலின்‌ மேல்‌ உத்தமான ௨”ஈ"லி ஸஃவகஸறத்து கும்ப நாயற்று அமரபக்ஷத்து சனிக்கிழமையும்‌ அ,யொமமரியும்‌ பெற்ற உத்திராடத்து நாள்‌ ஜயங்கொண்ட [சோழ மண்‌]டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து தமனூர்‌ நாட்டு வேலூரான இராசேந்திரசோழ நல்லூர்க்‌ குமரன்‌ சாத்தன்‌

14

2. சேனாபதிப்‌ பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனுக்கு காலியூர்க்‌ கோட்டத்தில்‌ பாகூர்‌ நாட்டு உக்கலான விக, மாபரணச்‌ சதுவேதி மங்கலத்து ஸெயாரில்‌ முட்டைபுறத்துச்‌ சீராம பட்டனேன்‌ எங்கள்‌ வடபிடாகை ஏழாயிரச்சேரியும்‌ திருப்புலித்தாங்கலும்‌ உக்கலில்‌ சபையார்‌ பக்கலிலே மூன்றில்‌ இரண்டு நான்‌ பிறமாணம்‌ பண்ணிக்‌ கொண்டு இப்பிறமாணம்படி மூன்றில்‌ இரண்டு விற்றுத்‌ திரிவிட்டுக்‌ குடுக்கையில்‌ இந்தப்படி பிறமாணத்துக்கும்‌ இந்தத்‌ திரிவிட்டுக்கும்‌ கல்லுவெட்டிக்‌ குடுத்த பரிசாவது இந்த அரியண உடையாற்கு செல்லா நின்ற சகாவூ ஆயிரத்து முன்னூற்று மூன்றின்‌ மேல்‌ துன்மதி வருஷத்து கன்னி

3. நாயற்று உ௫வ*வக்ஷத்து தசிதிகையும்‌ வெள்ளிக்கிழமையும்‌ பெற்ற ரேவதி நாள்‌ ஜெயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ காலியூர்‌ கோட்டத்து பாகூர்‌ நாட்டு உக்கலான விகூ,காலரணச்‌ சதுறுவேதி மங்கலத்து 2ஹராஸலெயோம்‌ காணிவிலை வ,2ஃணக்‌ கச்சாத்து இவ்வூர்‌ முட்டைப்புறத்து சீராம பட்டனுக்கு நாங்கள்‌ விற்கின்ற ஊர்கள்‌ ஆவது எங்கள்‌ வடபிடாகையில்‌ ஏழாயிரச்சேரி திருப்புலித்தாங்கல்‌ என்று பெயருடைய ஊர்களுக்குக்‌ கீழ்பாற்க்கெல்லை சிற்றிலைப்பாக்கம்‌ அச்சாணிபாலை எல்‌[லை]க்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை புன்னை எல்‌[லை]க்கும்‌ அகரம்‌ பாகூர்‌ எல்லைக்கும்‌ மேல்பாற்கெல்லை பாகூர்‌ எல்லைக்கும்‌

4. இட்டிகைப்பட்டு எல்லைக்கும்‌ சோதியம்பாக்கத்து எல்லைக்கும்‌ பாதிரித்தாங்கல்‌ எல்லைக்கும்‌ கிழக்கும்‌ வடபாற்க்கெல்லை எங்கள்‌ செப்பேட்டுப்படியே இதற்க்கும்‌ இந்த நான்கு எல்லைக்கும்‌ உட்பட்ட ஊர்‌ இரண்டும்‌ நத்தமும்‌ நத்தக்குறையும்‌ நஞ்சை நிலமும்‌ புஞ்சை நிலமும்‌ ஏரியும்‌ ஏரிவாய்‌ புறவடையும்‌ மற்றும்‌ உள்ள சகல ஸமுதாயங்களும்‌ உடும்பு ஓடி ஆமை நகந்த இடம்‌ உட்பட மூன்றில்‌ ஒன்று நீக்கி மூன்றில்‌ இரண்டும்‌ இவனுக்கு விற்றுக்‌ குடுத்துக்‌ கொள்வதா(ன)[க]* எம்மில்‌ இசைந்த விலைப்பொருள்‌ அன்றாடு வழங்கும்‌ வாசிபடாத வராகன்‌ குளிகை பூ ௪௱ இப்பணம்‌ நானுறும்‌ விலை பொருளறக்‌ கொண்டு

5. விற்று விலைப்பிராமணம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ முட்டைப்புறத்து சீராம பட்டனுக்கு உக்கல்‌ ஆன வி௯,சால£ணச்‌ சதுறுவேதிமங்கலத்து ஊஹாஸ்ஹெெடக இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த ஊர்களில்‌ பங்கு மூன்றில்‌ இரண்டுக்கும்‌ எப்பேற்ப்பட்ட கலனும்‌ இல்லை கலனுள்‌ வாய்த்தோற்றுப்படில்‌ நாங்களே தீர்த்து குடுக்கக்‌ கடவோம்‌ ஆகவும்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த

15

~

௦௦

ஊர்‌ உல்‌ பங்கு ௩ல்‌ உக்கும்‌ இதுவே வாணம்‌ ஆவது ஆகவும்‌ இதுக்கு இதுவல்லது வேறுபொருள்‌ மாவறுதிப்‌ பொருட்ச்செலஓலை காட்டு என்னப்‌ பெறதாகவும்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த ஊர்‌ ௨ல்‌ பங்கு ௩ல்‌ உக்கும்‌ நீரும்‌ நீர்போக்கும்‌ வழியும்‌

. வழிபோக்கும்‌ மரமும்‌ கிணறும்‌ நாங்கள்‌ உடைய பரிசே உரித்தாவது ஆகவும்‌

இப்படி விற்றுக்‌ குடுத்த இவ்வூர்களில்‌ பங்கு மூன்றில்‌ இரண்டும்‌ இவனுக்கு விற்று ஒற்றி வ, திகெ,ய தாயதானங்களுக்கும்‌ உரித்தாவது ஆகவும்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த வ,சாணத்துக்கு ஓலைகுற்றம்‌ எழுத்துப்பிழை வாசகப்பழுது வாட்டேறு என்று சொல்லப்‌ பெறாது ஆகவும்‌ இருக்கால்‌ ஆவது முக்கால்‌ ஆவது இப்பணம்‌ நானூற்றுக்கும்‌ இந்த ஏழாயிரச்சேரி திருப்புலித்தாங்கல்‌ ஊர்‌ இரண்டினால்‌ பங்கு மூன்றில்‌ இரண்டும்‌ விலைக்குற விற்றுப்‌ பொருளறக்‌ கைக்கொண்டு விற்றுவிலை வ,எணம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ முட்டைப்புறத்து சீராமபட்டனுக்கு

. உக்கலான விக்கிரமாபரண சதுறுவேதிமங்கலத்து மஹாஸஸெஒம்‌ பணிய

இந்தப்பிறமாணம்‌ எழுதினமைக்கு உக்கல்‌ உடையான்‌ கம்பாண்டை ஆனை மேலழகியான்‌ எழுத்து இப்படிக்கு இவை ஓதுமுக்கில்‌ நாராயண லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்று யஜநாராயண பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முட்டைப்புறத்து மாதவபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முடும்பைத்‌ திருவரங்க நாரயண லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வடயாகை வீரநாராயண லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை முட்டைப்புறத்து இளையபிரான்‌ லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வரதராச லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை வ.,யாகை ஆண்டபிரான்‌

. ஹட்டன்‌ எழுத்து இப்படி இவை வங்கிபுறத்து இராமபிரான்‌ லட்டன்‌ எழுத்து

இப்படிக்கு இவை கோட்டூர்‌ அத்தாமபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை இவ்வூர்‌ வரதராசபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை கண்டேற்றுக்‌ கேசுவபட்டன்‌ எழுத்து இந்த அரியண உடையார்க்கு துந்துமி வருஷம்‌ தை மாதம்‌ இருபத்து ஐஞ்சாந்‌ தியதி ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துத்‌ தமனூர்‌ நாட்டு வேலூரான இராசேந்திரசோழ நல்லூர்க்‌ குமரஞ்‌ சாத்தன்‌ சேனாபதி பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனுக்கு காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கலான விக சாலறணச்‌ சதுவே-மிசங்கலத்து முட்டைப்புறத்துச்‌ சீராம வட்டனேன்‌ காணிவிலை ௨. சாணம்‌ விற்றுக்‌ குடுத்த பரிசாவது நான்‌ உக்கல்‌

9.

10.

ம.

12.

ஸலையார்‌ பக்கல்‌ சமுதாயத்தில்‌ கோட்டையேனான வடபிடாகை ஏழாயிரச்‌ சேரியும்‌ திருப்புலித்தாங்கலும்‌ ஆக இவ்வூர்‌ இரண்டு இவ்வூரிரண்டிலும்‌ ஒதுமுக்கில்‌ நாராயண லட்டன்‌ இந்தச்‌ சபையார்‌ பக்கல்‌ கொண்ட சாதனப்படி மூன்றில்‌ ஒன்று நீக்கி என்னுது ஆன பங்கு மூன்றில்‌ இரண்டுக்கும்‌ நான்‌ கொண்ட சாதனப்படி (ர ௪௱ இப்பணம்‌ நானூற்றுக்கும்‌ இற்றைநாள்‌ இவர்க்கு இவ்வூர்களில்‌ என்‌ பங்கு இருகூறும்‌ விலையாக விற்றுப்‌ பற்றின (ர ௬௱ இப்பணம்‌ அஞ்னுறும்‌ உக்கலில்‌ வரந்தருவான்‌ ஆயிரத்து இருநூற்றுத்‌ தட்டான்‌ மகன்‌ வடுகநாதன்‌ பார்வையாகப்‌ பற்றிக்‌ கொண்டு காணி விலை வ,அணச திரிவிட்டுக்‌ குடுத்தேன்‌ நான்‌ திரிவிட்டுக்‌ குடுத்த

தெற்கு எப்பேற்பட்ட கலனும்‌ இல்லை கலனுள்‌ வாய்தோற்றுப்படில்‌ யானே தீர்ந்து குடுக்கக்கடவேன்‌ ஆகவும்‌ இச்சாதனப்படியே இவற்கும்‌ விற்று ஒற்றி பிரதிக்கிறைய சாசனங்களுக்கும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட ஸ-௯ஓவ.டா.தி களுக்கும்‌ உரித்து ஆவது ஆகவும்‌ இப்படி சம்மதித்து இஷ,ாணந்‌ திரிவிட்டுக்‌ குடுத்தேன்‌ ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துத்‌ த[ம]னூர்‌ நாட்டு வேலூரான இராசேந்திரசோழ நல்லூக்‌ குமரந்‌ சாத்தன்‌ சேனாவதிப்பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயர்க்கு காலியூர்க்‌ கோட்டத்து பாகூர்‌ நாட்டு உக்கலான விக, 2ாலறணச்‌ சதுவே-திமங்கலத்து முட்டைபுறத்துச்‌ சீராம லட்டனேன்‌ இப்படிக்கு இவை முட்டைபுறத்துச்‌ சீராமமட்டனேன்‌ எழுத்து

. இப்படி அறிவேன்‌ ஒஓதுமுக்கில்‌ நாராயண லட்டனேன்‌ இப்படி இவை

முட்டைப்புறத்து இராமபிரான்‌ பட்டன்‌ எழுத்து நாகதேவன்‌ பல்லவராயர்க்கு இவ._சாணம்மாக சம்மதிக்க அருளிச்‌ செயற்படிக்கு திரிவிட்டு குடுத்தமைக்கு உக்கலுடையான்‌ மகாசனப்பிரியன்‌ வாழவந்தான்‌ எழுத்து இப்படி அறிவேந்‌ மாதவ லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ . . . பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ பற்பநாத பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ வடயாகை ஆண்டபிரான்‌ பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ வடயாகை வரதராச வட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ வீரநாராயண லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ கண்டேற்று இயக்கன்‌ நாராயண லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌

கண்டேற்றுக்‌ கேசவபட்டனேன்‌ இந்த திரிவிட்டினபடி பணம்‌ அஞ்னூறும்‌ பாத்துக்‌ குடுத்தமைக்கு உக்கல்‌ ஆயிரத்து இருநூற்றுத்‌ தட்டான்‌ மகன்‌ . . . க்க நாயனேன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ விக்கிரமசோழபுரத்து மேற்பாக்க முடையான்‌ அக்கநாயனேன்‌ இப்படி அறிவேன்‌ மயிபாலனேன்‌ இப்படி அறிவேன்‌ செட்டி தொண்டக நாயனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகரில்‌

17

13

14

தானத்தாரில்‌ பன்மாஹேறா௱ லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகரில்‌ தாநத்தாரில்‌ தில்லைக்கூத்தனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ காக்கு நாயக பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ விக, 2சோழபுரத்துப்‌ பாளூர்க்கிழவன்‌ ஒதுவித்தானேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ தொஞ்ஞை வாணாதராயனேன்‌

இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ நல்லழகியநாயன்‌ காலிங்கராயனேன்‌ இப்படி அறிவேன்‌ குன்றக்கோட்டுழான்‌ பிரமண்டை தொண்டை . . . த்து இப்பிறமாணமுந்‌ திரிவிட்டு முட்டைபுறத்துச்‌ சீராமபட்டன்‌ அருளிச்செயற்‌ படிக்கு காஞ்சீபுரத்தில்‌ திருப்பணி ஆசாரி பெருங்காண்டைப்‌ பல்லவராயன்‌ ஆசாரி எழுத்‌ ....

இப்படி அறிவேன்‌ வயலை ஆற்றூர்‌ மங்கலமுடையான்‌ நயினானேன்‌ இப்படி அறிவேந்‌ மன்றபாங்கிழாந்‌ . . .

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧47/2017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1304 காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1382 பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 359/1923 தமிழ்‌ முன்‌ பதிப்பு வு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

விஜயநகரர்‌ ஊ.க.எண்‌ : 9 இரண்டாம்‌ அரிகரர்‌

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு பட்டி.

சகம்‌ 1303 (கி.பி. 1381) ஆம்‌ ஆண்டு உக்கல்‌ எனும்‌ விக்ரமாபரணச்‌ சதுர்வேதிமங்கலத்து சபையார்‌ இவ்வூரின்‌ வடபிடாகை ஊர்களான ஏழாயிரச்சேரி, திருப்புலித்தாங்கல்‌ ஆகிய இரண்டு ஊர்களின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குகளை 400 பணம்‌ பெற்றுக்கொண்டு முட்டைப்புறத்தைச்‌ சார்ந்த சீராம பட்டனுக்கு விற்றுக்‌ கொடுத்தது போக மீதி இருந்த மூன்றில்‌ ஒரு பங்கினை ஒதுமுக்கில்‌ நாராயணப்‌ பட்டனுக்கு 200 பணம்‌ பெற்றுக்‌ கொண்டு சபையார்‌ விற்றுக்‌ கொடுத்தனர்‌. ஒதுமுக்கில்‌ நாராயணப்பட்டன்‌ என்பவன்‌ தான்‌ விலைக்கு வாங்கிய மூன்றில்‌ ஒரு பங்கினை, சகம்‌ 1304(கி.பி. 1382)ஆம்‌ ஆண்டில்‌ ஏற்கனவே இவ்வூரின்‌ மூன்றில்‌ இரண்டு பங்கினை வாங்கிய தாமனூர்‌ நாட்டு வேலூர்‌ என்னும்‌ இராசேந்திரசோழ நல்லூர்‌ ஊரைச்‌ சார்ந்த சாத்தன்‌ சேனாபதிப்பிள்ளை நாகதேவன்‌ என்பவனுக்குத்‌ தனது ஒரு பங்கினை 250 பணம்‌ பெற்றுக்கொண்டு விற்றுக்‌ கொடுத்துள்ளான்‌.

1. ஷஹி ஸ்ரீஐ ஊஹாமண்டலீழுரன்‌ அரியராய விபாடன்‌ பாஜஷெஷக்குத்தப்பும ராயர்‌ கண்டன்‌ மூவராயர்‌ கண்டன்‌ பூவ*தசஷிண பச்சிம ஸமுத்திராதிபதி ஸ்ரீவீர அரியண உடையார்‌ வி, கிவிராச்சியம்‌ பண்ணி அருளா நின்ற சகார்தம்‌ ௧௩௱௪ துந்துபி வருஷத்துக்கும்‌ வவ*வக்ஷத்து சனிக்கிழமையும்‌ அயொலஃமமியு[ம்‌] பெற்ற உத்திராடத்து நாள்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து தமனூர்‌ நாட்டு வேலூரான ராசேந்திரசோழ நல்லூர்‌ குமரன்‌ சாத்தன்‌ சேனாபதிப்பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனுக்கு காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கலான

19

2. வி௯_மாபரணச்‌ சதுற்பேதி மங்கலத்து ஸலெெயாரில்‌ ஒதுமுக்கில்‌ நாராயண பட்டனேன்‌ எங்கள்‌ வடபிடாகை ஏழாயிரச்சேரியும்‌ திருப்புலித்தாங்கலும்‌ உக்கல்‌ சபையார்‌ பக்கலிலே முட்டைப்புறத்து சீராமபட்டன்‌ கொண்ட பங்கு மூன்றில்‌ இரண்டும்‌ நீக்கின கொண்ட பங்கு மூன்றில்‌ ஒன்றும்‌ நான்‌ கொண்ட சாதநம்‌ திரிவு இட்டுக்குடுக்கையில்‌ இந்த உ. மாணத்துக்கும்‌ இந்தத்‌ திரிவு இட்டுக்கும்‌ கல்வெட்டிக்‌ குடுத்த பரிசாவது இந்த அரியண உடையாற்கு செல்லா நின்ற சகாவூம்‌ ஆயிரத்து முன்னூற்று மூன்றில்‌ மேல்‌ துன்மதி ஷ_ஃவ௬௯ஸரத்து கன்னி நாயற்று வ-வ*வச்ஷத்துத்‌ ,திதையும்‌ வெள்ளிக்கிழமையும்‌ பெற்ற ரேவதி நாள்‌ செயங்கொண்டசோழ நல்லூர்க்‌ குமரன்‌ சாத்தன்‌ சேனாவதிப்‌ பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனுக்கு காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கல்‌ ஆன விக்கிரமாபரணச்‌ சதுறுவேதி மங்கலத்து ஒதுமுக்கில்‌ நாராயணப்பட்டனேன்‌ காணி உடையப்‌ பிறமாணம்‌ திரிவிட்டு குடுத்த பரிசாவது நா . . உக்கல்‌ ஸலையோ . . சமுதாயத்தில்‌ இனாடு உடையேன்‌ ஆன வடபிடாகை ஏழாயிரச்சேரி திருப்புலித்தாங்கலும்‌ ஆக இவ்வூர்‌ இரண்டினுக்கு முட்டைப்புறத்துச்‌ சீராமபட்டன்‌ இந்த சபையார்‌ பக்கல்‌ கொண்டு உடைய சாதனப்படி மூன்றில்‌ இரண்டு நீக்கி நான்கொண்டு உடைய மூன்றில்‌ ஒன்று கொண்டு உடை ...

3. சோழமண்டலத்து காலியூர்‌ கோட்டத்துப்‌ பாகூர்நாட்டு உக்கல்‌ ஆன விக்கிறமாபரணச்‌ சதுர்வேதிமங்கலத்து மஹாஸலையோம்‌ விலைவ_மாணக்‌ கை எழுத்து இவ்வூர்‌ ஒதுமுக்கில்‌ நாராயண பட்டனுக்கு நாங்கள்‌ விற்றது எங்கள்‌ வடபிடாகை ஏழாயிரச்சேரி திருப்புலித்தாங்கல்‌ என்று பேருடைய ஊர்களுக்கு கீழ்பாற்‌ எல்லை சிற்றிலைப்‌ பாக்கத்தில்‌ எல்லைக்கும்‌ அரசாணிபாலை எல்லைக்கு மேற்கும்‌ தெ . . . புன்னை எல்லைக்கும்‌ அதிரம்பாக்கம்‌ எல்லைக்கும்‌ வடக்கும்‌ மேல்பாற்‌ எல்லை இந்தப்பாகூர்‌ எல்லைக்கும்‌ இட்டிகைப்பட்டு எல்லைக்கும்‌ சோதியம்பாக்கத்தில்‌ வரந்தருவான்‌ ஆயிரத்து இருநூற்றுத்‌ தட்டான்‌ மகன்‌ வடுகன்‌ தன்பார்வை ஆக பற்றி கொண்டு காணி விலை வ,மாணம்‌ . . . . க்குடுத்த இதற்கு எப்பேற்பட்ட கலனும்‌ இல்லை கலனுள்‌ வாய்த்தோற்றுப்படில்‌ நானே . தீற்து குடுக்க கடவேனாகவும்‌ இச்சாதனபடியே இவற்க[ள்‌]* விற்றுறொற்றி வதி . . . தெய்வதானங்களுக்கும்‌ மற்றும்‌ எப்பேற்ப்பட்ட சகலப்பிராத்திகளுக்கும்‌ உரித்து ஆவது ஆகவும்‌ இப்படி சம்மதித்துத்‌ திரிவிட்டுக்‌ குடுத்தேன்‌ ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துத்‌ தமனூர்‌ நாட்டு

4. எல்லைக்கும்‌ பாதிரித்தாங்கல்‌ எல்லைக்கும்‌ கிழக்கு நாற்பாற்‌ எல்லை நாங்க ௨... உடைய வடக்கு தெற்கும்‌ இந்த நான்கு எல்லைக்கும்‌ உட்பட்ட ஊர்‌

20

இரண்டும்‌ நத்தமும்‌ நத்தக்கடையும்‌ நஞ்செய்‌ நிலமும்‌ புன்செய்‌ நிலமும்‌ ஏரியும்‌ ஏரிவாய்‌ புறவடையும்‌ மேல்‌ நோக்கிய மரமும்‌ கீணோக்கிய கிணறும்‌ மற்றும்‌ உள்ள சகல ஸமுதாயங்களும்‌ உடும்பு ஒடி ஆமைதவழ்ந்த இடம்‌ உட்ப்பட முட்டைப்புறத்து சீராமபட்டனுக்கு விற்றுக்‌ குடுத்த இவ்வூர்‌ இடை . ... மூன்றில்‌ இரண்டு நீக்கி மூன்றில்‌ ஒன்று இவனுக்கு விற்றுக்‌ குடுத்துக்‌ கொள்வது ஆன எம்மில்‌ இசைந்த விலைப்பொருள்‌ அன்றாடு வழங்கும்‌ வராகன்‌ . . . இராசேந்திரசோழநல்லூர்க்‌ குமரன்‌ சாத்தன்‌ சேனாவதிப்‌ பிள்ளை நாகதேவன்‌ பல்லவராயனுக்கு காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கல்‌ ஆன விக்கிற மாபரணச்‌ சதுறுவேதிமங்கலத்து ஒதுமுக்கில்‌ நாராயண பட்டனேன்‌ இப்படிக்கு இவை ஒதுமுக்கில்‌ நாராயணபட்டன்‌ எழுத்து நாகதேவர்‌ பல்லவராயர்க்கு இப்பிறமாணம்‌ மகாசெனம்‌ சம்மதிக்க திரிவிட்டுக்‌ குடுத்தப்படிக்கு உக்கல்‌ உடையான்‌ ஹாஜன வடயரந்‌ வாழவந்தான்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ முட்டைபுறத்து ஸ்ரீமாட்டன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ கண்டேற்று இயக்கன்‌ நாராயணப்‌ . . .

5. குளிகை உ௱ இப்பணம்‌ இருநூற்றுக்கும்‌ இந்த உளாகளங்கலும்‌ மூன்றில்‌ ஒன்று விலைக்கு விற்று பொருளறக்‌ கைக்கொண்டு விலை௨._மாணம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ ஒதுமுக்கில்‌ நாராயணபட்டனுக்கும்‌ உக்கலான ஸ்ரீவிக... மாபாரபணச்‌ சதுவேதிமங்கல[த்‌]து மஹாஸூஷெலடம்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த ஊர்களில்‌ பங்கு மூன்றில்‌ ஒன்றுக்கும்‌ எப்பேற்ப்பட்ட கலனும்‌ இல்லை கலனும்‌ . . . . துக்கு குடுக்கக்‌ கடவோம்‌ ஆகவும்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இவ்வூர்களில்‌ பங்கு மூன்றில்‌ ஒன்றும்‌ இதுவே வ,மாணம்‌ ஆவது ஆகவும்‌ இதுக்கு இது வல்லது . . . வன்‌ வங்கிப்புறத்து இராமபிரான்‌ லட்டனேன்‌ இப்படி அறிவே[ன்‌] கண்டேற்று கேசவ பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ (யா]கை இளையவா . .பட்டனேன்‌ .......... பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ வயாகை ஆணபிரான்‌ பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ இக்குடி வரதராச பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ இக்குடிய்‌ நாராயண லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ மாத[வ]* லட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ முட்டைப்புறத்து[ந்‌] *நின்ற நாராயண லட்டனேன்‌ இப்படி அறிவே(ற்‌)[ந்‌] பற்பநாத பட்டனேன்‌ இந்தத்‌ திரிவிட்டினபடி பணம்‌ இருநூற்று அம்பதும்‌ பாத்துக்‌ குடுத்தமைக்கு உக்கல்‌ வர(நு)தருவான்‌ ஆயிரத்து இருநூற்‌ . . .

6. மாற்று இப்பொருட்செலவோலை . ஈட்‌ . . . ன்னப்பெருவதாகவும்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இந்த ஊர்களில்‌ பங்கு மூன்றில்‌ ஒன்றுக்கும்‌ நீரும்‌ நீர்போக்கும்‌ வழியும்‌ வழிபோக்கும்‌ மரமும்‌ கிணறும்‌ உரித்தாவதாகவும்‌ இப்படி விற்றுக்‌

21

குடுத்த இவ்வூர்களில்‌ மூன்றில்‌ குளவடை ஒன்று இவனுக்கு விற்று ஒற்றி வ, கிகெய தாயதானங்களுக்கும்‌ மற்றும்‌ எப்பேர்பட்ட சகலப்‌ பிராப்திகளுக்கும்‌ உரித்து ஆவது ஆகவும்‌ இப்படி குடுத்த இவ்வூர்களில்‌ மூன்றில்‌ ஒன்றுக்கு . . . மணத்துக்கு . . . எழுத்து . . . பெருநகரில்‌ தானத்தாரில்‌ தில்லைக்கூத்த பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகரில்‌ தானத்தாரில்‌ காக்கு நாயகபட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ தானத்தாரில்‌ பன்மாயேசுர பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ தொஞ்ஞை வாணாதராயனேன்‌ இப்படி அறிவேன்‌ மயில்பாலனேன்‌ இப்படி அறிவேன்‌ கொண்டக நாயனேன்‌ இப்படி அறிவேன்‌ வெண்பாளுர்‌ கிழவன்‌ ஒதுவித்தானேன்‌ இப்படி அறிவேன்‌ விக்கிறம சோழபுரத்தில்‌ மேற்பாக்கம்‌ முடையான்‌ அத்திநாயனேன்‌ ௨. இப்படி அறிவேன்‌ பெருநகர்‌ நல்லாதி அழகிய நாயன்‌ காலிங்கராயனேன்‌ இப்படி அறிவேன்‌ புன்னை ....

7. இப்பணம்‌ இருநூற்றுக்கும்‌ இந்த பணம்‌ இருநூற்றுக்கும்‌ இற்றை நாள்‌ இவ்வூர்களில்‌ மூன்றில்‌ ஒன்றும்‌ இவர்க்கு விலையாக விற்றுப்‌ பற்றின (ர உ௱ருய இப்பணம்‌ இருநூற்று [ஐம்பதும்‌] . . .

8. னன்‌ இப்படி அறிவேன்‌ முடும்பை திருவரங்க நாராயண பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ முட்டைப்புற இராமபிரான்‌ பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ வீரநாராயண பட்டனேன்‌ .. .

. ஈன்‌ மகன்‌ வடுகநாதன்‌ எழுத்து இப்படி இப்படி அறிவேன்‌ வயலை ஆற்றூர்‌ குமாரமங்கலமுடையான்‌ நாயனானேன்‌ ஸலெ உக்கல்‌ நாராயணபட்டார்‌ அருளிச்‌ செய்ய கல்லு வெட்டினேன்‌ . . .

10. றை கோட்டூழான்‌ முரமாண்டை தொண்டைமானேன்‌.

த.நா.௫. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 645,2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. [1304] காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1382 பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 358/1923 தமிழ்‌ முன்‌ பதிப்பு த: ன்‌

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 10 விருப்பண்ண உடையார்‌

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தெற்கு ஜகதி கீழ்ப்பகுதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ காலியூர்‌ கோட்டத்து பாகூர்‌ நாட்டு

உக்கல்‌ என்கிற விக்கிரமாபரணச்‌ சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர்‌ 400 பணம்‌ பெற்றுக்கொண்டு இட்டிகைப்பட்டு என்னும்‌ கிராமத்தினை சில தனிநபர்களுக்கு விற்றுக்‌ கொடுத்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1.

4.

ஷஹி ஸ்ரீ ஹாண்டலீழுறஓ ஹறிஇராய விபாடந்‌ பாஷெஷக்குத்‌ தப்புவராய கண்டன்‌ மூவராய கண்டன்‌ வாவ" ஊஷிந வவி2 ஸச"௨ாகிபதி ஸ்ரீவிருப்பண்ண உடையார்‌ வ, கிவிறாஜுச பண்ணி அருளா நின்ற காலத்தில்‌ செல்லா நின்ற ஸகாவும்‌ [ஐ௩௱௪ . . .

வூஜிக நாயற்று ௬வ௱வக்ஷத்து குதியையும்‌ திங்கட்கிழமையும்‌ பெற்ற புணர்பூசத்து நாள்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ காலியூர்க்‌ கோட்டத்துப்‌ பாகூர்‌ நாட்டு உக்கலான விக,மாபரணச்‌ சதுவெ-திமங்கலத்து 2ஊஹாஸலெயோ . . .

. ன்னர்கு அரசூருடையாந்‌ தனிமாலை அழகியார்க்கும்‌ இக்குடி உலகர்‌

களப்பாளராயற்கும்‌ இக்குடி ஆதித்தத்‌ தேவற்கும்‌ இக்குடி தழுவக்‌ குழைந்தார்க்கும்‌ இக்குடி அழகிய தேவப்பெருமாள்‌ உள்ளிட்டாற்கும்‌ இக்குடி பிற...

யர்‌ முதலிப்பிள்ளை இவர்களுக்கும்‌ உழுந்தல்‌ உடையார்‌ வெண்ணை வில்லவராயர்‌ ஒலகாபுரமுடையார்‌ பெருமாள்‌ . . இவர்க்கும்‌ ஆலத்தூருடையார்‌ .

23

~

10.

உலகந்‌ உள்ளிட்டார்க்கும்‌ ஆலத்தூருடையார்‌ இராயப்பாகன்‌ உள்ளிட்டார்க்கும்‌ செல்லப்பிள்ளை இவர்களுக்கும்‌ அரசூருடையார்‌ தேவப்பெரு ...

. .... தங்களுக்கு நாங்கள்‌ விற்கின்ற ஊர்‌ . . எங்கள்‌ விடப்பட்ட இட்டிகைப்பட்டு

என்று . . கெல்லை அகரம்‌ . . ஏழாயிரச்சேரி ஏந்தலுக்கும்‌ . . . மேற்கும்‌ தென்பாற்க்கெல்லை அகரம்‌ பாகூர்‌ எல்லைக்கும்‌ திரு

அகரம்‌ பாகூர்‌ உடன்‌ கூடின பிரப்பருகல்‌ எல்லைக்கும்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை ஏழாயிரச்சேரி எல்லைக்கு தெற்கும்‌ இன்னான்‌ கெல்லைக்கு உட்பட்ட நத்தம்‌ நத்தக்குடை நஞ்சை நிலம்‌ புன்சை நிலம்‌ ஏரி ஏரிவாய்‌ புறவடை கிணறும்‌ மரமும்‌ உட்பட விற்றுக்குடுத்துக்‌ கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள்‌ அ...

. ப்பொருள்‌அறக்‌ கைக்கொண்டு விற்று விலை வாணம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ ஆவணக்களரியே . . த்து இந்த கூற்று . . ஆக கீழிச்சிகை ஊற்கீழ்‌ கைக்கொண்டு விலை வ._ாணடி இப்படி

விற்றுக்குடுத்த இவை ஆர்க்குடு . யர்க்கும்‌ வழியும்வழி . . .

ர்க்கு எப்பேர்பட்ட கலனும்‌ இல்லை கலனுள்‌ வாய்த்தோற்றுபட்டில்‌ நாங்கள்‌ தீர்ந்து குடுக்ககடவோம்‌ இப்படிக்கு . . . . செய தாயலூநங்களுக்கும்‌ உரித்தாவதாகவும்‌ இருகாலாவது முக்காலாவது இப்பணம்‌ நானூற்றுக்கும்‌ இவ்வூர்‌ விலை ஆவதாகவும்‌ இப்படி . . .

. ன்று சொல்லப்‌ பெறாதாகவும்‌ இப்படிக்கு [ச]ம்மதித்து விற்று விலை

வ.சகாணம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ அரசூருடையார்க்கும்‌ தனிமாலை அழகியார்‌ இக்குடி உலகர்‌ களப்பாளரயாயர்க்கும்‌ இக்குடி ஆக . . இக்குடி

தழுவக்‌ குழைந்தானுக்கும்‌ இக்குடி அழகிய . . தேவ - - இக்குடி பெருங்கப்‌ பிள்ளை அப்பநான புதுக்குடையான்‌ முதலியப்பிள்ளை

இவர்களுக்கும்‌ . வழு . . உடையார்‌ வெண்ணை வில்லவராயன்‌ சோபுரமுடையான்‌ . இவர்களுக்கும்‌ . . பிள்ளை இவர்களுக்கும்‌ ஆலத்தூருடையான்‌

24

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 69/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : விபவ

வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14 - நூற்‌. ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 370/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 11

அரசன்‌ : விருப்பண உடையார்‌(விருப்பாக்ஷர்‌)

இடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ வெளிபுறம்‌ தெற்குக்‌ குமுதம்‌.

குறிப்புரை : பெருநகரில்‌ வசித்த கைக்கோளர்கள்‌ வரி செலுத்த இயலாமல்‌ வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்‌. மீண்டும்‌ அவர்களை ஊர்ச்சபையார்‌ அதே ஊரில்‌ குடியமர்த்தி செலுத்த வேண்டிய வரிகளைக்‌ குறைத்து பெற்றுக்கொள்ளச்‌ சம்மதித்துள்ளச்‌ செய்தி.

1. ஹஹிஸ்ரீ விருப்பண உடையாற்கு செல்லா நின்ற விவவ வருஷ$ ஆடி மாதம்‌ ய௭ தியதி பெருநகர்‌ கைக்கோளற்கு கல்வெட்டிக்‌ குடுத்தபடி . . . . குடிப்போயிருக்கையில்‌ தங்க

2. த்தார்‌ காணிக்கையாக தாங்கள்‌ வாங்கு முதல்‌ கட்டகை மோவை நீரும்‌ சத்‌ . . மற்றும்‌ எப்பேர்பட்ட உபாயங்களுக்கு முன்னூறு

3. . . . . வருஷம்‌ கார்த்திகை மாதம்‌ குடிமுதல்‌ தறிக்கடமை ........ உபாதிக்கும்‌ மற்றும்‌ எப்பேர்பட்ட இட்டு பதசிய பப பலம்‌ இலள்‌ ஒருள்லு மூன்றே முக்கால்‌ பணம்‌ கொள்ளக்‌

தலச்‌ கக்கு சறங்த்ு கந்தக

25

த.நா.௮. வதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 650/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1328 வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.1406 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 357/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ந:

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 12 அரசன்‌ : ஸ்ரீவிர பிரதாப புக்கண மகாராயர்‌ (இரண்டாம்‌ புக்கணன்‌) கம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குப்‌ பட்டி.

குறிப்புரை : உத்திரமேரூரின்‌ புறனர்களான ஆலத்தூர்‌ மற்றும்‌ அத்திப்பற்று ஊரவர்‌ களுக்கிடையே தண்ணீர்‌ பாய்ச்சுவதில்‌ பிரச்சினை ஏற்பட்டது. மகாபிரதானி அரசர்‌ திப்பரசர்‌ முன்னிலையில்‌ இரண்டு ஊரவர்களும்‌ கூடினர்‌. ஆலத்தூர்‌ ஏரிக்கும்‌ விசுவூர்‌ ஏரிக்கும்‌ பாதிப்‌ பாதியாக பயன்படுத்திக்‌ கொள்ளவும்‌, திருத்தின நிலத்துக்கு நீர்‌ பாய்ச்சிக்‌ கொள்ளவும்‌, மடைவெட்டித்‌ திறக்க கூடாது என்றும்‌ சம்மதம்‌ ஏற்பட்டு ஒப்பந்தம்‌ செய்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ றாசாகி றாசந ஸ்ரீவீர௨,தாபபுக்கந மஹாராயர்‌ இராஜ பண்ணா நின்ற சகாவூ£ ஐ௩௱உ௰அ மேல்‌ செல்லா நின்ற ஷய ஸுவ சரத்து துலா னாயற்று பூவ*வக்ஷத்து அட்டமியும்‌

2. புதன்கிழமையும்‌ பெற்ற திருவோணத்து நாள்‌ உத்திரன்மேரூர்ப்‌ பற்று ஆலத்தூருக்கும்‌ அத்திப்பற்றுத்‌ தண்டிறைக்கும்‌ ஏரிக்கால்‌ சம்வர்ஸமாய்‌ இரண்டு ஊரும்‌ விரோதித்து குவளை கோட்ட குவளை

3. யில்‌ மகாபிரதானி அரசர்‌ திப்பரசர்‌ முன்பும்‌ இரண்டு ஊரவரும்‌ தங்களில்‌ பொருந்தி அறுதி பண்ணினபடி விசுவூர்க்‌ கழனி வெள்ளம்‌ ஆய .

4. ஏரிக்கும்‌ ஆலத்தூர்‌ ஏரிக்கும்‌ பாதியாக உ௱9வ-த்திலே தானம்‌ இட்டு தன்‌ இறையிலி கழனி ஆலே ஆலத்தூர்‌ . . . கஉா9வ/*க்கி . . ஆக . . . லுக்கு

5. திருத்து நிலத்துக்கு ஏர்வை ஆக இரண்டு இடத்திலே ஆனைக்கை வைத்து நீர்‌ வேண்டின நாளைக்கு நீரகப்படிக்‌ கொள்ளக்‌ கடவர்களாகவும்‌ இது ஒழி .

26

6. மடை வெட்டி திறக்க கடவதல்ல ஆகவும்‌ இம்மரியாதியிலே இரண்டு ஊர வரும்‌ ஸஃவர்ஸமாக நடக்கும்படிக்குப்‌ பொருந்திநமைக்குத்‌ தண்டிறை . .

7. க்கு இவை குமாரந்தை அருளாளநாதன்‌ பல்லவராயன்‌ எழுத்து இப்படிக்கு இவை தோட்டங்கிழான்‌ சூர்யதேவன்‌ எழுத்து இப்படிக்கு இவை

8. பொன்னப்பிள்ளை தண்டக நாட்டு வேளான்‌ எழுத்து இப்படிக்கு இவை தோட்டங்கிழான்‌ அத்தகிரிநாதன்‌ குருகுலராயன்‌ எழுத்து

9. குமாரந்தை பொன்னம்பலக்கூத்தன்‌.

27

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 651,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1441 வட்டம்‌ காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1519 ஊர்‌ பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 369/1923 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 13 அரசன்‌ : கிருஷ்ணதேவராயர்‌

கம்‌ பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : பெருநகர்‌ கோயில்‌ ஆளுடைய பிரமீசுரமுடைய நயினார்‌ இறைவனுக்கு

வைகாசி மாத திருவிழாவில்‌ ஆறாம்‌ திருநாள்‌ அன்று வழிபாட்டுச்‌ செலவினங்களை தோடிக்கரை பேரய்யாக பிள்ளையார்‌ என்பவன்‌ ஏற்றுக்கொண்டுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹி ஸ்ரீ்‌காமண்டலேசுரன்‌ அரியராய விபாடன்‌ பாஷைக்குத்‌ தப்புவராயர்‌ கண்டன்‌ மூவராயர்‌ கண்டன்‌ இந்துராய சுரத்தனன்‌ இராசாதிராசன்‌ ராசபரமேசுரன்‌ கண்ட நாடு

2. கொண்டு கொண்டநாடு கொடாதான்‌ எம்மண்டலமும்‌ கொண்டருளிய மகாராயர்‌ கிஷ்ட்டணய தேவ மகாராயர்‌ பிறிதிபராச்சியம்‌ பண்ணியருளா நின்ற சகாற்தம்‌ ௲ச௱சயிக ன்‌ மேல்‌

3. (செல்லா நின்ற வெகுதானிய வருஷம்‌ மேஷ நாயற்று பூறுவ பக்ஷத்து திறியோதெசியும்‌ திங்கள்‌ கிழமையும்‌ பெற்ற அனுஷத்து நாள்‌ பெருநகர்‌ கோயில்‌

4. ஆளுடைபிரமீசுரமுடைய நயினார்‌ திருவைகாசி திருநாள்‌ ஆறான்‌ திருநாள்‌ உபையம்‌ தோடிக்கரை பேரய்யாக பிள்ளையார்‌

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 6522017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சுகம்‌. 1446 வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1524 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 349/1923

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு -

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு ; விஜயநகரர்‌ ஊ.க.எண்‌ : 14

அரசன்‌ : கிருஷ்ணதேவராயர்‌

கடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு பட்டி.

குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமல்‌ உள்ளது. விசயநகர மன்னர்‌ கிருஷ்ணதேவராயரின்‌ பெயர்‌ மற்றும்‌ சக ஆண்டு மட்டும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1. ஸ்வஹி ஸ்ரீண்‌ ஊர்டலேசுர மீசுரகண்ட கட்டாரி சாளுவ அரியராய விபாடந் பாஷைக்கு தப்புவராயர்‌ மிண்டன்‌ துலுக்ககள விபாடன்‌ துலுக்க மோகந்தவித்தான்‌ சத்த சமுத்திராதிபதி எம்மண்டலமுங்‌ கொண்டருளிய

2. சிறீ வீரப்பிறதாபன்‌ கிஷ்ணைய தெய்வ 8ஹ[£]ராயர்‌ பிறதிவிராச்சியம்‌ பண்ணி அருளாநின்ற சகாற்த்தம்‌ ஐச௪௱சய௬ன்‌ மேல்‌ செல்லா நின்ற தாரண வருஷத்து பூறுவபக்ஷத்து திறியோதெசியும்‌ சோம வாரமு([ம்‌]* பெற்ற அனுழத்து நாள்‌ செயங்‌

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 653/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1462 வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1540 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 348/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 3 *

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 15 அரசன்‌ : அச்சுதராயர்‌

இடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு பட்டி.

குறிப்புரை : பெருநகரைச்‌ சார்ந்த வளவந்த பகவர்‌ நயினார்‌, பிரமநயினார்‌ உள்ளிட்டாரிடம்‌ பிச்ச நாயினார்‌ கோயில்‌ நிர்வாகிகள்‌ 50 பணம்‌ பெற்றுக்‌ கொண்டு, இப்பணத்தின்‌ வழியாக வரும்‌ வட்டியினைக்‌ கொண்டு நயினார்‌ சன்னதியில்‌ ஒரு பகல்‌ விளக்கும்‌, பைரவர்‌ சன்னதியில்‌ ஒரு பகல்‌ விளக்கும்‌ எரிப்பதாக சம்மதித்து உடன்படிக்கை எழுதிக்‌ கொடுத்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹஹிஸ்ரீ ஸ்ரீ 2காமண்டலேமும அச்சுதைய தேவ மகாராயர்‌ பிறிதிவி ராச்சியம்‌ பண்ணி அருளாநின்ற சகாத்தம்‌ ௲௪௱சும்‌௨ ன்‌ மேல்‌ செல்லா நின்ற சாறுவரி வருஷடி தை மீ£ரு

2. பெருநகர்‌ வளவந்த வேளார்‌ பகவர்‌ நயினார்‌ பிரமநயினார்‌ உள்ளிடாற்கு பிச்ச நயினார்‌ கோவில்‌ தானத்தாரோம்‌ கல்வெட்டி குடுத்தபடி இற்றை நாள்‌ வாகையில்‌ நாங்கள்‌ வாங்கின ரூ ரம இப்பணம்‌

3. அன்பதுக்கும்‌ பலிசைக்குச்‌ சிலவாக நயினார்‌ சன்னதியில்‌ பகல்‌ ஷு * வயிரவன்‌ சன்னதி பகல்‌ வா ஆக பகல்‌ விளக்கிரண்டும்‌ ஷு ரதித்தவரையும்‌ திருவிளக்கிட்டு வரக்கடவோமாகவும்‌ இப்படி ஸலதித்து கல்லு

4. வெட்டி குடுத்தோம்‌ பிரமநயினார்‌ உள்ளிட்டாற்க்கு தானத்தாரோம்‌ இவை

தில்லை கூத்தன்‌ பட்டர்‌ எழுத்து இவை பண்மாயேமுர பட்டர்‌ எழுத்து இவை காக்கு நாயக பட்டர்‌ எழுத்து

* ஷு - விளக்குக்கான குறியீடாக உள்ளது.

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 65/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சுகம்‌ 1485 வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1583 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 3346/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 16 அரசன்‌ : சதாசிவதேவ மகாராயர்‌

கடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு பட்டி.

குறிப்புரை : புலியூர்‌ திருமடைவிளாகத்தில்‌ குடியிருக்கும்‌ கைக்கோள முதலிகளுக்கு உரிய பங்கில்‌ இரண்டு பங்கு நிலத்தினைப்‌ பெருநகர்‌ திருமடைவிளாகத்தில்‌ இருக்கும்‌ முப்பது வட்டத்து தானத்தார்‌ (கோயில்‌ நிர்வாகிகள்‌) பெற்றுக்கொண்டு தாங்களே இந்நிலத்தினை உழுது பயிர்‌ செய்து கொண்டு, இந்நிலத்திற்கு செலுத்தும்‌ வரிகளை கோயில்‌ ஸ்ரீபண்டாரத்தில்‌ அளிப்பதாக கைக்கோள முதலிகளுக்கு உடன்படிக்கை செய்து எழுதிக்‌ கொடுத்துள்ளனர்‌. கல்வெட்ரு : 1. சுபஹ்து சுவஷ்தஸ்ரீமத மஹாமண்டலீசுர மேதினி அரியராய விபாடன்‌ பாஷைக்கு தப்புவராயர்‌ கண்டன்‌ [கண்டநாடு கொண்டு]

2. கொண்டநாடு கொடாதான்‌ துலுக்கதள விபாடன்‌ துலுக்க மோகந்‌ தவித்தான்‌ எம்மண்டலமும்‌ திறைகொண்டருளிய ராசாதிராசன்‌ ராசபரமேசுர-

3. ன்‌ பூறுவ தெஷ்ஷண பச்சிம உத்தர சத்த சமுத்திராதிபதி கெசவேட்டை கண்டருளிய ஸ்ரீவீரப்பிறதாபன்‌ ஸ்ரீசதாசிவதேவ மகாராயர்‌ பிறுதிவி ராச்சிய-

4. யம்‌ பண்ணி அருளா நின்ற சகாற்தம்‌ ௲௪௱அயிரு ன்‌ மேல்‌ செல்லா நின்ற பிறபவ மா சித்திரை ரூ மீச பெருநகர்‌ திருமடைவிளாகம்‌ தானத்தார்‌ முப்பது வட்டத்‌ தா-

5. னத்தாரோம்‌ மேற்படியூர்‌ திருமடைவிளாகம்‌ கைக்கோள முதலியளுக்கு சிலாசாசனம்‌ பண்ணிக்குடுத்தபடி எங்கள்‌ கோயில்‌ கரை எட்டில்‌ ஒன்றும்‌ எங்க-

31

6. உழுது அனுமன்குண்டலம்‌ கவுண்டகள்‌ பங்கு. ... . . . - மூன்றத்தொன்றுக்கு நீக்கி . . . மற்ற பங்கு இரண்டும்‌ தானத்தாரே உழுது கொண்டு .. .

7. உண்டானது கோயில்‌ ஸ்ரீபண்டாரத்திலே செய்து கொள்ளக்‌ கடவோமாகவும்‌ பெருநகர்‌ எட்டில்‌ ஒன்று நிலத்திலேயும்‌ அனுபவிக்கை

8. பங்கு நிலத்திலேயும்‌ உழவு காணி உண்டென்று சொல்ல பெறாதல்ல வாகவும்‌ இப்படி சம்மதித்து சிலாசாசனம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ கைக்கோள ...

க்குள்‌ கற்கக்‌ முப்பது வட்டத்து தானத்தாரோம்‌ தில்லைக்‌ கூத்த பட்டன்‌ எழுத்து தில்லை நாயக பட்டன்‌ எழுத்து நாயக பட்டன்‌ எழுத்து

த.நா.அ. எதால்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌: 655,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு டத்‌

வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 15-16-நூற்‌. ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 347/1923 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு தக ஊ.க.எண்‌ : 17

அரசன்‌ 1௧

கடம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு குமுதம்‌.

குறிப்புரை : இவ்வூரைச்‌ சார்ந்த கைக்கோளர்களில்‌ தும்பை வில்லவராயன்‌ என்பவன்‌ இக்கோயில்‌ திருநடைமாளிகையில்‌ மூத்த நாயினார்‌ குனிச்ச பிள்ளையார்‌ என்னும்‌ பெயரில்‌ பிள்ளையார்‌ சிற்பத்தினைப்‌ பிரதிட்டைச்‌

செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ இவ்வூரில்‌ கைக்கோளரில்‌ தும்பை வில்லவராயன்‌

2. திருநடைமாளிகையில்‌ யேறியருளப்‌ பண்ணின மூத்த நா-

3. யினார்‌ குனிச்ச பிள்ளையார்‌

த.நா.௮. ஒதால்லீயல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧56/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : கி.பி.16-நூற்‌. வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : -

ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு ஊ.க.எண்‌ : 18

அரசன்‌

இம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : இக்கோயில்‌ சிவபிராமணன்‌ காக்கு நாயக்க பட்டர்‌ தேவசிகாமணி என்பவர்‌ பெயர்‌ பொறிக்கப்பட்டுள்ளது.

1. காக்கு நாயக பட்டர்‌ 2. தேவசிகாமணி

த.நா.அ. எதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 6572/2017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு

காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 16-நூற்‌. பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : 356/1923 தமிழ்‌ முன்‌ பதிப்பு நத

தமிழ்‌

- ஊ.க.எண்‌ : 19

பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

ஸ்ரீநிவாசகர்‌ அய்யன்‌ நிர்வாகம்‌ செய்த காலத்தில்‌ பெருநகர்‌ மடைவிளாகத்தில்‌ வசிக்கும்‌ கைக்கோள முதலிகளிடம்‌ வரி வசூலிக்க நிர்ணயம்‌ செய்யப்பட்ட வரிகளை தற்போது கொடுக்க மறுத்ததால்‌, உபை வேதாந்தாசாரியர்‌ ஆன எட்டூர்‌ திருமலை குமார தாத்தாசாரியர்‌ அய்யன்‌ அவர்களின்‌ முகவர்‌ திருமலை நம்பி சக்கிரராயர்‌ மற்றும்‌ பேரருளாளர்‌ பெருமாள்‌ கோயில்‌ தானத்தார்‌ ஆகியோர்‌ ஐந்தில்‌ ஒரு பாகத்தினை கழித்து மீதமுள்ள வரிப்‌ பணத்தினைக்‌ கொண்டு அறக்கட்டளை ஏற்படுத்திட உத்திரவிட்டுள்ளனர்‌. ஆண்டொன்றுக்கு அரை பொன்னும்‌, தறிக்கடமையும்‌ கொடுத்து வரவும்‌ ஆணையிட்டுள்ளனர்‌.

1. பார்திப வருஷ? பங்குநி மீ£ரு

2. ஆசாரியர்‌ ஆன உபைவேதாந்தாசாரியர்‌ ஆன எட்டூர்‌ திருமலை

3. குமார தாத்தாசாரியர்‌ அய்யன்‌ ஸ்ரீகாரியதுக்கு தக்கார்‌ ஆந திருமலை ந- |

4. ம்பி சக்கூராயர்‌ அய்யனும்‌ பேரரு[ளா]*ளப்‌ பெருமாள்‌ கோயில்‌

5. தானத்தாரு கல்பெரும்‌ ஸ்ரீநிவாசகர்‌ அய்யன்‌ பாரபத்தியத்‌-

6. திலே பெருநகர்‌ மடைவிளாகம்‌ கைக்கோள முதலியளு-

7. க்கு கல்வெட்டு பிறகாரம்‌ தாங்கள்‌ யிறுத்துவந்த . . .

8. அஞ்சில்‌ ஒன்றும்‌ கழித்து திருக்கோயிலுக்கு உத்தாரம்‌ ஆகக்‌ கழி-

3

9. த்தோம்‌ பூறுவம்‌ அற்றபடி வருஷம்‌ ஒற்றுக்கு படிஞ்ச 10. காணிக்கை பண்ண டூ பொன்னும்‌ தறிக்கடமையும்‌ 11. இறுத்து வரக்கடைவராகவும்‌ இந்தபடி- 12. க்கு தப்புவன்‌ கெங்கைக்‌ கரையிலே காராம்‌ பசு- 13. வை கொன்ற தோஷத்திலே போககடைவர்கள்‌ ஆகவும்‌ 14. யிப்படி அறிவோம்‌ பெரு[ந]கர்‌ ஊர்‌ கணக்கு 15. பேரருளா[ள]ப்‌ பெருமாள்‌ கோயில்த்‌ திருக்கைவேலன்‌ எழுத்து .உ. 16. இப்படிக்கு தாநத்தார்‌

த.நா.௮. தால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 65௧5,2012

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : கலி. 5042 வட்டம்‌ : காஞ்சிபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1942 ஊர்‌ : பெருநகர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 4

எழுத்து தமிழ்‌

அரசு 5 ஊ.க.எண்‌ : 20 அரசன

டம்‌ : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு பட்டி.

குறிப்புரை : காஞ்சிபுரம்‌ தாலுக்கா பெருநகர்‌ ஊரில்‌ உள்ள பிரமீசர்‌ கோயில்‌ திருச்சுற்றில்‌ உள்ள ஆறுமுகசுவாமி இறைவனுக்கு கிருத்திகை நாள்‌ அன்று அபிஷேகம்‌, ஆராதனை செய்வதற்குப்‌ பச்சையப்ப முதலியார்‌ மகன்‌ தங்கவேலு முதலியார்‌ நிலம்‌ தானமாக வழங்கியுள்ளார்‌.

சிவகுகமயம்‌

1. காஞ்சீபுரம்‌ தாலுக்கா

2. பெருநகரில்‌ ஸ்ரீபிரமீசராலயத்‌-

3. தில்‌ பிராகார ஸ்ரீஆறுமுக ஸ்‌-

4. வாமியாருக்கு பிரதி கிருத்தி-

5. கையில்‌ அபிஷேக வாரா-

6. தனைத்‌ தருமத்துக்காக பெரு-

7. நகர்‌ வேளாளர்‌ தோட்டனா-

8. ர்‌ கோத்திரம்‌ வா - பச்சை-

9. யப்ப * குமாரர்‌ தங்க வே- * - இக்குறியீடு முதலியார்‌ என்பதை குறிப்பதாகும்‌

37

10. லு பூர கலி 5042 விஷ

11. தை மீ 9 இங்கிலீஷ்‌ 1942 ௫: 12. ஜனவரி மீ 22 னால்‌

13. ஸ்‌ பெருநகரில்‌

14. நன்செய்‌ சர்வே நெ

15. 394/1A/2.0.32 செண்டு

16. 429/2.௧.0'4 செண்டு

17. நிலங்களை தானம்‌ செய்ய-

18. ப்பட்டது வா.ப. தங்கவேலு

19. முதலியார்‌.

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை

தர்‌ எண்‌: 6592017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 5

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1183 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 295/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 1

அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு ஜகதி.

குறிப்புரை : களத்தூர்‌ கோட்டத்து உழளூர்‌ ஊரைச்‌ சேர்ந்த புதுப்பாக்கம்‌ ஊர்த்‌ தலைவன்‌ நாதன்‌ என்பவன்‌ ஆற்றூர்‌ ஆளுடையார்‌ கோயிலில்‌ ஒரு சந்தி

விளக்கெரிக்க இரண்டு பழங்காசுகளை

சிவப்பிராமணர்களிடம்‌ கொடுத்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. . . . திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சிரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு

அஞ்சாவது ஆற்றூர்‌ ஆளுடை-

2. . . . யார்க்குக்‌ களத்தூர்‌ கோட்டத்து உழளூர்‌ புதுப்பாக்கிழான்‌ நாதனேன்‌ வைத்த சந்திவிளக்கு ஒன்‌-

3. . . . காணி உடைய சிவப்பிராம்மணர்‌ வசம்‌ பொலியூட்டாக நாடிக்‌ குடுத்த

பழங்காசு இரண்டும்‌ கைக்‌ . . .

4. . . அளதமன்‌ ஆளுடையான்‌ பட்டன்‌ கைக்கொண்ட விளக்கு காலே அரைக்காலும்‌ ......ஃஃ...

5. . . . தேவபட்டனும்‌ கைக்கொண்ட விளக்கு அரையே அரைக்காலும்‌ ஆகச்‌

சந்திவிளக்கு ஒன்றும்‌ சஷ._ரசிக;- 6. வரையாக குடுத்தோம்‌ இது பந்தாஹேறாற றகைஷ ॥-

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: ௧660/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 5

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1183 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 296/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌

எழுத்து : கிரந்த கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : திரிபுவன வீரராஜேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

குடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தெற்கு ஜகதி.

குறிப்புரை : திருவதிகை திருவீரட்டானமுடையார்‌ கோயிலைச்‌ சார்ந்த தேவரடியாள்‌ பிரான்‌ என்பவள்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ என்கிற இராஜராஜநல்லூர்‌ திருமுத்தீஸ்வரமுடையார்‌ கோயிலில்‌ சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளாள்‌. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜே௲சோழ தேவர்க்கு யாண்டு வது ஜயங்கொண்ட சோ- 2. மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான மாஜமாஜ நல்லூர்‌ ஆளுடையார்‌ திருமுத்தீருரமுடையார்‌ -

3. கு திருவதிகை திருவீரட்டானமுடையார்‌ கோயிற்‌ தேவர்‌ அடியாள்‌ பிராந்‌ வைத்த சந்திவிளக்கு ஒன்றுக்கு இக்கோயிலில்‌ காணி உடைய . . .

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6612017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 5

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி, 1183 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 297/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1௫

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 3

அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற இராஜராஜ நல்லூர்‌ ஊரில்‌ உள்ள திருமுத்தீசுரமுடையார்‌ கோயில்‌ சிவபிராமணர்கள்‌, களத்தூரைச்‌ சார்ந்த ஒருவனிடம்‌ இருந்து பொருள்‌ பெற்றுக்‌ கொண்டு சந்திவிளக்கு ஒன்று எரிக்கச்‌ சம்மதித்துள்ளனர்‌. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ சேவர்க்கு யாண்டு வது... 2. ட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான ாஜமாஜஐ நல்லூர்‌ ஆளுடைய திருமுத்தீசுரமுடையார்க்கு களத்தூ . . . 3. றைமுடையான்‌ வைத்த சந்திவிளக்கொன்றுக்கு நான்‌ உபையமாக இக்கோயிலிற்‌ சிவப்‌ . . .

4. கைக்கொண்டபடி மெளதமன்‌ஆளுடையான்‌ பட்டன்‌ கைக்கொண்ட விளக்கு காலே அரைக்கால்‌ .

5. கொமமிகன்‌ ஜெவபட்டன்‌ கைக்கொண்ட விளக்கு காலே அரைக்காலும்‌ ஆக சந்திவிளக்கு . . .

41

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6622012 மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 20 வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி.1236 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 278/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு நகு எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 2. அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ 3: முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ திருமுத்தீசுவரமுடைய நாயனார்‌ கோயிலில்‌, இவ்வூரைச்‌ சார்ந்த சேக்கிழான்‌ அரிய பிள்ளை செல்லப்பிள்ளை என்பவன்‌ இரண்டு சந்தி விளக்குகள்‌ எரிப்பதற்காக இக்கோயில்‌ சிவபிராமணர்களிடம்‌ இரண்டு

எனும்‌ இராசராசநல்லூர்‌

மாடைப்‌ பொன்‌ கொடுத்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஞஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு ௨௰ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌

நாட்டு

2. ஆற்றூரான இராசராசநல்லூர்‌ உடையார்‌ திருழுத்தீசுரமுடைய நாயனார்க்கு இவ்வூர்‌ சேக்கிழான்‌ அரியபிள்ளை செல்லப்பிள்ளையேன்‌ இன்னாய][கர்‌]க்கு

ஐப்பசி மாதத்து

3. வைய்த்த சந்தி விளக்கு இது இன்னாயனார்‌ கோயில்‌ காணி உடைய சிவபிராமணன்‌ கோத்திரத்து ஆழ்வான்பிள்ளை ஆளுடையபிள்ளை உடைய

நாயனார்‌ கை-

4. க்‌ கொண்ட சந்தி விளக்கு தெய்வன்‌ னாயகன்‌ காமப்பிள்ளை கைக்கொண்ட

சந்தி விளக்கு இரண்டுக்கும்‌ கைக்கொண்ட மாடை இவ்‌-

5. விளக்கு இரண்டு சந்திராதித்தவரை எரிக்க கடவோம்‌.

42

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 663,201

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 21 வட்டம்‌ செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : 1237 ஊர்‌ ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 281/1921 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு உக

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 5 அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ 3: முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌

எனும்‌ இராசராச நல்லூர்‌ ஊர்‌ திருமுத்தீசுவரமுடைய நாயனார்‌ கோயிலில்‌, இவ்வூரைச்‌ சார்ந்த தேவன்‌ வடுகநாதன்‌ என்பவன்‌ ஒரு மாடைப்‌ பொன்னினை, இக்கோயில்‌ பிராமணர்கள்‌ வசம்‌ அளித்து ஒரு சந்தி விளக்கெரிக்க வழிவகைச்‌ செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராஜ(ராஜ) தேவற்க்கு . . . . [ஜயங்கொண்ட]சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ ராஜரா [ஜ] நல்லூர்‌

2. உடையார்‌ திருமுத்தீஸ்வரமுடைய நாயனார்க்கு இவ்வூர்த்‌ தேவ . . . பட்டடால தேவன்‌ வடுகநாதன்நேன்‌ இன்னாயனார்க்கு இவ்வாண்டு

3. ஐப்பசி மாதத்து வைய்த்த சந்திவிளக்கு இவ்விளக்கு . . . இக்கோயில்‌ காணி உடைய சிவப்பிராமணன்‌ மெளகம கோக,து ஆ-

4. ழ்வான்‌ பிள்ளைக்கு தவ . . . கைக்கொண்ட . . . சந்தி விளக்கு டூம்‌ வினாயக பட்டன்‌ கைக்கொண்டு சந்திராத்‌ . .

5. ஆக விளக்கு ஒன்றும்‌ இவிளக்கு ஒன்றுக்கும்‌ கைக்கொண்ட மாடை ஒன்றும்‌ கைக்கொண்டு சந்திராதித்தவரை எரிக்க . . .

43

த.நா. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 66/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 21

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 289/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1௪

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 1

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு ஜகதி.

குறிப்புரை : அருளாள பெரியபிரான்‌ என்பவன்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ எனும்‌ இராசராச

நல்லூர்‌ ஊரில்‌ உள்ள உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ இவன்‌ எடுப்பித்த விநாயகப்‌ பிள்ளையார்‌ சன்னதியில்‌ ஐப்பசி மாதம்‌ முதல்‌ சந்திவிளக்கு ஒன்று எரிப்பதற்கு இக்கோயில்‌ காணியுடைய பிராமணன்‌ வசம்‌ ஒரு மாடைப்‌ பொன்‌ அளித்துள்ளான்‌. மேலும்‌, இக்கோயிலில்‌ கார்த்திகை மாதம்‌ முதல்‌ இரு நாழி அளவு எண்ணெய்‌ அளிக்கவும்‌ ஏற்பாடு செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீஇமாஜமாஜ தே[வற்க்கு யாண்டு ௨௰க வது ஜயங்கொ[ண்‌]டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ இராசரா [ச நல்லூர்‌ உடையார்‌] திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ அருளாள பெரியபிராந்‌ எழுந்தரு-

2. ளிவித்த வினாயகப்‌ பிள்ளையாற்கு இவ்வாண்டை ஐப்பசி மாதத்து வைத்த சந்திவிளக்கு ஒன்றுக்கு இக்கோயிற்‌ காணி உடைய மவுக£ கோத்திரத்து ஆழ்வான்பிள்ளை மகன்‌ [ஆளுடையப்பிள்ளை]யான உடைய நா கைக்கொண்ட மாடை இம்மாடை ஒன்று-

3. க்கும்‌ இவ்விளக்கொன்று சந்திராதித்தவரை எரிக்க கடவேன்‌ ஆம்வான்‌ பிள்ளை மகன்‌ ஆளுடையபிள்ளையான உடையான்‌ . . . பட்டநேன்‌ இன்னாயனார்‌ கோயிலுக்கு திருக்காத்திகை மாதமுதல்‌ வன்னாயக பட்டன்‌ மகன்‌ காமப்பட்டன்‌ . . .

, 4. ல்‌ எண்ணை இரு நாழியும்‌ சந்திராதித்தவரை அளக்கக்‌ கடவேன்‌.

44

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 665,012

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 21 செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு ந்‌

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 7 மூன்றாம்‌ இராசராசன்‌

முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : மாப்பூதி பொன்னம்பலக்கூத்தர்‌ மலையாழ்வான்‌ என்பவன்‌ இவ்வூர்‌

1.

3

கோயிலில்‌ புரட்டாசி மாதம்‌ முதல்‌ 3 சந்தி விளக்குகள்‌ எரிக்க வழிவகைச்‌ செய்துள்ளான்‌.

ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீஇராசராச தேவற்க்கு யாண்டு ௨௰க வது ஐயங்கொண்டசோழ ம[ண்டலத்து] . . . உடைய நாயனார்க்கு மாப்பூதி பொன்னம்பலக்‌ கூத்தர்‌ மலையாழ்வான்‌ இவ்வாண்டை புரட்டாதி மாசத்து இவர்‌ . . . . உடைய நாயக பட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு இஷபதேவன்‌ செல்வனான மதுராந்தக பட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு வின்னாயக பட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு

. வைய்த்த சந்திவிளக்கு இரண்டு இன்னாயநார்‌ கோயிலில்‌ காணி உடைய

சிவஸ_ ரஹண மேமுதய கோத்திரத்து வணக்கன்பாடி கூத்தாடும்‌ பிள்ளையான திருக்கண்ண பட்டன்‌ கைக்கொண்ட சந்திவி(ள)க்கு ம்‌ இஷபதேவன்‌ செ . . மேற்படியார்‌ மனிச்சரல்‌ பொன்னன்‌ மகாபெருங்கிபத்தல்‌ மகன்‌ தவப்பிள்ளையான மதுராந்தகபிள்ளை கைக்கொண்ட சந்திவிளக்கு கேசவன்‌ னாயகப்பட்டன்‌ காமபிள்ளை கைக்கொண்ட விளக்கு ஆக விளக்கு சந்திராதி-

த்தவரை எரிக்கக்கடவோம்‌ ஸ்ரீ மாகேசுர ரகைஷை

த.நா.அ. தொல்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 666/2017

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 26 செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1242 ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 279/1921 தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 8

மூன்றாம்‌ இராசராசன்‌

: முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌

நாட்டு ஆற்றூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ உடையார்‌ திருமுத்தீசுவர முடைய நாயனார்‌ கோயிலைச்‌ சார்ந்த இரண்டு சிவபிராமணர்கள்‌ இவ்வூரைச்‌ சார்ந்த உடையூர்‌ கிழவன்‌ மாசறுசோதி என்பவனிடமிருந்து ஒரு மாடை பொன்‌ பெற்றுக்கொண்டு இக்கோயிலில்‌ ஒரு சந்தி விளக்கு எரிப்பதாக உறுதியளித்துள்ளனர்‌.

கஸ்வெட்ரு :

1.

2.

ஹஹிய்ீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௨௰சு வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான இராசராச நல்லூர்‌ உடையார்‌ உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்க்கு இவ்வூரில்‌ உடையூர்‌ கிழவன்‌

நின்ற சங்கியா வாழி மாசறுசோதியேன்‌ இந்நாயனார்‌ கோயிற்காணி உடைய சிவவஷாஹஷணன்‌ கெஉகவ மொகுத்து ஐஷலஜெவன்‌ செல்லப்‌ பிள்ளையான ம௰*மாந்தத லட்டனும்‌ இக்குடியில்‌ ஆழ்வானான குலோத்துங்க பட்டன்‌ கூத்தாடும்பிள்ளை-

. யான திருக்கண்ண பட்டநும்‌ இவ்விருவோ[ம்‌] நாங்கள்‌ உபையமாகச்‌

சந்திராதித்த வரை எரிப்போமாக இவர்‌ பக்கல்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு ஒன்றுக்கும்‌ கைக்கொண்ட மாடை இவ்விளக்கு ஒன்று சந்திராதித்தவரை எரிக்கக்‌ கடவோம்‌ இவ்விருவோம்‌

46

த.நா.௮. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌: 66:2,2017

மாவட்டம்‌ காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 26

வட்டம்‌ செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1242

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 85

எழுத்து கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 9

அரசன்‌ மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை முன்பு தரையில்‌ உள்ளது.

குறிப்புரை மாம்பாக்கம்‌ ஊர்த்தலைவன்‌ ஆற்றூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊர்‌ கோயிலில்‌ சந்தி விளக்கெரிக்க ஒரு புதுக்காசு தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ .திலூவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீமாஜமாஜமேவ-

2. ர்க்கு யாண்டு ௨௰௬ ஆவது ஜயங்கொண்ட சோழமண்டல-

3. த்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான 4. இராசராச நல்லூர்‌ மாம்பாக்‌ கிழான்‌ ஸ்ரீ2ஜெவன்‌ திருக்கைச்‌ சாலிய

5. தேவன்‌ காவற்க்‌ காணியுடைய ஜெவகன்மி ஆறை நாயக

6. . . . சந்தி விளக்கு ஒன்றுக்காக கைக்கொண்ட புதுக்காசு . .

47

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 668/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 28 வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1244 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 290/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த: 4

எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 10 அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : ஆற்றூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊர்‌ மக்களுக்கு மதுராந்தகப்‌ பொத்தப்பிச்‌ சோழன்‌ ஆணையிட்டுள்ளச்‌ செய்தி. இவ்வூர்‌ வழித்துணையப்பன்‌ ஈசுவரமுடையார்‌ கோயிலுக்கு இரண்டு வேலி நிலம்‌ குடிநீங்கா தேவதானமாக இறையிலியாகக்‌ கொடுத்துள்ளான்‌. இந்நிலங்களின்‌ வரிவருவாயினை கோயில்‌ தானத்தாரிடம்‌ அளிக்க ஊர்ச்‌ சபையினருக்கு ஆணையிட்டுள்ளான்‌. இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்‌ பட்டுள்ள 28-வது ஆட்சி ஆண்டு மூன்றாம்‌ இராசராசனுக்குரியது.

கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ மதுராந்தகப்‌ பொத்தப்பிச்‌ சோழன்‌ ஓலை ஆற்றூரான இராசராசநல்லூர்‌ ஊரவர்‌ ௧-

2. ண்டு விடை தந்ததாவது தங்களூர்‌ உடையார்‌ வழித்துணையப்பநீசுவர முடையார்க்கு இரண்டு வேலி நிலம்‌ கு-

3. டிநீங்காத தேவதான இறையிலியாக இருபத்தெட்டாவது ஆடி மாதம்‌ முதல்‌ விட்டோம்‌ இத்தால்‌ வந்த ௧-

4. டமையும்‌ அனைத்தாயங்களும்‌ இந்நாயநார்‌ கோயில்‌ தாநத்தார்க்கு இருப்பதே இவை ௧-

5. ண்டகோபா[ல]ன்‌ எழுத்து.

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧69/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 29

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1245

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 280/1921

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 11

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற இராஜராஜ நல்லூர்‌ ஊரில்‌ உள்ள திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ இரண்டு சந்தி விளக்கெரிக்க இவ்வூரைச்‌ சார்ந்த மாப்பூதி திருச்சிற்றம்பலமுடையார்‌ ஆட்கொண்ட பல்லியாழ்வான்‌ என்பவன்‌ இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ வசம்‌ 2 மாடைப்‌ பொன்‌ கொடையளித்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு ௨௰௯ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான இராஜராஜ நல்லூர்‌ உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்க்கு இவ்வூர்‌ மாப்பூதி திருச்சிற்றம்பலமுடையார்‌ ஆட்‌-

2. கொண்ட பல்லியாழ்வான்‌ வைய்த்த சந்திவிளக்கு இவ்விளக்கு இரண்டும்‌ இக்கோயிலில்‌ காணி உடைய சிவஷ;ாஹஷணன்‌ மேமுதய கோத்திரத்து ஆழ்வானான குலோத்துங்க பட்டன்‌ கூத்தாடும்பிள்ளையாந திருக்கண்ண பட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு லும்‌ இஷமயெவன்‌ செல்லப்பிள்ளை யான மதுரா-

3. ந்தக பட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு டூ [தெ]ய்வன்னாயகன்‌ காமப்‌ பிள்ளை கைக்கொண்ட சந்திவிளக்கு ஆக விளக்கு இரண்டு கைக்கொண்ட மாடை இரண்டுக்கும்‌ சந்திராதித்தியவரை எரிக்கக்‌ கடவோம்‌ இது சீ மாயேசுர இரசைஷ

- இது அரைக்கான குறியீடு

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧70/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 29

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1245

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 291/1921 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 72

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ எனும்‌ இராசராச நல்லூர்‌ ஊர்‌ திருமுக்தீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ 3 சந்தி விளக்குகள்‌ எரிக்க ஒரு மாடைப்‌ பொன்‌ இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ வசம்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ ௪௯௯, வத்திகள்‌ ஸ்ரீஇராசராசதேவர்க்கு யாண்டு ௨௰௯ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றுரான இராசராசநல்லூர்‌ உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ ....

2. ப்புரட்டாசி மாதத்து வைய்த்த சந்திவிளக்கு இது இன்னாயனார்‌ கோயில்‌ காணி உடைய சிவப்பிராமணன்‌ இஷவகேவன்‌ செல்லப்பிள்ளையான மதுராந்தக . . .

3. பிள்ளை கைக்கொண்ட சந்திவிளக்கு ஆக விளக்கு மூன்றும்‌ இவ்விளக்கு ..... த்த மாடை இம்மாடை ஒன்றும்‌ கைக்கொண்டு சந்தி . . .

த.நா.௮., வதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 67/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 29

வட்டம்‌ செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1245 ஊர்‌ ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 288/1921 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 13 அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : நற்றாய நல்லூர்‌ ஊரினனான பெருவிளக்கன்‌ உடையபிள்ளை என்பவன்‌

ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊரில்‌ உள்ள திருமுத்தீசுர முடைய நாயனார்‌ கோயில்‌ ஒரு சந்திவிளக்கு எரிக்க ஒரு மாடை அளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராசராச தேவற்க்கு யாண்டு ௨௰௯ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆ-

2. ற்றூர்‌ நாட்டு ஆற்றூரான இராசராச நல்லூர்‌ உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாய[னார்‌]க்கு நற்றாய நல்லூரில்‌ பெருவிளக்கன்‌ உடைய பிள்ளை பட்டப்பிள்‌-

3. ளையே இன்னாயனார்க்கு நான்‌ வைய்த்த சந்திவிளக்கு இது இக்கோயிலில்‌ காணி உடை [ய] சிவப்பிராமணன்‌ மேமுதய கோத்திரத்து ஆழ்வான்பிள்ளை-

4. யாளுடைய பிள்ளையான உடையநாயகபட்டன்‌ கைக்கொண்ட சந்திவிளக்கு தேவனும்‌ இஷபதேவன்‌ செல்லப்பிள்ளையான மதுராந்தக பட்டன்‌ கைக்கொண்ட சந்திவி-

5. எக்கு க்கு கைக்கொண்ட மாடை இம்மாடை ஒன்றும்‌ கைக்கொண்டு

எரிக்கக்‌ கடவோம்‌. 51

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 622017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 5 செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1248 ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 285/1921 தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

பிற்காலப்‌ பல்லவர்‌ ஊ.க.எண்‌ - 14 கோப்பெருஞ்சிங்கன்‌

முக்தீஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு மற்றும்‌ மேற்கு குமுதம்‌.

தனியூர்‌ பெரும்பற்றப்புலியூர்‌ (சிதம்பரம்‌) உடையார்‌ திருச்சிற்றம்பலமுடையார்‌ கோயில்‌ தெற்குத்‌ திருவாசலில்‌ தனது பெயரால்‌ 'சொக்கச்சீயன்‌ திருநிலை' என்னும்‌ பெயரில்‌ ஏழுநிலைகளைக்‌ கொண்ட கோபுரம்‌ செய்ய வேண்டி ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற ராஜராஜ நல்லூர்‌ என்னும்‌ ஊரிலிருந்த 364 வேலி நிலத்தின்‌ தேவதானம்‌, திருவிடையாட்டம்‌, பிடாரிப்பட்டி, துக்கைப்பட்டி, பள்ளிச்சந்தம்‌ உள்பட 44 வேலி நிலம்‌; மகாவிபூதிச்‌ சதுர்வேதிமங்கலத்தின்‌ 12 வேலி நிலம்‌, பட்ட விருத்தி 1 வேலி நிலம்‌, கடிகையார்‌ நிலம்‌ 34 ஆக மொத்தம்‌ 62% வேலிநிலம்‌ நீக்கி மீதமுள்ள 3013 வேலி நிலத்தின்‌ அனைத்து வரிகளையும்‌ அழகியசீயன்‌ அவனியாளப்‌ பிறந்தான்‌ காடவன்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ கொடையாக வழங்கியுள்ளான்‌. இக்கல்வெட்டினை ஆற்றூரிலும்‌, காஞ்சிபுரம்‌ திருவேகம்பமுடைய நாயனார்‌ (ஏகாம்பரநாதர்‌) கோயிலும்‌ வெட்டிக்‌ கொள்ள உத்திரவிட்டுள்ளான்‌. இந்த ஆவணத்தில்‌ கோப்பெருஞ்சிங்கன்‌, குருகுலராஜன்‌, வில்லவராஜன்‌ ஆகியோர்‌ கையெழுத்திட்டுள்ளனர்‌.

1. ஷஹிஸ்ரீ!!॥*1] ஸகஓல"வந ௮௯,வூதி கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு வது தனியூர்‌ பெரும்பற்றப்புலியூர்‌ உடையார்‌ திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகியசீயன்‌ அவனி ஆளப்‌ பிறந்தான்‌ காடவன்‌ கோப்பெருஞ்‌-

2. சிங்கனேன்‌ இன்னாயனார்‌ கோயில்த்‌ தெற்கில்த்‌ திருவாசல்‌ சொக்கச்சீயன்‌ திருநிலை ஏழுகோபுரமாகச்‌ செய்யத்‌ திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட

52

சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்நாட்டு ஆற்றூரான ஈாஜறாஜ நல்லூர்க்கு எல்லை

3. ஈஞ்சலாற்றுக்‌ கீழ்கரைக்கு மேற்க்கும்‌ செய்யாறு நீரோடுகாலுக்கு வடக்கும்‌ வில்லியன்பாக்கத்து எல்லைக்குக்‌ கிழக்கும்‌ சாத்தனம்பாக்கத்தும்‌ கோன்காட்டு எல்லைக்கும்‌ தெற்க்கும்‌ நடுவுள்ப்பட்ட தரப்படி நிலம்‌ முன்னூற்றறுபத்து நால்வேலி இதில்‌ உள்ளூர்த்‌-

4. தேவர்கள்‌ தேவதானங்களும்‌ திருவிடையாட்டங்களும்‌ பிடாரிப்பட்டி துக்கைப்பட்டி பள்ளிச்சந்தம்‌ உள்ப்பட நிலம்‌ நாற்பத்தறு வேலியும்‌ அகரம்‌ ஷோவிஸஹுதிவக”வெ-திமங்கலம்‌ நிலம்‌ பன்னிருவேலியும்‌ செட்டலூர்ப்‌ பிரான்பட்டனுக்கும்‌ மாடபோசை வரதராசபட்டனுக்‌-

5. கும்‌ வங்கிபுறத்து கருணகரபட்டனுக்கும்‌ வடவுர.தி நிலம்‌ ஒரு வேலியும்‌ கடிகையார்‌ இறையிலி நிலம்‌ மூன்றேகாலும்‌ ஆக நிலம்‌ அறுபத்திரண்டேகால்‌ நீக்கி நீக்கி[நின்ற*] நிலம்‌ முன்னூற்றொன்றே முக்காலும்‌ கொல்லைப்‌ புன்சையும்‌ காசாயங்களும்‌ வெட்டி பாடிகாவலும்‌ அரிப்பாடிகாவலும்‌ உள்ப்பட

6. நெல்லாயங்களும்‌ காசாயங்களும்‌ இவ்வூர்த்‌ தேவர்கள்‌ தேவதானம்‌ அகரங்கள்‌ உள்ப்பட்ட இறையிலிகளுக்கு முன்பு கொண்டுவரும்‌ ஆயங்களுள்ப்பட அனைத்தாயங்களும்‌ உள்ப்பட தேவதான இறையிலியாக அஞ்சாவது ஆடி 2ாஸமுதல்‌ ,ாலி.கடவரை செல்வதாக இட்டோம்‌ உடையார்‌ திருவேகம்பமுடைய

7. நாயனார்‌ கோயிலிலும்‌ ஆற்றூரில்‌ திருமுத்திமுமமுடையார்‌ கோயிலிலும்‌ கல்லும்வெட்டி நாற்பால்‌ எல்லையிலும்‌ திருச்சூலஷாபனமும்‌ பண்ணி கோயில்‌(ப்‌) பண்டாரத்தார்க்கு ஏறக்கடமை குடிமை போக்கறுப்பார்களாகச்‌ சொன்னோம்‌[1*] இப்படி செய்வதே இவை கோப்பெருஞ்சிங்க னெழுத்து

8. என்றும்‌ இவை குருகுலராஜ னெழுத்து என்றும்‌

9. இவை வில்லவராஜ னெழுத்து என்றும்‌ வந்த திரு-

10. முகப்படி கல்வெட்டியது

த.நா.௫. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 673,2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 5 செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1248 ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 286/1921

சமஸ்கிருதம்‌ & தமிழ்‌ முன்‌ பதிப்பு து

கிரந்தம்‌ (ம) தமிழ்‌ பிற்காலப்‌ பல்லவர்‌ ஊ.க.எண்‌ : 15 இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌

முக்தீஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு மற்றும்‌ மேற்குச்‌ சுவர்‌.

இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கனை போற்றி புகழ்கிறது, வடமொழியிலான இக்கல்வெட்டு. ஸ்வஸ்திஸ்ரீ - இது மூவுலகத்து அரசர்களுடைய முடிகளிலுள்ள மாணிக்கங்களுக்கு அலங்காரம்‌ செய்வது, பூமியிலுள்ள நரசிரேஷ்டரான (கோநரசிம்மன்‌) கட்கமல்லனுடைய சாசனம்‌. மூன்று உலக அரசர்களுக்கும்‌ தலைவன்‌, எல்லா உலகத்திலுள்ள அரசர்களுடைய தலையிலுள்ள இரத்தினத்தில்‌ தன்னுடைய திருவடித்‌ தாமரைகளை வைத்தவன்‌. சோழ இராச்சியத்தை ஸ்தாபித்தவன்‌, பாண்டிய மண்டலாதிபதி, தொண்டை மண்டலமான தாமரைக்குச்‌ சூரியன்‌ போன்றவன்‌.

கர்நாடகமான சமுத்திரத்திற்கு அகத்தியர்‌ போன்றவன்‌. ஆந்திரமாகிய சமுத்திரத்திற்கு மந்தரமலை போன்றவன்‌. சேதி மன்னனுடைய மலைக்கோட்டைகள்‌, அகழிகள்‌ இவற்றை அழித்து ஜயபேரிகை முழக்கியவன்‌, எதிரி அரசர்களை அமுக்குவதில்‌ இயந்திரப்‌ பொறி போன்றவன்‌, பகை மன்னருடைய பெருஞ்தேவியரின்‌ கன்னம்‌ காது கழுத்து இவற்றிலுள்ள மங்கல அணிகளாகிய நரிகளுக்குச்‌ சுழல்‌ காற்று போன்றவன்‌.

அபிமான துங்கன்‌, சங்கிராமராமன்‌, அசகாயவீரன்‌, ஆகவதீரன்‌, பரத மல்லன்‌, பாரதமல்லன்‌, கட்கமல்லன்‌, பல்லவ குல பாரிசாதன்‌, காடவகுல சூடாமணி, அவநி ஆளப்பிறந்தான்‌, அவனிபாஜன ஜாதன்‌, மங்கள நிலையன்‌, வீர விநோதன்‌, தியாகத்தைச்‌ சுவைப்பவன்‌ (தியாக விநோதன்‌, பகை மன்னன்‌ கண்டகோபாலனின்‌ பண்டாரத்தைக்‌ கவர்ந்தவன்‌ (கண்டபண்டாரலுண்டாகன்‌), பகை மன்னரின்‌ அந்தப்புரத்தைச்‌ சிறைப்பிடிப்பவன்‌ (பரராஜ அந்தப்புர பந்திகாரன்‌), இலக்கியப்‌ பெருங்கடல்‌ (ஸாஹித்ய ரத்நாஹரன்‌), மல்லைக்‌ காவலன்‌ (மல்லாபுரி நாயகன்‌), காஞ்சிக்‌ காவலன்‌ (காஞ்சி புரிகாந்தன்‌), காவிரியை மணந்தவன்‌ (காவேரி காமுகன்‌),

54

பாற்கடலின்‌ பிரிய நாயகன்‌ (க்ஷீராபகா தசஷீண நாயகன்‌), பெண்ணைக்‌ கேள்வன்‌ (பெண்ணா நதி நாயகன்‌), கநக சபாபதி, சபா சர்வகார்ய ஸர்வகால நிர்வாகன்‌, கோப்பெருஞ்சிங்கன்‌ (கோபிருது சிம்ஹமகாராஜ :) ஸகலபுவன சக்கிரவர்த்தி.

கட்கமல்லனான அரசன்‌ தொண்டை மண்டலத்திலுள்ள அரசர்களால்‌ பிரசித்தமான இராசராசநல்லூர்‌ ஆகிய ஆத்தூர்‌ நகரத்தையும்‌, ஆளுடைய நாயனாருக்கு வெளிக்கோபுரம்‌, மதில்‌ இரு சுடரளவும்‌ நிகழ்த்துவதற்குரிய பூசை முதலியவற்றையும்‌ செய்வித்தனன்‌.

எல்லா அரசர்களிடமிருந்தும்‌ திறைபெறும்‌ ஜகதேக வீரனான கட்கமல்லன்‌ பூமியை ஆண்ட காலத்தில்‌ காஞ்சி கைப்பற்றப்பட்டது. அங்கம்‌ கலங்கியது. மத்திய தேசம்‌ முறியடிக்கப்பட்டது. அளகாபுரி மிகவும்‌ நடுங்கியது.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ[॥*] ௨வஊ.கதெ.கொக் லூவால செளலி1ாணிகணை நட *] ஸ்ரீக மொநறஸஹிஹஸட வடி“ம2ஓஸு மாஸகம்‌।। திவ லூவாஸ நாயக ஹஹ முவந ஷூவகி வூஜா2ணி வாவி ௨.கிஷிக வா_வகஜ மொ வ௨,கிஷாவாய*: வாண ணமற ஹொணீ௱ வாணறீக ஊாதரா-

2. ண: கணுாாடாண*/வ ௯-டிலடிலவ: சூஷரஸிஷ நாவ ரெர லி மாஜமிறி உழ நிவாக லெறிலாகாற: வ௱றாஜவடநவறட: வறமணகணீூறவ மணவணவெறஈணவண றக: கஷி£ா.ந.த-௩௨ம ஹமாரா: ௬[ஸஹாய][வீ]ம சூஹவமீரறொ லாக2ஞஜொ லாக:

3. 2: வஓவக வாறிஜாக: காடிவகாலஓ வூலா2ணி ௬வ நிவாஓநஜாகொ 2ஊமஒமிஓயொ விறவிகொ[உ]ஷுூா.௰வி0(௧]கொ மணலஷாற ணாக: வறறாஜாக:வ வரிகா௱ ஹாூஹிக, [11] கரகறொ லாவ -ரறி-

4. . வலம: காவை மீகா: காணெறீகா?-க: க்ஷீர£வமா ஒக்ஷிணநாயக: வெஷாமக& நாம: கநகஸலமாவகி ஸமாஹவ*காய* ஸ[வ3]காஓஒிிவுஹகொ மொவரம ஹிஹ 2ஊஹாறமாஜ

ஹெகல்‌ வேருவகூ, வதி? கர கெழுமாய

55

மஜ வு

14.

15.

வஃறமொவ-ற ஹாஓவஜா ஊாவந,காற2விலஞாண உள விமாக-௩[|*] கொணீற ஊல 2ஹீகஓ மாஜமாஜவறாக ஞூீ.நநவ௦ கறவாஸூஓ: [॥1*] ஸ்ரீஜ2ஜெ: ஜம கவீறெ ஸொக-ு

கறம ரஹிணி ஹுூகமாகதி,_ட[1*] காவிீவர.கா கஷவிக2ஃம ஜெய"

மெடாதில முமழலி கொஸகா(லஷ: ॥௨ கோப்பெருஞ்சிங்கன்‌ ஒலை ஆற்றூர்‌ ஊரவர்‌ கண்டு விடு தந்ததாவது

ஷஹிஸ்ரீ

ஆற்றூர்‌ ஊரவர்க்கு

. நினைப்பு . தங்களூர்‌ ஐஞ்சாவது ஆடி ஈஸமுதல்‌ ஆளுடைய நாயனார்க்குத்‌ தேவதானமாக . அனைத்தாயங்களும்‌ உட்பட தேவர்‌ திருமுகம்‌ குடுத்தருளினபடியே ஊர்‌

காவல்ப்பே[ர்‌]

. கொள்ளும்‌ காவல்ப்பேறு நீக்கி நாங்கள்‌ கொள்ளக்கடவ அரிப்பாடிகாவல்‌

. ஆளுடைய நாயனார்க்கு நீர்வார்த்துக்‌ குடுத்தோம்‌ இப்படிக்குத்‌ தங்களூரில்‌

கோயிலிலே கல்லுவெட்டிவித்துக்‌ கொள்வதே இவை நீலகங்கரய னெழுத்து என்று

பிள்ளையார்‌ பஞ்சநதிவாணனான நீலகங்கரயர்‌ மாஸனப்படி கல்வெட்டியது

த.நா.௮, ஒதால்லியல்‌ துறை

தெர்‌ எண்‌: 624017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 3

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1253

ஊர்‌ : ஆத்தூர்‌ I இ.க.ஆ. அறிக்கை : 300/1921

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு து

எழுத்து : தமிழ்‌

அரசு : தெலுங்குச்‌ சோழர்‌ ஊ.க.எண்‌ : 16

அரசன்‌ : அல்லுந்திக்கரசர்‌ கண்டகோபாலன்‌

கம்‌ : கல்யாண வரதராஜ பெருமாள்‌ கருவறை கிழக்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : தெலுங்குசோழ மன்னன்‌ அல்லுந்திக்கரசர்‌ ஆட்சியின்போது ஆற்றூர்‌ என்னும்‌ இராசராச நல்லூர்‌ ஊரைச்‌ சார்ந்த மாம்பாக்கம்‌ ஊர்த்தலைவன்‌ திருக்கைச்‌ சாலை உடையார்‌ என்கிற தழுவக்குழைந்தான்‌ பட்டன்‌ என்பவன்‌ திருவூரகத்து எம்பெருமான்‌ கோயிலுக்குத்‌ தானமளித்தச்‌

செய்தி.

கல்வெட்ரு :

1. [திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ அல்லுந்திக்கரசர்‌ கண்டகோபால தேவர்க்கு

யாண்டு வது

2. ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான இராசராச

3. நல்லூர்‌ மாம்பாக்கிழான்‌ திருக்கைச்சாலை உடையாரான தழுவக்‌

குழைந்தான்‌ பட்டந்‌ திருவூரகத்தெ-

4. ம்‌ பெருமான்‌...

57

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧75/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : -

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : -

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு பத

எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 17

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு முப்பட்டைக்‌ குமுதம்‌.

குறிப்புரை : கல்வெட்டின்‌ பெரும்‌ பகுதி சிதைந்து எழுத்துகள்‌ மறைந்துவிட்டன. இக்கோயிலுக்கு விளக்கெரிக்கத்‌ தானமளித்தச்‌ செய்தி. முழுவிவரம்‌

அறிய இயலவில்லை.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராசராசதேவற்கு யாண்டு . . .

2. செங்காட்டுக்‌ கோட்ட .. .

த்‌ க்கு எரிக்க கடவேனாக ....

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 626,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : -

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 13- நூற்‌ ஊர்‌ ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 299/1921 பொழி ; தமிழ்‌ முள்பதிப்பு ; -

எழுத்து : தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 18

அரசன்‌

கடம்‌ முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வெளிப்புற கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : சிதைந்த இக்கல்வெட்டின்‌ மூலம்‌ தானத்தாரும்‌ மாஹேஸ்வரரும்‌

கைக்கோளரும்‌ பெற்ற தானம்‌ பெற்ற செய்தி. சிலருடைய பெயர்கள்‌ காணப்படுகின்றன.

1. [மராஹெசுரரும்‌ கைகோளரும்‌ கைகோளமுதலிகளும்‌ . . .... எம்மிலி .... . பனு. றத ரைத்‌ ரையன்‌ மகன்‌ நல்லனாயன்‌

3. ம்‌இக்கோலே ...... முன்பே முதல்மையும்‌ வரிசை

4. முதலாக்கு முன்புக்‌ குறை குறை அறுபட்ட முக . . சாத்து . குறைத்து ... . 5. முன்பு இவன்‌ வேண்ட தாமும்‌ பெற்று இவன்‌ வாசலிலே கைக்கொண்ட

னககள்‌ குடுத்தோம்‌ ஆற்றூரிலே தாநதாரும்‌ மாஹே த்்றிுல்ல்கக்‌ இவை மாஹேசுரரெழுத்து இவை ஆற . . ல்‌ போன்ல தெளுரையன்‌ எழுத்து இவை . . 9. ன்‌ ஆற்றூர்‌ .... ..... எழுத்து இவை 10. இவை தொண்டைமா ....... த்தரயன்‌ எழுத்து இவை IE soo தரையனெழுத்து இவைச்‌ சதிரந்‌ ஆண்ட சாமுண்டப்‌ பேரரையன்‌ ....

12. இவை பொன்னு ..கச்சி.....

த.நா.௮. ஏதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 67/72017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 14-நூற்றாண்டு ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 294/1921

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 3

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 19

அரசன்‌ : மாறவர்மன்‌ திரிபுவன வீரபாண்டியதேவர்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ எனும்‌ இராசராசநல்லூர்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ கோயில்‌ சிவபிராமணர்களிடம்‌, இவ்வூரைச்‌ சார்ந்த உடையூர்‌ ஊர்த்‌ தலைவன்‌ திருவேகம்பமுடையான்‌ அழகிய திருவானைக்காவுடையான்‌ என்பவன்‌, இக்கோயிலில்‌ 17% சந்தி விளக்கெரிக்க 4 பசுவும்‌ கன்றும்‌ வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ கோமாறபன்மர்‌ திரிபுவனச்‌ சக்கரவற்த்‌- 2. திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய தேவற்க்கு யாண்டு பன்னிர- 3. ண்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 4. ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூ- 5. ரான இராசராச நல்லூர்‌ உடையார்‌ திருமுத்தீசுரமு- 6. டைய நாயனார்‌ கோயில்‌ மரிவவ,ரஹணரில்‌ 7. மவுதும கோ,குத்து மலையாழ்வான்‌ உை 8. டயபிள்ளையான ஆறை நாயக பட்டன்‌ உள்ளிட்டா-

9. ரோம்‌ இவ்வூர்‌ உடையூர்‌ கிழவன்‌ திருவேகம்‌-

60

10. 11. 12. 13. 14. 15. 16. 17.

பமுடையான்‌ அழகிய திருவானைக்கா- வுடையார்‌ இந்நாயனார்க்கு இவ்வாண்டை புரட்டாதி மாதம்‌ வைத்த சந்தி டூ விளக்கு இவ்விளக்‌ கொன்றரைக்கும்‌ இவர்‌ பக்கல்‌ கை- க்கொண்ட பசுவுங்‌ கன்றும்‌ உரு நாலு இவ்வுரு நாலுங்‌ கைக்கொண்டு சந்திரா- தித்தவரை இவ்விளக்கு ஒன்றரையு-

ம்‌ இன்னாள்‌ முதல்‌ எரிக்கக்‌ கடவோம்‌ ஆறை

61

த.நா.அ. எதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 626,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 10

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1350

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 281/1921

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 20

அரசன்‌ : இரண்டாம்‌ மாறவர்மன்‌ (திரிபுவன சக்கரவத்தி வீரபாண்டியன்‌)

கடம்‌ 3: முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு வெளிப்புறச்சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ என்கிற இராஜராஜநல்லூர்‌ ஊரில்‌ உள்ள திருமுத்தீசுர முடைய நாயனார்‌ கோயிலில்‌ புரட்டாதி மாதத்தில்‌ ஒன்பது கைக்கோளர்கள்‌ 44 பணம்‌ பெற்றுக்கொண்டு தங்கள்‌ உபயமாக நடத்தி வந்தனர்‌. திருக்காரொளி நாள்‌ திருவிழாவினை எடுத்தான்‌ என்கிற காலிங்கராயன்‌ எண்பவனும்‌, இரண்டாம்‌ திருநாள்‌ சிற்றம்பலவன்‌ என்பவனும்‌, மூன்றாம்‌ திருநாள்‌ பெருமாள்‌ என்கிற தொண்டைமண்டலக்‌ காங்கேயன்‌ என்பவனும்‌, நான்காம்‌ திருநாள்‌ வத்தராயன்‌ மகள்‌ முதலிச்சி என்பவளும்‌, ஐந்தாம்‌ திருநாள்‌ அறமளத்தான்‌ என்கிற கண்டியதேவன்‌ என்பவனும்‌, ஆறாம்‌ திருநாள்‌ திருநட்டப்பெருமாள்‌, ஏழாந்‌ திருநாள்‌ வல்லானை வென்றான்‌ என்பவனும்‌, எட்டாம்‌ திருநாள்‌ பாசன்‌ என்பவனும்‌, ஒன்பதாம்‌ திருநாள்‌ காவன்‌ தொண்டைமான்‌ என்பவனும்‌ ஒன்பது திருநாள்களையும்‌ நடத்தி வந்துள்ளனர்‌. இக்கோயில்‌ காணியுடைய சிவபிராமணர்கள்‌ 175 பணம்‌ பெற்றுக்கொண்டு, இந்த ஆண்டு புரட்டாசி மாதம்‌ முதல்‌ ஒன்பது நாள்‌ திருவிழாவினைத்‌ தாங்களே நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்‌. கல்வெட்ரு : 1. ஷஷிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக கோமாறபன்மர்‌ திருபுவன சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு வது கன்னி நாயற்று பூவ*வக்ஷத்து திதிகையும்‌ வெ-

62

2. ள்ளிக்கிழமையும்‌ பெற்ற உத்தரத்து நாள்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து

10.

11.

ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூரான இராஜராஜ நல்லூர்‌

. உடையார்‌ திருமுத்தீசுரமுடைய நாயனார்‌ கோயில்‌ நாள்‌ முப்பது வட்டத்துக்‌

காணியுடைய பமிவவராஹணரில்‌ அப்பனான தழுவக்குழைந்த பட்டனுள்ளிட்டார்‌ முத-

லியான நாற்பத்தெண்ணாயிர பட்டனுள்ளிட்டோரும்‌ உடையானான ஆறை நாயக பட்டனுள்ளிட்டாரும்‌ இவ்வனைவோம்‌ இன்னாயனாற்கு புரட்டாதித்‌ திருநாளெழுந்தருளின முன்னா-

. எள்‌ உபையங்‌ கொண்ட இவ்வூரிற்‌ கைக்கோளரிற்‌ திருக்காரொளி நாள்‌

எடுத்தானான காலிங்கராயனும்‌ இரண்டாந்‌ திருநாள்‌ சிற்றம்பலவனும்‌ மூன்றாந்‌ திருநாள்‌ பெரு-

. மாளான தொண்டை மண்டலக்‌ காங்கேயனும்‌ நாலாந்‌ திருநாள்‌ வத்தராயன்‌

மக[ள்‌] முதலிச்சியும்‌ அஞ்சாந்‌ திருநாள்‌ அறமளத்தாநான கண்டிய தேவனும்‌ ஆறாந்‌ திருநா-

. ள்‌ திருநட்டப்‌ பெருமாளும்‌ ஏழாந்‌ திருநாள்‌ வல்லானை வென்றானும்‌ எட்டாந்‌

திருநாள்‌ பாசனும்‌ ஒன்பதாந்‌ திருநாள்‌ காவன்‌ தொண்டைமானும்‌ இவர்கள்‌ உபையமாக எழுந்தருளுவித்துப்‌

. போந்த இன்னாள்‌ ஒன்பதுக்கு நிச்சயித்த பணம்‌ ௪௰௪ இப்பணம்‌ நாற்பத்து

நாலும்‌ இன்னாள்‌ ஒன்பதுக்கும்‌ இவ்வாண்டைப்‌ புரட்டாதி மாத முதலாக இத்திருநாள்‌ நாங்களே உப-

. யமாகக்‌ கைக்கொண்டு சந்திறாதித்தவரையும்‌ நாங்களே எழுந்தருளிவிக்கக்‌

கடவோமாகச்‌ சம்மதித்து இவ்வாண்டை புரட்டாதி மாத முதல்‌ கைக்கொண்ட பணம்‌ ஈஎ௰ரு

இப்பணம்‌ நூற்றெழுபத்தஞ்சும்‌ கைக்கொண்டு சந்திராதித்தவரையும்‌ எழுந்தருளிவிக்க கடவதாகச்‌ சம்மதித்து சிலாலேகை பண்ணிக்‌ குடுத்தோம்‌ இக்கோயிற்‌ சிவப்பிராமண- ரோம்‌ புரட்டாதித்‌ திருநாள்‌ பாசன்‌ கொண்ட உபையம்‌ எட்டாந்‌ திருநாள்‌ இவன்‌ பேர்கட்டுப்‌ போகையில்‌ இக்கோயிலிற்‌ தேவரடியாரில்‌ முத்தாண்டை மகள்‌ முதலிச்சிக்கு என

. இவை தழுவக்குழைந்த பட்டன்‌ எழுத்து இவை நாற்பத்தெண்ணாயிர பட்டன்‌

எழுத்து இவை ஆறைநாயக பட்டன்‌ எழுத்து இவை பிள்ளையான்‌ எழுத்து இவை காமப்பிள்ளை எழுத்து.

63

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 629,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1349 ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : - பொழி; தமிழ்‌ முன்பதிப்பு : -

எழுத்து : தமிழ்‌

அரசு : விஜயநகரப்‌ பேரரசு ஊ.க.எண்‌ : 21

அரசன்‌ : வீரசாயண உடையார்‌

இடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபக்‌ கிழக்கு வெளிச்சுவர்‌.

குறிப்புரை : ஆற்றூரான இராசராச நல்லூர்‌ உடையார்‌ திருவகத்தீசுரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ மூலதனம்‌ இல்லாததால்‌ தானத்தாரும்‌ ஸ்ரீமாஹேஸ்வரரும்‌ தம்பிரானிடம்‌ (மன்னர்‌) திருமுகம்‌ வாங்கி, திருநாமத்துக்காணியாக நிலம்‌ விட்டுள்ளனர்‌. கல்வெட்ரு : 1. ஷஹஹிஸ்ரீ திருவாய்க்‌ கேழ்வி முன்னாக ஸ்ரீ வீரஸாயண உடையார்க்கு 2. யாண்டு ௰௨ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டு கோ-

3. [ட்ட]த்து ஆற்றூர்‌ நாட்டு ஆற்றூர்‌ ஆன இராசராச நல்லூர்‌ உடையார்‌ திரு

அ[கத்தி]-

4. சுரமுடைய நாயன்நார்‌ கோயில்‌ தானத்தாரும்‌ ஸ்ரீவாஹேமாரும்‌ இவ்வனை [வ]-

5. ரோம்‌ இந்த நாயனார்‌ திருநாமத்துக்காணி ஆனது தம்பிரானார்‌ திருமுகபடி இறை]-

6. யிலியும்‌ மாறி இந்நிலமும்‌ ஊருடனே ஊர்‌ படும்‌ [மதநீரநி]பேர்‌ அத்‌ . . .

7. இசைக இதுக்கு பயிர்‌ முதல்‌ போக்கின இவை வரிப்போக்கி திருத்‌ . . .

8. தேவக்காணியாய்‌ எங்கள்‌ பேரில்‌ கா[ணி]மாறின நிலத்துக்குத்‌ தீர்த்த

9. . ல்‌ ஊர்‌ வாசல்ப[ண]ம்‌ என்று சொல்லி இட்டு எங்களை தெருவி... . 10. . கையனா . . .ம்‌ எங்களுக்கு இவரும்‌ சொல்ல இண்ணாதியும்‌ ஆலு 11. முதலிலாதபடி ஆலும்‌ . . . . கையித்‌ தெண்ணிர்யம்‌ கைக்கொண்டு முதலு . . 12. வரையும்‌ கூட்டியிந்த திருநாமத்துக்காணி . . ...

64

த.நாஅ. தால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 680,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : பிராமதிவருஷம்‌ வட்டம்‌ செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1404 ஊர்‌ ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 4

எழுத்து : தமிழ்‌

அரசு விசயநகரப்‌ பேரரசு ஊ.க.எண்‌ : 22

அரசன்‌ : இரண்டாம்‌ புக்கணன்‌

இடம்‌ முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடபுறச்சுவர்‌.

குறிப்புரை : கல்வெட்டுச்‌ சிதைந்துள்ளது. திருவகத்தீசுரமுடைய நாயனார்‌ திருமடை

விளாகத்தில்‌ தலை, இடை, கடை வசிப்பவர்களிடம்‌ தறி ஒன்றுக்கு கடமை 4 பணமும்‌, ஆயம்‌ 2 பணமும்‌ அளிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1. ஸ்ரீ 8௯ மகாமண்டலீசுரன்‌ அரியண உடையார்‌ குமாரர்‌ புக்கண உடையார்‌ செல்லா

2. நின்ற பிறமாதி வருடம்‌ ஆவணி மாதம்‌ இருபதாந்தியதி உடையார்‌ திருவகத்தீசு-

3. ரமுடைய நாயனார்‌ திருமடை விளாகத்தில்‌ தலை யிடை கடையில்‌ இவ்வருஷ

ட்ட லல்ல ந்த படிக்கு தறிபணமிறுத்து கடமை நாலு பணமும்‌ ஆயம்‌ இரண்டு பணமும்‌ கொள்ளக்கடவ தாக[வு]

பத சதக வந்து ஏறும்‌ குடிமை முதல்‌ [கடமை] முதல்‌ சந்திராதித்த வரையும்‌ கொள்ளக்கடவது ஆகவும்‌

65

9. ... ழித்து . . . . அன்றும்‌ சொல்லக்‌ கடவது அலமளைகவும்‌ இந்த கல்வெட்டும்‌ படி[யும்‌ அ]ழிய 10. [அ]குதய நினைத்தார்‌ உண்டாகில்‌ கெங்கைக்‌ கரையில்‌ காராம்‌ பசுவை கொன்ற 11. பாவம்‌ கொள்ள கடவது ஆகவும்‌ இப்படிக்கு [அடை ]குத்தவுஞ்‌ சாழகுடி ஏறவும்‌ 12. ஸ்ரீகாயெசுர ரணக்ஷஷ !-

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 681,201

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : - வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : - ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : - மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 23 அரசன்‌ டத்‌

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வடக்குச்சுவர்‌.

குறிப்புரை : விஜயநகர மெய்க்கீர்த்தியின்‌ ஒரு சிறு பகுதி மட்டுமே உள்ளது. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ ஹா மணலெமார அரியராய விபாட பாஷை-

2. க்கு தப்புவராயர்‌ கண்டன்‌ எம்மண்டலமு கொண்ட ராய கட்டாரரி] ..... ்‌

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6822017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : -

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : -

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து ்‌

அரசு தத ஊ.க.எண்‌ : 24

அரசன்‌ I

இடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வடபுற வெளிச்சுவர்‌.

குறிப்புரை : சிதைந்த இக்கல்வெட்டில்‌ ஸ்ரீமாஹேஸ்வரரும்‌ தானத்தாரும்‌ மனை பத்திரரும்‌ கைக்கோளரும்‌ கைக்கோள முதலிகளும்‌ கூறப்படுகின்றனர்‌. கோயிலுக்குச்‌ சந்திராதித்தவரை அனுபவிக்க நிலம்‌ வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்ரு : 1. திருக்‌ . . ளும்‌ இதிற்பெறும்‌ தரமும்‌ வரிசையும்‌ சந்திராதித்தவரையாகப்‌ பெறக்கடவராக

2. . . . குடுத்தோம்‌ ஸ்ரீமாஹேராரும்‌ தானத்தாரு[ம்‌] மனைபத்திரரும்‌ கைக்‌ கோளரும்‌

3. . . . கைக்கோள முதலிகளும்‌ ஸ்ரீமாஹேறாஈ

த.நா.௮. எதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6838/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : கலி4987

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1885

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

எழுத்து : தமிழ்‌

அரசு : ஊ.க.எண்‌ : 25

அரசன்‌ தக

கடம்‌ 3 கல்யாண வரதராஜ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வெளிச்சுவர்‌ தென்புறம்‌.

குறிப்புரை : கலி வருடம்‌ 4987-ஆம்‌ ஆண்டு பார்த்திப ஆண்டு ஆனி மாதம்‌ 13-ஆம்‌ தேதி (கி.பி. 1885) இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்பதைத்‌ தெரிவிக்கிறது. கல்வெட்ரு : 1. கலி ஞு ௪௯௮௭ம்‌ பார்திப ஞூ ஆனி மீ” ௧௩ 2. சம்புறஷணை செயிதது. இடம்‌ : முன்‌ மண்டபத்தூண்‌

1885

* கலி வருடமும்‌ ஆங்கில ஆண்டு1885-ம்‌ சரியாக உள்ளது.

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 682017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : -

வட்டம்‌ : செங்கற்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1917

ஊர்‌ : ஆத்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை 1 5

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 5

எழுத்து : தமிழ்‌

அரசு 3 5 ஊ.க.எண்‌ : 26

அரசன

கடம்‌ : முக்தீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ நுழைவாயில்‌ தெற்குச்சுவர்‌.

குறிப்புரை : இக்கோயில்‌ (30.8.1919 அன்று) பிங்கள வருடம்‌ ஆவணி மாதம்‌ 15ஆம்‌ தேதி கும்பாபிஷேகம்‌ நடைபெற்றுள்ளது.

கல்வெட்ரு : 1. பிங்கள ஷ்‌ ஆவணி மாதம்‌ 15 2. கும்பாபிஷேகம்‌ நடத்த 3. தப்பட்டது. 4. 30.8.1917

த.நா... வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 685,017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 3

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி.910 ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 40/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 1

அரசன்‌ : பரகேசரிவர்மன்‌ (முதலாம்‌ பராந்தகன்‌)

டம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ கிணற்றின்‌ மேல்‌ உள்ள கல்‌.

குறிப்புரை : ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து பெரும்பாலையூர்‌ நாட்டு பெரும்பாலையூர்‌ மகாதேவர்‌ திருப்பனங்காடுடையார்‌ கோயிலில்‌ திருநந்தா விளக்கெரிக்க திருப்பாலையூர்‌ ஊர்த்‌ தலைவனின்‌ மகள்‌ காடாவி என்பவள்‌ தானம்‌ வழங்கியுள்ளாள்‌.

2. பர[கே*]சரி ப- 3. நற்கு யா-

4. ண்டு ௩-ஆ- 5. வது ஊ-

6. ற்றுக்காட்டு-

7. க்கோட்ட-

8. த்துப்‌-

9. பெரும்பா-

10. லையூர்‌ நாட்டு- 11. ப்‌ பெரும்பா-

FA

23.

. லையூர்‌ ஊ-

. ஹாமேவர்‌

. திருப்பனங்‌-

. காடுடையார்‌-

. க்கு இவ்வூர்‌-

. த்‌ திருப்பாலை- . யூர்‌ கிழவந்‌

. [மகள்‌] காடவி . வத்த] நந்‌

. தா வி[ளக்கு] . (அடுத்த சில வரிகள்‌

கட்டடத்துக்குள்‌ மறைந்துள்ளன.) ஞ்ச

24. ந்தி 2.ரா 26. தி 27. த்‌ 28.த 29. 30.எள்‌ 31. 33. வு 34. [ம்‌] 35. வை 36. த்த 37. [து]

த.நா.௮. எதால்லியல்‌ துறை தார்‌ எண்‌: 686017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 38

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி, 1108 ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 27/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌.

குறிப்புரை : முதல்‌ இரு வரிகள்‌ வீரமே துணையாகத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்தி வீரராசேந்திரனுக்கு உரியதாகும்‌. அதனைத்‌ தொடர்ந்து முதலாம்‌ குலோத்துங்கனின்‌ புகழ்மாது விளங்க என்னும்‌ மெய்க்கீர்த்தியோடு இடம்பெறுகிறது இக்கல்வெட்டு. ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து பாலையூர்‌ எனும்‌ இராசேந்திரசோழ நல்லூர்‌ திருபதங்காடு மகாதேவர்‌ இறைவனுக்கு விளக்கெரிக்க மைய்யூர்‌ நாட்டு இராசேந்திரபுரத்து எண்ணெய்‌ வாணியர்‌ (சங்கரபாடியார்கள்‌) எண்ணெய்‌ தானமாக வழங்கியுள்ளனர்‌.

கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ ॥- வீரமே துணையாக தியா- 2. கமேயணியாகவும்‌ செங்கோலாக்கி கருங்கலி கடி புகழ்‌- 3. மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகனிலவ மலர்‌ [மகள்‌] 4. புணர உரிமையிற்ச்‌ சிறந்த மணிமுடிசூடி மீனவர்‌ நிலைகெட 5. வில்லவர்‌ குலைத்தர . . .

6. தன்‌ சக்கர நடாத்தி விஜையாஷிஷெகம்‌ பண்ணி வீரஸிஹாஸநத்து புவன-

7. முழுதுடையாளோடும்‌ வீற்றிருகருளிய ௪௯, வத்திகள்‌ ஸ்ரீகுலே[ாத்துங்க- 8. சோழ] தேவற்கு யாண்டு ௧௰.௮ முப்பத்தெட்டாவது ஜயங்‌[கொண்டசோழ] 9. மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூரான

10. ஈாசேந்திரசோழ நல்லூர்த்‌ திருப்பதங்காடுடைய மஹாசெவர்க்கு இக்‌- 11. கோட்டத்து மைய்யூர்‌ நாட்டு மாஜெஷ, சோழபுரத்துச்‌ சங்கரபாடியார்‌ வா- 12. ணிய...

தததி

14. கொற்றஞை அகத்தி செல்வநும்‌ குமாரை நல்லூரு . . .

15. திரும்புலியும்‌ கவிசிசூற்றி ஆழ்வானும்‌ குளத்தூழா . . .

16. மும்‌ உள்ளிட்ட நகரத்தோம்‌ இஜெவர்க்கு நாங்கள்‌ வைத்த . . . தங்‌- 17. களூரில்‌ ஆடின செக்கில்‌ காணத்துவாய்‌ ஒரு பிடிகொள்ள மு . . .

18. யண்ணை முகவ கொண்டு ரதித்தவற்‌

74

த.நா.௮. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌: 687/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 5

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி.1123 ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 33/1932-33 பொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த்து

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 3

அரசன்‌ : விக்கிரமசோழன்‌

கடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூர்‌ என்கிற இராசேந்திரசோழ நல்லூர்‌ திருப்பதங்காடு உடைய மகாதேவர்‌ கோயிலுக்கு, அமாவாசை அன்று யாத்திரை மேற்கொண்டு இறைவனைத்‌ தரிசிக்க வரும்‌ பிராமணர்களுக்கு ஆசாரசீலன்‌ மடத்தில்‌ உணவளிப்பதற்காக, சோழ மண்டலத்து பாண்டிகுலாசனி வளநாட்டு குறிச்சி ஊரைச்‌ சார்ந்த அபிமானமேரு பல்லவரையன்‌ என்பவன்‌ மடப்புறமாக நிலம்‌ ஒன்றினை

வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஹு£ பூமாது புணரப்‌ புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப

தந்நிருப

2. மன்னவர்சூட மன்னிய உரிமையால்‌ மணிமுடிசூடிச்‌ செங்கோலோச்சி

திசைதோறும்‌ வளர்ப்ப வெங்கலி கடிந்து

3. மெய்யறுந்தழைப்ப கலிய கடமலை நடாத்தி விளங்கோளாழி வறையாழி 4. இருசுடரளவும்‌ ஒரு குடை . . . முக்கோக்கிழாநடிகளோடும்‌ வீற்றிருந்தருளிய

கோவி[ராச] கே-

5. சரி ஸ்ரராந திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவிக்கிரமசோழ மேவர்க்கு யாண்டு

ஐஞ்சாவது ஐயங்கொ-

75

[0]

. ண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூராந

~

மாஜேஷ,சோழ நல்லூர்‌ ஸ்ரீதிருப்பதங்காடு உடைய ஹாசெவர்‌ கோயிலுக்கு சோழமண்டலத்து

8. பாண்டிகுலாசனி வளநாட்டு . . . குறிச்சிக்‌ குறிச்சி உடையாந்‌ அரியந்‌ திருச்சிற்றம்பலமு-

9. டையாநாந அபிமாநமேருப்‌ பல்லவரையநேன்‌ இக்கோயிலிலே அபூர்வி ஆண்டார்களுக்கு

10. அமாவாஹி அமுர்து செய்கைக்கு ஆசாரசீலந்‌ மடத்துக்கு மடப்புறமாக களத்தூர்‌ கோட்டத்துச்‌

11. செங்குன்ற நாட்டு செங்குன்றமாந அருமொழிதேவ நல்லூரில்‌ காணி உடைய செங்குன்றங்‌ கிழா

ல்‌ வவ கதக்த்த கடக 2 அட அதத ன்‌ * சிமெண்ட்‌ பூசப்பட்டுள்ளது

த.நா.௮. எதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 688/2017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 24 செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1202 பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 37/1932-33 தமிழ்‌ முன்‌ பதிப்பு ix

தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 4

மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபக்‌ கிழக்குச்‌ சுவர்‌.

கல்வெட்டு வரிகளின்‌ இறுதிப்பகுதி கட்டடப்‌ பகுதிக்குள்‌ மறைந்துள்ளது. இக்கோயிலைச்‌ சார்ந்த சிவப்பிராமணர்கள்‌ இருவர்‌ இவ்வூரினர்‌ சிலரிடமிருந்து இரண்டாயிரம்‌ குழி நிலம்‌ மற்றும்‌ கிணறு ஒன்றும்‌ பெற்றுக்கொண்டு, இறைவன்‌ முன்‌ இரண்டு திருநந்தா விளக்குகள்‌ விளக்கெரிப்பதாகச்‌ சம்மதித்து உடன்படிக்கைச்‌ செய்து கொடுத்துள்ளனர்‌.

1. ஷஹஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ மதுரையுங்‌ கருவூ-

2. ரூம்‌ பாண்டியன்‌ முடித்தலையுங்‌ கொண்டருளின குலோத்துங்க சோ-

3. ழதேவற்கு யாண்டு இருபத்து நாலாவது ஜஐயங்கொண்டசோழ-

4. ண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு

5. பாலையூரான இராஜேன்திரசோழ நல்லூர்‌ உடைய . . .

6. ணியுடைய சிவப்பிராமணன்‌ காக்கு நாயக பட்டன்‌ மகன்‌ . .

7. எண்டார்‌ பட்டனும்‌ திருவேகம்பமுடையான்‌ பட்டன்‌ மகன்‌ . .

8. ந்தான்‌ பட்டனும்‌ இவ்விருவோம்‌ இவ்வூர்‌ பிரிந்த செம்பியன்‌ திற . .

77

9. க்கிழான்‌ ஆதித்தன்‌ திவாகர தேவனுந்‌ தம்பிமாரும்‌ இன்னாயனாற்கு வை

10. எக்கு இரண்டுக்கு இவ்வூரிலிவர்கள்‌ காணியான நிலத்து . . . 11. லால்‌ நாங்கள்‌ கைக்கொண்ட நிலமாவது ஏரிகீழ்‌ ஒற்றியூர்‌ தங்‌ . . .

12. லும்‌ குழி எண்ணூற்று நாற்பதும்‌ மண்டைசெறு தடி இரண்டினாற்‌ குழி நானுற்று முப்பது . . .

13. திருநந்தா விளக்குப்பட்டி கொள்ள இவர்கள்‌ பக்கல்‌ நாங்கள்‌ காசு கொண்டு

14. . . . செல்வன்‌ பக்கல்‌ முதியாற்றுப்‌ பள்ளத்தில்‌ கொண்டுடைய உத்தமசோழன்‌ விட்ட நில . . .

15. குழி எழுநூற்று முப்பதும்‌ தென்‌ வடதலைக்‌ கண்டறும்‌ . . . மூன்றோபாதியுங்‌ கரையும்‌ நீரோடு . . .

16. ண்டாயிரமுங்‌ கிணற்றில்‌ மூன்றோ பாதியும்‌ . . . மிகுதி குறைவு உள்பட . . கைக்கொண்டு நாங்கள்‌ எரிக்கத்‌ . . .

17. விளக்கு இரண்டும்‌ சந்திராதித்தவரைக்‌ எரிக்கக்‌ கடவேனாக சம்மதித்து இன்னிலமுங்‌ கிணறுங்‌ கைக்கொண்டோ . . .

18. பண்ணி காக்கு நாயக பட்டன்‌ மகன்‌ உய்யக்கொண்டான்‌ பட்டநும்‌ திருவேகம்பமுடையான்‌ பட்‌[டன்‌ மகன்‌ தழுவக்குழைந்‌]. . .

19. தான்‌ பட்டனும்‌ இ[வ்‌]விருவோம்‌ இப்படிக்கு இவை காக்கு நாயக பட்டன்‌ மகன்‌ உய்யக்கொண்டான்‌ . . .

20. க்கு இவை திருவேகம்பமுடையான்‌ பட்டன்‌ மகன்‌ தழுவக்‌ குழைந்தான்‌ பட்டன்‌ எழுத்து

த.நா. தால்லயல்‌ துறை

தொடர்‌ எண்‌: 689/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 29

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1207-08 ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 29/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 5

அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : சோழ மன்னன்‌ மூன்றாம்‌ குலோத்துங்கனின்‌ அதிகாரி நந்தியராயன்‌

என்பவன்‌ ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூர்‌ என்கிற இராசேந்திர சோழ நல்லூர்‌ திருப்பதங்காடுடையார்‌ கோயிலுக்குரிய திருநாமத்துக்காணி, தேவதானம்‌ ஆகிய நிலங்கள்‌ மீது வசூலிக்கப்படும்‌ வரிகள்‌, தறிஇறையாகப்‌ பெறப்படும்‌ காசு, செக்குக்குடியினர்‌ கொடுக்கும்‌ எண்ணெய்‌ மற்றும்‌ காசுகள்‌ ஆகியவற்றினை, இக்கோயில்‌ இறைவனின்‌ பூசைக்கும்‌, கோயில்‌ திருப்பணிக்கும்‌ முதலீடாக வைத்துக்‌ கொள்ள மன்னனிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. மன்னனும்‌ இருபத்தொன்பதாவது ஆண்டு முதல்‌ திருப்பணிக்கும்‌, பூசைக்கும்‌ முதலீடாக வைத்துகொள்ள ஆணை வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திருவாய்கேழ்வி முன்னாகத்‌ திரிஷாவனச்‌ சக்கரவத்திகள்‌ மதுரையும்‌ கருவூரும்‌ ஈழமும்‌ பாண்டியன்‌ முடிதலையுங்‌ கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க-

2. சோழ மெவற்கு யாண்டு ௨௰௨௯ அஆ[வ]து திருமுகப்படி திரிபுவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்‌ ௧-

3. ட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டுப்‌ பாலையூரான ராசேந்திரசோழ நல்லூரில்‌ திருப்பதங்காடுடையார்‌ கோயிலில்‌ தேவகன்மிக்கும்‌ ஸ்ரீமாஹேற-

4. ஈக்கண்காணி செய்வார்களுக்கும்‌ ஸ்ரீகாரியஞ்‌ செய்வானுக்கும்‌ இத்தேவர்க்கு இவ்வூரில்‌ திருநாமத்துக்காணியாய்‌ தேவதானமான விளைநிலம்‌ இருபதிற்று வே-

5. லிக்கும்‌ திருநந்தவானங்களுந்‌ திருந்தோப்புகளும்‌ உள்ளிட்ட கொல்லை நிலம்‌ பதிற்று வேலிக்கும்‌ தேவி அரும்பாக்கத்து தேவதானமான விளைநிலம்‌ ஒன்பதரைக்‌ குழி . . .

6. ங்களுருமான கொல்லை நிலம்‌ பதிற்று வேலிக்கும்‌ அந்தராயம்‌ பாட்டமும்‌ ஆயமும்‌ உள்ளிட்டனவையிற்றுக்கும்‌ குந்தாலி வெட்டிக்கும்‌ தண்டுங்‌ காசும்‌ நெல்லும்‌

7. இத்தேவர்‌ திருமடைவிளாகத்து இருக்கும்‌ . ச்சர்‌ தறிஇறைக்கும்‌ ஆயத்துக்கும்‌ இறுக்கும்‌ காசும்‌ இட்டு செக்குக்குஞ்‌ செக்குக்குடி இறுக்கும்‌ எண்ணையும்‌ காசு-

8.ம்‌ இத்தேவர்க்குப்‌ பூஹெக்கும்‌ திருப்பணிக்கும்‌ உடலாக இருபத்தொன்பதாவது முதல்‌ பெறக்கடவதாகப்‌ பெறவேணும்‌ என்று நந்தியராயன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ இப்ப-

9. டி செயக்கடவதாகச்‌ சொல்லிக்‌ கணக்கிலும்‌ இட்டுக்‌ கொள்ளக்கடவர்களாக வரிக்கூறு செய்வார்களுக்கும்‌ சொன்னோம்‌ இக்காசும்‌ நெய்யும்‌ எண்ணையும்‌ இருபத்‌-

10. தொன்பதாவது முதல்‌ ஆட்டாண்டு தோறும்‌ இத்தேவர்க்குப்‌ பூஜெக்கும்‌ திருப்பணிக்கும்‌ உடலாகக்‌ கைக்கொள்க எழுதினான்‌ திருமந்திர ஒலை மீனவன்‌ மூவேந்த வேளான்‌

11. இவை வில்லவராயன்‌ எழுத்து இவை தொண்டைமான்‌ எழுத்து இவை விசையராயன்‌ எழுத்து இவை அங்கராயன்‌ எழுத்து இவை பினகிராயன்‌ எழுத்து இவை விழிஞிய

12. த்தரையன்‌ எழுத்து இவை சிங்கராயன்‌ எழுத்து இவை அதிபத்தரையன்‌ எழுத்து யாண்டு ௨௰௯ [னா]ள்‌ ௩௱சு௰௫௪

த.நா. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧90/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 10

வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி, 1226 ஊர்‌ பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 34/1932-33 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 6

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஆண்டார்‌ அகிலநாயகர்‌ எனும்‌ சம்பந்தர்‌ என்பவர்‌ ஊற்றுக்காட்டுக்‌

கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூர்‌ என்கிற ராஜேந்திரசோழ நல்லூர்‌ திருப்பனங்காடுடைய நாயனார்‌ கோயிலில்‌ நான்கு சந்திவிளக்குகள்‌ எரிக்க எட்டுப்‌ பழங்காசுகளை, இக்கோயிலைச்‌ சார்ந்த ஆறு சிவப்பிராமணர்களிடம்‌ வழங்கியுள்ளார்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ திருவாய்கேழ்வி முன்னாகத்‌ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீசாஜராஜ தேவர்க்கு யாண்டு பத்தாவது ஜயங்‌-

2. கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து பாலையூர்‌ நாட்டுப்‌ பாலையூரான ராஜே. சோழ நல்லூ-

3. ர்‌ உடையார்‌ திருப்பனங்காடுடைய நாயனார்க்கு ஆண்டார்‌ அகிலநாயகரான சம்பந்தர்‌ வைத்த சந்தி விளக்கு நாலும்‌ இ-

4. க்கோயில்‌ சிவபிராமணரில்‌ காஞ்சைக்‌ காக்கும்‌ பிரான்‌ பட்டன்‌ கைக்கொண்ட விளக்கு அரையும்‌ இக்குடிச்‌ சீராமபிள்ளை-

5. யான சதாசிவ பட்டன்‌ உள்ளிட்டார்‌ கைக்கொண்ட விளக்கு அரையும்‌ இக்குடி நாயகப்பிள்ளையான திருப்பதங்காடு-

81

6. டையான்‌ கைக்கொண்ட விளக்கு அரையும்‌ இக்குடி தேவர்கள்‌ அந்து பட்டன்னான உமையன்னும்‌ கைக்கொ-

7. ண்ட விளக்கு அரையும்‌ கிராஞ்சிக்‌ காக்கு நாயகப்பட்டன்‌ உய்யக்‌ கொண்டான்‌ பட்டன்‌ கைக்கொண்ட விளக்கு

8. ஒன்றும்‌ இக்குடிச்‌ சிவதவனப்‌ பெருமாளான திருவெண்காடு பட்டன்‌ கைக்கொண்ட விளக்கு ஒன்றும்‌ ஆகச்‌ சந்தி வி-

9. எக்கு நாலுக்கு நாங்கள்‌ கைக்கொண்ட அன்றாடு நற்பழங்காசு ம்‌ இப்பழங்காசு எட்டும்‌ ஆண்டார்‌ அகிலநாயகனாந சம்ப-

10. ந்தன்‌ பக்கல்‌ கைக்கொண்டு சந்திராத்தவரை இச்சந்தி விளக்கு நாலும்‌ எரிக்க கடவோம்‌ இவ்வனைவோம்‌ இப்படிக்கு இவை காக்‌-

11. கும்‌ பிரான்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை சதாசிவ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை அக்காரி பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை திருபத-

12. ங்காடு பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை தேவர்கள்‌ சுந்தர பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை உய்யங்கொண்டான்‌ பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை தி-

13. ருவெண்காடு பட்டன்‌ எழுத்து

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 69/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 15

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1231 ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 31/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ ததி

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்மண்டப வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டு பாலையூர்‌ என்கிற இராசேந்திரசோழ நல்லூர்‌ திருப்பதங்காடு கோயிலில்‌ காணியுடைய உய்யகொண்ட காக்கு நாயக பட்டன்‌ என்பவன்‌, பாலையூர்‌ ஊர்த்‌ தலைவனின்‌ வேலையாள்‌ (பறையடியார்‌) பெருங்காடன்‌ எனும்‌ இளமைப்‌ பெரும்பறையன்‌ அளித்துள்ளக்‌ காசுகளைக்‌ கொண்டு இக்கோயிலில்‌ சந்திவிளக்கு எரிக்கச்‌ சம்மதித்துள்ளான்‌.

கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு மரு வது 2. ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலையூர்‌ நாட்டுப்‌ பா-

3. லையூரான இராசேந்திரசோழ நல்லூர்‌ உடையார்‌ திருப்பதங்காடுடைய நாயநா[ர்‌]க்கு இக்‌-

4. கோயிற்‌ காணியுடைய சிவப்பிராமணன்‌ காக்குநாயகப்‌ பட்டன்‌ மகன்‌ உய்யக்கொண்டாநாந காக்கு

5. நாயக பட்டனேன்‌ இந்நாயனார்க்குத்‌ திருப்பாலையூர்‌ கிழவன்‌ பறையடியாரில்‌ வாசி மகன்‌ பெருங்காடநாந

6. இளமைப்‌ பெரும்பறையன்‌ வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு நான்‌ உபையமாகக்‌ கைக்கொண்ட காசு அறு*

* கல்வெட்டு முற்றுப்பெறவில்லை

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧92/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : பிங்கல வருடம்‌ வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 13-14-ஆம்‌ நூற்‌. ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 28/1932-33

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : 5 ஊ.க.எண்‌ : 8

அரசன்‌

இடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : கல்வெட்டு வரிகளின்‌ முன்பகுதி கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துள்ளது. திருபதங்காடு உடைய நாயனார்‌ கோயில்‌ நிர்வாகிகள்‌ (தானத்தார்‌), இக்கோயிலுக்குரிய நிலத்தினை ஊர்ச்‌ சபையாரிடம்‌ அடைமானம்‌ வைத்திருந்தனர்‌. மீட்ட பின்னர்‌, இனி இந்நிலங்களை அடைமானம்‌ வைக்கப்போவதில்லை என உறுதி அளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு : 1. . . . கேழ்வி முன்னாக பிங்கள ஸடவசுஸறத்துப்‌ புரட்டாதி மாதம்‌ பா 2. . . . சோழநல்லூர்‌ உடையார்‌ திருப்பதங்காடு உடைய நாயனார்‌ கோயில்‌ தாநத்தார்‌

. . . .தீதுக்காணி விளைநிலமும்‌ கொல்லை நிலமும்‌ நாங்கள்‌ ஒற்றி வைய்க்கை- - - . . பரும்‌ இருந்து ஒற்றிக்கு பணம்‌ குடுத்துயிருக்கையில்‌ இனி இந்த திருநா- _ லமும்‌ கொல்லை நிலமும்‌ ஒற்றி வைக்க தலவிலை எழுத்தில்‌ கேம்‌-

. விலை எழுதிக்‌ கொள்ள ஆசைப்படுதல்‌(ச்‌) செய்தாருண்டாகிலும்‌- . ட்டுத்‌ துரோகிகளும்‌ ஆகக்‌ கடவதாகவும்‌ இப்படிக்கு இத்திருமலைே

3

4

5

6. . . . யளப்பட்டதும்‌ பட்டு எங்கள்‌ கண்களும்‌ தென்றமாக்கறவதாகவும்‌ 7

8.

9 . சுரத்‌ திருப்பதங்காவுடைய நாயனார்‌ கோயில்த்‌ தாநத்தாரோம்‌ இத்‌

த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: ௧693/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1306 வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1384 ஊர்‌ பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 30/1932-33 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 9

அரசன்‌ : விருப்பண உடையார்‌

கடம்‌ பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டப வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : திருப்பதங்காவுடைய நாயினார்‌ கோயில்‌ திருமடைவளாகத்துச்‌ சன்னதி

தெருவில்‌ 70 குழி அளவுள்ள மனை மற்றும்‌ மனைப்படையும்‌ கைக்கோளர்‌, தேவரடியார்கள்‌ ஆகியோருக்குக்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்‌ விற்பனைச்‌ செய்துக்‌ கொடுத்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீஐ ஊஷாணலிறாற அரியாய விலாலஐ ஹாஜெஷலக்கு(ப) தப்புவரர்‌ கண்டன்‌ ஹிரிஹற பொக்கன உடையர்‌ குமாரன்‌ விருப்ப-

2. உடையா ]ற்கு செல்லாருன்ற * சகாத்த[ம்‌] ஆயிரத்து முன்னுற்று ஆறின்‌ மேல்‌ 0(2)[ச]ல்லா நின்ற குறோதன வருஷடி ஜயங்கொண்டசோழ மண்டல-

3. த்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்துப்‌ பாலைஊர்‌ நாட்டுப்‌ பாலைஊர்‌ இராசேந்திர சோழ நல்லூர்‌ உடையார்‌ திருப்பதங்காடுவு-

4. டைய நாயினார்‌ சூதிவணெறார்‌ கைவிலை இக்கோயிலில்‌ ஸ்ரீகாஹெறாறருடி தானத்துக்குக்‌ கடவரும்‌ அதிகாரி சோமராசரும்‌

5. கக்கோளர்‌ தேவர்துடியாரும்‌ முன்பாக நாம்‌ பண்ணிக்குடுத்தபடி இன்நாயனார்‌ திருமடைவிளாகத்தில்‌ சன்னதித்‌ தெருவில்‌ தென்சிறகு-

* - செல்லா நின்ற - என்று படிக்கவும்‌

6. ம்‌ வடசிறகும்‌ முப்பத்து ஆறு விலை கொண்டது கிழக்கு மேற்கும்‌ உட்பட மனையும்‌ மனைப்படைப்பும்‌ குழி எழுபதும்‌ கீணோக்கின கிணறும்‌ மேல்‌

7. நோக்கின மரமும்‌ . . .

8. . . . ஆகவும்‌ இந்த மனையும்‌ தானத்தார்‌ கைக்கோளர்‌ தேவர்‌ அடியார்க்கும்‌ மற்றும்‌ கொண்டவர்‌ குடுக்கும்‌

9. . . . தாயதானங்களுக்கு . . . இப்படிக்கு சம்மதித்து இந்தத்‌ திருமலையிலே விலைப்‌ பிரமாணம்‌ ஆக கல்வெட்டு*

* கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6௧94/2017

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : கரவருடம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 15-16 - நூற்‌. பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 32/1932-33 தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 5

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

- ஊ.க.எண்‌ : 10

பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்மண்டப வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : நரசையா பிள்ளை என்பவரின்‌ நலன்‌ வேண்டி திருபதங்காடுடைய

நாயனாற்கும்‌, குமாரசுவாமிக்கும்‌ தெத்தியோதனம்‌ வைத்துப்‌ படைப்பதற்கு வடக்கு மற்றும்‌ தெற்குப்‌ பகுதி பாலையூர்‌ ஊரவர்‌ நிலம்‌ தானமளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1.

பரஹஃஹு கர வருஷம்‌ தை மாதம்‌ முதல்‌ தியதி சுக்கிர வாரமும்‌ பெற்ற உத்திரத்து னாள்‌ ஸ்ரீமகி நரசையா பிள்ளைக்கு புண்ணியமாக காடுவெட்டி கோவிந்த பிள்ளை அப்பையர்‌ புத்திரன்‌ காளவியப்பர்‌ பிள்ளை உல... .

சுப்பிரமணியர்‌ புத்திரன்‌ வெக்கிரினாகர்‌ பிள்ளையும்‌ பாலைஊர்‌ வடபாதி தென்பாதி ஊ[ர]வரும்‌ திருப்பதங்காடு உடைய நயினாற்கும்‌ குமார சுவாமிக்கும்‌ தினக்கட்டளை தெத்தியோதனபடிக்கு நாள்‌ ஒன்றுக்கு ௦. .

. சி நானாழியும்‌ தயிரும்‌ கறியமுதும்‌ சுக்கும்‌ ஏலம்‌ மிளகும்‌ நெய்‌ . .. கு

உரியும்‌ சம்பள வகைக்கும்‌ கறியமுதுக்கும்‌ காலமாக நடந்து வரும்படிக்கு

. வில்லம்‌ ஏரி எதுவாயி ஆற்றுக்கால்‌ பாச்சலில்‌ முன்னாள்‌ கூ௨௫-௱ஈ நாளது

விட்ட கூ ஆக கூ ௫.௨ வேலும்‌ மயிலும்‌ நாட்டின நாற்‌-

. பாற்கெல்லை நிலம்‌ சந்திராதித்தவரைக்கும்‌ ாரஷ”ூவ*மாக குடுத்தோம்‌

யிந்த கிரக உத்தனா சந்திராதித்தவரைக்கும்‌ தெத்தியோதனபடி

87

6. திருமலை நடத்த கடவதாகவும்‌ யிந்த தன்மத்துக்கு யாதொருத்தர்‌ அகுதம்‌ பண்ணாமல்‌ நடத்தக்‌ கடவர்களாவும்‌ இத்தன்மத்துக்கு அகுதம்‌

7. பண்ணினவன்‌ உண்டானால்‌ கெங்கை கரையிலே குரால்‌ பசுவையும்‌ காராம்‌ பசுவையும்‌ கொன்ற தோஷத்திலே போக கடவர்களாகவும்‌

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 695017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : நளவருடம்‌ வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : (கி.பி. 1485-90) ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 35/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ |

அரசன்‌ : நரசிங்கய்யதேவ மகாராயர்‌

இடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபக்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : விசயநகர அரசர்‌ நரசிங்கய்ய தேவமகாராயர்‌ பாலையூரில்‌ வாழும்‌ பள்ளிகளின்‌ வீட்டு மனைகள்‌ மீதான வரிகளை நீக்கம்‌ செய்து ஆணையிட்டுள்ளார்‌.

கல்வெட்டு : 1. ஷஹி ஸ்ரீமன்மஹாமண்டிலீசுர மேதினி மீசுர கண்டக்‌ கட்டாரி சாளுவ 2. நரசிங்கய்யதேவ மஹாஇராசர்‌ பாலைஊர்‌ பள்ளிகளுக்கு 3. கல்லுவெட்டி குடுத்தபடி நள வஷ” முதல்‌ வால்வரி கழித்து ஆற்‌- . 4. றுக்கு சந்திறாதித்தவரையும்‌ செல்லக்‌ கடவதாகவும்‌ 5. இதுக்கு அகுதம்‌ பண்ணினவர்கள்‌ உண்டாகில்‌ கெங்க

6. கரையில்‌ . . .

த.நா.அ. வதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 66,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : விக்ருதி

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 16-17- நூற்‌. ஊர்‌ : பாலூர்‌ இ.க.ஆ. அறிக்கை : 38/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : தமிழ்‌

அரசு 2 ஊ.க.எண்‌ : 12

அரசன்‌

இடம்‌ : பதங்கீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபக்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : கிருஷ்ணராய நாயக்கர்‌ தானமாக வழங்கிய பாலையூர்‌ கிராமத்தின்‌ கொல்லை நிலம்‌, கழனிநிலம்‌ ஆகியவற்றினை இக்கோயில்‌ திருப்பணிக்கும்‌, நடன ஆசிரியர்‌ மற்றும்‌ மத்தளம்‌ வாசிப்பவர்களுக்குத்‌ தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1. விகுறுதி வருஷம்‌ தை மீ” ஸ்ரீமஃ கிறுஷ்ண[ர]ாய நாயக்க தன்மமாக நயினாரு . . .

2. திருப்பணிக்கும்‌ நட்டுவா[ங்கம்‌] முட்டுக்காற்க்கும்‌ நம்முடைய உடைய கிறாமமான பாலையூரில்‌ . . .

3. . . . யிரானத்துக்கு . . . கொல்லை ௬௭ கழனி ௪௱ரும ஏந்தல்‌

4. யித்தன்மத்துக்கு அகுதம்‌ பண்ணிநவர்கள்‌ காராம்‌ பசுவைக்‌ கொன்ற தோஷத்திலே போக . . .

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6972/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு

ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : - மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 1 அரசன்‌ : முதலாம்‌ இராசராசன்‌

இடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயிலில்‌ உள்ள தனிக்கல்‌.

குறிப்புரை : இராசராசனின்‌ மெய்க்கீர்த்தி மட்டும்‌ இடம்பெற்றுள்ளது. கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திருமகள்போல பெருநிலச்‌ செல்வியும்‌ தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்‌ காந்தளூர்‌ சாலை கலமறுத்‌ . . . யாண்டு தொழுதகை விளங்கும்‌ யாண்டே செழியறைத்‌ தேசு கொள்‌ ஸ்ரீ கோராஜறாஜ ஈாஜகேஸரி பந்மருக்கு யாண்டு . . . ஆவது

91

த.நாஅ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: ௧698/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 6 வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1184 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 9/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு i எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌ அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 2 அரசன்‌ : திரிபுவன வீரராசேந்திர சோழ தேவர்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌) கடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்து புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணி சதுர்வேதிமங்கலத்து “ஸ்ரீ பொன்மலை உடைய நாயனார்‌” இறைவன்‌ முன்‌ நெய்‌ விளக்கெரிக்க, இக்கோயில்‌ திருமடைவிளாகத்தில்‌ வசிக்கும்‌ பக்தர்‌ திருவையாறு ஊரைச்‌ சார்ந்த திருச்சிற்றம்பலமுடையான்‌ என்பவன்‌, இக்கோயில்‌ சிவபிராமணன்‌ காக்கும்‌ பிரான்பட்டன்‌ என்பவனிடம்‌ மூன்று பசுக்களைத்‌ தானமாக வழங்கியுள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீவீரஇர- 2. ஈசேந்திரசோழ தேவற்கு யாண்டு சு வது செயங்கொ- 3. ண்டசோழ மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்து புலி- 4. ப்பாக்கமான சோழசிகாமணி சதுவேதிமங்கல- 5. த்து உடையார்‌ சீபொன்மலை உடைய நாயனா-

6. ற்கு இன்நாயனார்‌ திருமடைவிள [£]கத்து கும்பிட்டிருக்‌-

7. கும்‌ பாங்குடையான்‌ திருவைஆறு உடையார்‌ திரு-

92

8. ச்சிற்றம்பலமுடையாநேன்‌ வைத்த சந்தி விள[க்‌]கு ஒ- :

9. ன்றுக்கு விட்ட பசு மூன்று இப்பசு மூன்றும்‌ கைக்கொ-

10. ண்டு இக்கோயிலில்‌ காணி உடைய காமு] கோத்திரத்து ௧- 11. ஈக்கும்‌ பிரான்‌ பட்டன்‌ பெருமாள்‌ ஆன காக்கும்‌ பிரான்‌ ப-

12. ட்டநேன்‌ இப்பசு மூன்றும்‌ கைக்கொண்டு சந்திராதி-

13. த்தவரை திருமுன்‌ நெய்‌ திரு[வி]ளக்கு யெரிக்‌[க] கடவேனாக 14. சி[லா]லேகை பண்ணிக்‌ குடுத்தேன்‌ காஞ்சைக்‌

15. காக்கு[ம்‌] பிர[ஈ]ன்‌ பட்டநேன்‌ சீமாகேமும ற-

16. க்ஷ

த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 6992017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 14

வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1230 ஊர்‌ புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 6/1932-33 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ 3

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குக்‌ குமுதம்‌.

குறிப்புரை : புலிப்பாக்கம்‌ எனும்‌ சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து

ஸ்ரீபோன்மலை உடைய நாயனார்‌ கோயில்‌ இறைவன்‌ முன்‌ சந்தி விளக்கு ஒன்று எரிக்க, இவ்வூரைச்‌ சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான்‌ என்கிற தொண்டைமண்டலத்து பிள்ளை என்பவன்‌ மூன்று பழங்காசுகளை இக்கோயில்‌ சிவபிராமணன்‌ சந்திரசேகர பட்டன்‌ என்பவனிடம்‌ வழங்கி சந்திவிளக்கு எரிக்க வழிவகைச்‌ செய்துள்ளான்‌.

கல்வெட்டு :

1. ஷஹஸஷிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீ இராசராச தேவற்கு யாண்டு ௰௪ வது புலிப்பாக்கமான சோழசிகாமணிச்‌ சது வேதி மங்கலத்து ஸ்ரீபோன்மலை உடைய நாயனாற்கு ஒரு சந்திவிளக்கு முட்டாமற்‌ திருமுன்‌ எரிய இவ்வூர்‌ குரவசேரி

2. ஆட்கொண்டானான தொண்டைமண்டலத்துப்‌ பிள்ளை தந்த பழங்காசு இப்பழங்காசு மூன்றும்‌ இக்கோயில்‌ காணிஉடைய சிவப்பிராமணன்‌ காஞ்சிக்குறிக்‌ கவிசிகன்‌ பொன்மலை உடையானான சந்திரசேகர பட்டனேன்‌ உபையமாக கைக்‌-

3. கொண்டு இக்காசின்‌ பலிசைக்கு சிலவாக இச்சந்திவிளக்கு ஒன்றும்‌ முட்டாமல்‌ சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவேனாகச்‌ சம்மதித்து சிலாலேகை பண்ணிக்‌ குடுத்தேன்‌ சந்திரசேகர பட்டனேன்‌ இவை சந்திரசேகர பட்டன்‌

4. எழுத்து இது பண்மாஹேயூம க்ஷ

94

த.நா.௮. தொல்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 2700/2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு - செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1230 புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எளர்‌ : 4 மூன்றாம்‌ இராசராசன்‌

வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ ஊரிலுள்ள

ஸ்ரீபோன்மலை உடைய நாயனார்‌ கோயில்‌ இறைவன்‌ முன்‌ ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்கு, இவ்வூரைச்‌ சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான்‌ என்னும்‌ தொண்டைமண்டலப்‌ பிள்ளை என்பவரிடமிருந்து ஒரு பசுவும்‌, நாகு (பெண்‌ கன்று) இரண்டும்‌ இக்கோயில்‌ காணியுடைய காஞ்சிக்குறிக்‌ கவுசிகன்‌ பிச்சன்‌ எனும்‌ திருஞானசம்பந்த பட்டன்‌ என்பவன்‌ பெற்றுக்‌ கொண்டு விளக்கெரிப்பதாக உடன்படிக்கை எழுதிக்‌ கொடுத்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1

ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீஇராஜராஜ தேவரர்‌]க்கு யாண்டு வதுப்‌ புலிப்பாக்கமான சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபொன்மலை உடைய நாயனார்க்கு திருமுன்‌ எரிய ஒரு சந்தி விளக்கு இவ்வூர்‌ குரவசேரி ஆட்‌-

. கொண்டானான தொண்டைமண்டலப்‌ பிள்ளை தந்த பசு ஒன்றும்‌ நாகு

இரண்டும்‌ ஆக உரு மூந்றும்‌ இக்கோயில்‌ காணி உடைய சிவப்பிராமணன்‌ காஞ்சிக்குறிக்‌ கவுசிகன்‌ பிச்சனாந திருஞானசம்பந்த பட்டநே[ன்‌] கைக்கொண்டு இசந்தி விளக்கு ஒன்றும்‌ உபையமாக-

. ச்‌ சந்திராதித்தவர்‌ வரை செலுத்தக்கடவேனாகச்‌ சம்ம[தி]த்துச்‌ சிலாலேகை

பண்ணிக்‌ குடுத்தேன்‌ திருஞானசம்பந்தப்‌ பட்டந்நேோன்‌] இவை திருஞானசம்பந்த பட்ட[ன்‌] எழுத்து இது பன்மாஹெறாற றக்ஷை

95

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 70/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 16

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1232 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 12/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 5

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்துப்‌ பொன்மலை உடைய நாயனார்‌ கோயிலில்‌ இரவுச்‌ சந்தி விளக்கெரிக்க மூன்று பசுக்களை, இவ்வூர்க்‌ கணக்கன்‌ தொண்டைமண்டலபதி நாயக வேளான்‌ எனும்‌ நூற்றெண்மப' பிரியன்‌ என்பவன்‌ தானமாக வழங்கியுள்ளான்‌. கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீஇராஜராஜ தேவர்க்கு யாண்டு மச வது புலிப்பாக்கமான சோழசிகாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்து உடையார்‌ பொன்மலை [உ]டை-

2. நாயினாற்கு ஒரு சந்தி விளக்கு முட்டாமல்‌ திருமுன்‌ அரைசிய இவ்வூர்‌ 2மடஹற புலிப்பாக்கமுடையான்‌ பூமாங்கழல்‌ பிச்சதேவன்‌ பெரியாழ்வான்‌ பொன்மலை [உடையயாந்‌ . . . . திருக்கழுக்குன்ற ஐட்டனா[ன ] தொண்‌-

3. டைமண்டலபதி னாயக வேளானான நூற்றெண்மப்‌ பிரியன்‌ விட்ட பசு இப்படி மூன்றும்‌ இக்கோயிற்காணி உடைய சிவப்பிராமணன்‌ காஞ்சிக்குறிக்‌ கவிசிகன்‌ திருவேகம்பமுடையான்‌ மகன்‌ வேளாநான திருஞானசம்பந்த ப-

4. ட்டநேன்‌ இப்பசு மூன்றுங்‌ கைக்கொண்டு இராசந்தி விளக்கு ஒன்றும்‌ உபையமாக சந்திராதித்தவரை செலுத்தக்கடவேநாக சம்மதித்து சிலாலேகை பண்ணிக்குடுத்தேன்‌ திருஞானசம்பந்த பட்டநேன்‌ இவை என்‌ எழுத்து . . . பட்டன்‌ எழுத்து

96

த,நா.௮. தால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 202017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 22 வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1238 ர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 4/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 2-௫ அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : சோழமண்டலத்து மண்ணி நாட்டு சிற்றேயில்‌ ஊரைச்‌ சார்ந்த அம்பலங்கோயில்‌ கொண்டான்‌ திருநட்டப்பெருமாள்‌ என்பவன்‌ இக்கோயிலில்‌ நடராசர்‌ திருமேனியை எடுப்பித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஹஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திக- 2. ள்‌ சீ இராசராச தேவற்கு யாண்டு 3. ௨௮௨ சோழமண்டலத்து மண்‌- 4. ணி நாட்டு சிற்றேயிலுடையான்‌ அம்‌- 5. பலங்‌ கோயில்‌ கொண்டான்‌ திரு- 6. நட்டப்‌ பெருமாள்‌ இன்னாய[னாய]- 7. னாற்கு திருக்கூத்து(ம்‌)[த்‌] தம்பிர- 8. னானயும்‌ எழுந்தருளுவி-

9. த்து

97

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 703/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 22 வட்டம்‌: செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1238 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 8/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தச

எழுத்து தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 5

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : களத்தூர்க்‌ கோட்டத்துப்‌ புலிப்பாக்கம்‌ எனும்‌ சோழசிகாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்துப்‌ பொன்மலை உடைய நாயனார்‌ கோயில்‌ இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கு வைக்க பைய்யூர்‌ கோட்டத்து நெய்தல்வாயில்‌ ஊர்‌ தலைவன்‌ செம்பியதரையன்‌ என்பவன்‌ மூன்று பசுக்களைத்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஹஷிய்ீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சீ இராசராச 2. தேவற்கு யாண்டு ௨௰௨ வது களத்தூர்க்‌ கோட்டத்துப்‌ புலிப்‌- 3. பாக்கமான சோழசிகாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்து உடைய 4. பொன்மலை உடைய நாயனார்க்கு ஒரு சந்திவிளக்கு முட்டாமற்‌ தி- 5. . . . பைய்யூர்‌ கோட்டத்து நெய்தல்வாயிற்‌ 6. கிழான்‌ திருக்காளத்தியுடையானான 7. செம்பியதரையன்‌ . . பசு மூன்றுங்‌ கைக்கொண்டு

க்க

ள்‌

10. இப்பசு மூன்றும்‌ கைக்கொண்டு உபையமாக சந்திவிளக்கு 11. ஒன்றுஞ்‌ சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவேனாக சிலாலேகை 12. பண்ணிக்‌ குடுத்தேன்‌ திருவேகம்பமுடையான்‌ தெக்ஷணா?-ர்த்‌-

13. தியான உருத்திர பட்டனேன்‌ இவை உருத்திர பட்டனெழுத்து .

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 202017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 26 செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1242 புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 7/1932-33 தமிழ்‌ முன்‌ பதிப்பு 23%

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌

மூன்றாம்‌ இராசராசன்‌

: வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்கு ஜகதி.

: புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்து

ஸ்ரீபோன்மலை உடையார்‌ கோயில்‌ திருநடைமாளிகையில்‌ இவ்வூரைச்‌ சார்ந்த குரவசேரி சோமிதேவ பட்டன்‌ ஆட்கொண்டான்‌ என்றழைக்கப்படும்‌ தொண்டைமண்டலத்துப்‌ பிள்ளை என்பவன்‌ தனது பெயரால்‌ “ஆட்கொண்டதேவர்‌? (சிவலிங்கம்‌) உருவினை எடுப்பித்துள்ளான்‌. இந்த இறைவனுக்குப்‌ பூசை, அமுது மற்றும்‌ கறியமுது போன்றவற்றிற்காக 10 கழஞ்சுப்‌ பொன்னினை இக்கோயில்‌ சிவப்பிராமணர்களிடம்‌ கொடுத்துள்ளான்‌. இப்பொன்னின்‌ மூலம்‌ தினமும்‌ தூணிப்‌ பதக்கு அளவு திருமஞ்சனமும்‌, திருப்பளித்தாமமும்‌ (இறைவனுக்கு சாத்தும்‌ மாலை), இரண்டு சந்தி விளக்கும்‌, நான்கு நாழி அளவு அரிசி திருவமுதும்‌, கறியமுதும்‌ வைத்து இறைவனுக்கு வழிபாடு செய்வதாக இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ உறுதியளித்து உடன்படிக்கை எழுதிக்‌ கொடுத்துள்ளனர்‌.

1. ஹஹியஸ்ரீ அில-வன வ௯,வத்திகள்‌ ஸ்ரீமாஜமாஜ மேவற்கு யாண்டு

௨௰௬

வது புலிப்பாக்கமான சோஸசிவாமணி வுதுவேோதி மங்கலத்து

ஸ்ரீபோன்மலை உடையார்‌ கோயிலில்‌ முப்பது வட்டத்துக்‌ காணி உடைய மமிவவ,ரஹணரோம்‌ இக்கோயிலில்‌ இவ்வூர்க்‌ குரவசேரி ஷோமிஜேவ மட்டன்‌ ஆட்கொண்டானா-

2.ன

தொண்டைமண்டலத்துப்‌ பிள்ளை திருநடைமாளிகையில்‌

எழுந்தருளுவித்த ஆட்கொண்ட சேவற்க்குப்‌ பூசையும்‌ அமுதுபடியும்‌

100

செலுத்தக்‌ . . . மாற்றுச்‌ செம்பொன்‌ பதின்கழஞ்சும்‌ கைக்கொண்டு நாள்‌ ஒன்றுக்கு தூணி பதக்குத்‌ திருமஞ்சனமும்‌ உள்பட-

3. த்‌ திருப்பளித்தாமம்‌ இரண்டு சந்தி விளக்கும்‌ செலுத்த இதுபடிக்கு நானாழி அரிசி திருவமுதுபடி கறியமுதும்‌ சந்திராதித்தவரை நாள்‌ தோறும்‌ முட்டாமற்‌ செலுத்தக்‌ கொள்ள கடவோமாக சம்மதித்துச்‌ சிலாலேகை பண்ணிக்குடுத்தோம்‌ இக்கோயிலில்‌ முப்பது வட்டத்துக்‌ காணியுடைய ஸிவ ஸஷ;ாஹணரோ-

4. ம்‌ இப்படிக்கு இவை காஞ்சிக்குறி . . . உருத்திர மட்டன்‌ எழுத்து . . . கெஃஷணாமூற்த்தி ஹட்டன்‌ எழுத்து இவன்‌ தம்பி திருக்கழுக்குன்ற முடையானான திருவேகம்பட ஹட்டன்‌ எழுத்து

5. இவை இக்குடி பொன்மலையுடையானான . . திவாகர லட்டன்‌ எழுத்து இவன்‌ தம்பி கச்சிகம்பனான திருவையாற்று ஹட்டன்‌ எழுத்து . . . ஆட்கொண்ட மேவ லட்டன்‌ எழுத்து இக்குடி . . . எழுத்து இவை இக்குடி

6. பொன்மலை உடையானான ச, மேவ லட்டன்‌ எழுத்து இவன்‌ தம்பி பிள்ளையான திருச்சிற்றம்பலநம்பி எழுத்து இவை . . . இவை திவாகர

பட்டன்‌ மகன்‌ . . . நாயகபட்டன்‌ எழுத்து . . . இவை

101

த.நா. ஹதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: :205,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு த.

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1248-49 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 11/1932-33 மொழி; தமிழ்‌ முள்பதிபபு ; -

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : தெலுங்குச்‌ சோழர்‌ ஊ.க.எண்‌ : 9

அரசன்‌ : வீரகண்டகோபாலன்‌

இம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : களத்தூர்‌ கோட்டத்து வல்லநாட்டு புலிப்பாக்கம்‌ என்றழைக்கப்படும்‌ சோழசிகாமணிச்‌ சதுவேதிமங்கலத்து பொன்மலை உடைய நாயனார்‌ கோயில்‌ இறைவனுக்கும்‌ புலிப்பாக்கத்துக்‌ கணக்கன்‌ (மத்யஸ்தன்‌) பெரியான்‌ எனும்‌ நாற்பத்ததெண்ணாயிர வேளான்‌ என்பவன்‌, ஒரு சந்தி விளக்கு எரிக்க இக்கோயிலில்‌ காணியுடைய சிவபிராமணர்களிடம்‌ மூன்று பசுக்கள்‌ தானமளித்துள்ளான்‌. கஸ்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ திரிபுவந சக்கரவ- 2. த்திகள்‌ ஸ்ரீவீர கண்டகோபால 3. தேவற்கு யாண்டு வது ஐய 4. கொண்டசோழ மண்டலத்து கள- 5. த்தூர்‌ கோட்டத்து வல்ல நாட்டு புலி- 6. ப்பாக்கமான சோழமரிவாணி - 7. துவேஈதிமங்கலத்து உடையார்‌

8. பொன்மலை உடைய நாயனார்‌ கோ-

102

9. யிலில்‌ காணி உடைய சிவப்பிராம-

10.

11.

12.

13.

ணரில்‌ காஞ்சிக்குறி பரமேறா- பட்டன்‌ உள்ளிட்டாரும்‌ திருஞானச- ம்பந்த பட்டனும்‌ நாற்பத்தெண்‌-

ணாயிர பட்டனும்‌ இவ்வனைவோம்‌

14. இவ்வூர்‌ மயஷம புலிப்பாக்க-

15.

16.

22.

முடையாந்‌ உடையான்‌ பெரியா-

னான நாற்பத்தெண்ணாயிர வே-

. ளாந்‌ யின்னாயனாற்கு வைத்த சந்‌- . தி விளக்கு ஒன்றுக்கு இவன்‌ விட்ட . பசு மூன்றுங்‌ கைக்கொண்டு ச-

. ந்திராதித்தவரையும்‌ செலுத்த-

. க்‌ கடவேன்‌ இவ்‌[வ]னைவோ-

ம்‌ இது ஸ்ரீஜாஹேயுட க்ஷ

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7006/2017

மாவட்டம்‌

வட்டம்‌

அரசன்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12 செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1262 புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு :

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 10

முதலாம்‌ சடையவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

புலிப்பாக்கம்‌ ஊர்க்கணக்கன்‌ நூற்றெண்மப்‌ பிரியன்‌ பூமாங்கழல்‌ பிச்சதேவன்‌ பொன்மலை உடையான்‌ கனகராயன்‌ என்பவன்‌ புலிப்பாக்கம்‌ என்கிற சோளசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து பொன்மலை உடையார்‌ கோயிலில்‌ இவன்‌ எழுந்தருளித்த சுந்தரபாண்டிய நாயகர்க்கும்‌, நாச்சியார்க்கும்‌ அமுதுபடி மற்றும்‌ சாத்துப்படி வழிபாட்டுத்‌ தேவைகளுக்காகக்‌ குடிநீங்கா தேவதானமாக அளித்து, அந்நிலத்தின்‌ வழியாகக்‌ கொடுக்கப்படும்‌ வரிகளையும்‌ நீக்கி கோயிலுக்குத்‌ தானமாக அளித்துள்ள மன்னனின்‌ ஆணையாகும்‌. மேற்படி, மத்யஸ்தன்‌ கனகராயன்‌ என்பவன்‌ விசயகண்ட கோபலனின்‌ 14-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ளான்‌. இக்கல்வெட்டில்‌ இவர்‌ எடுப்பித்துள்ள இறைவனுக்குச்‌ “சுந்தரபாண்டியர்‌ நாயகர்‌” என்னும்‌ பெயர்‌ சூட்டப்பட்டுள்ளதால்‌, இக்கல்வெட்டு சுந்தரபாண்டியன்‌ காலத்தியது என உணரலாம்‌. எனவே விசையகண்டகோபாலனின்‌ காலத்திற்கு சமகாலத்தவனான முதலாம்‌ சடையவர்மன்‌ சுந்தரபாண்டியனின்‌ கல்வெட்டு இது எனலாம்‌.

1. திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகோனேரின்மை கொ-

2. எண்டான்‌ களத்தூர்‌ கோட்டத்துப்‌ புலிப்பாக்கமான சோள-

3. ஸிவாமணிச்‌ சதுவே-தி மங்கலத்து உடையார்‌ பொன்‌-

4. மலை உடைய நாயனார்‌ கோயிலில்‌ இவ்வூர்‌ 2மஹந்‌-

104

5.

6.

1.

8.

9.

10.

16.

22.

புலிப்பாக்கமுடையான்‌ நூற்றெண்மப்‌ பிரியன்‌ பூமா- ங்கழல்‌ பிச்சதேவன்‌ பொன்மலை உடையாந்‌ திருப்‌- பாலைவனமுடையான்‌ கனகராயன்‌ எழுந்தருளிவி- த்த சுந்தரபாண்டிய நாயகர்க்கும்‌ நாச்சியார்க்கு-

ம்‌ அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டுவ-

னவுக்கு இவ்வூரில்‌ இவன்‌ காணியான நிலத்திலே ஒரு

. வேலி நிலத்துக்கு கீழ்க்‌ கணக்கனில்‌ வடபத்தியும்‌

இரண்டில்‌ கீழ்பாற்‌ புலமும்‌ நடுவில்‌ கணக்கன்‌ வடபாற்‌

. தென்பாதியும்‌ பொரும்‌ சிகாணன்‌ ஏறிந சோடியும்‌ கடமை- . யும்‌ சாழங்‌ குண்டிலும்‌ மத்திகப்பட்டி வடபாதியும்‌ இத்தடியும்‌

. பொன்வரி நாட்டுவரி காசுகடமை நெல்கடமை கமுகுகடமை-

யும்‌ அந்தராயங்கள்‌ உட்பட பன்னிரண்டாவது அற்பசி மாத முதல்‌

. குடிநீங்கா தேவதாநமாகவும்‌ . . . முருங்கெ

. வேண்டும்படியாக கொள்ளவும்‌ இந்நிலம்‌ நான்‌ . திருச்சூலஸ்த்தாபனமும்‌ பண்ணிச்‌ சந்திராதி- . த்தவற்‌ செல்வதாகவும்‌ இவ்வோலை பிடிபாடா-

. கொண்டு ஒழுகிலும்‌ வரியிலும்‌ கழி[த்‌]து ௧-

ல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ குடுத்து

105

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: '20:2,2017 மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 3

வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - நூற்‌. ஊர்‌ புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : எழுத்து: கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 11

அரசன்‌ : . சடையவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌

இம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குப்‌ பட்டி.

குறிப்புரை : புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து

மகாசபையார்‌ பொன்மலை உடைய நாயனார்‌ கோயிலுக்குத்‌ திருநாமத்துக்‌ காணியாக நிலம்‌ வழங்கியுள்ளனர்‌.

கல்வெட்டு :

1. ஹஷி[ஸ்ரீ] கோற்சடபன்மர[ஈ]ன திரிபுவனச்‌ ச[க்‌]கரவ[த்‌]திகள்‌ ஸ்ரீசுந்தர பாண்டிய தேவற்‌[கு] யாண்டு . . . மணிச்‌ சதுவே-தி மங்கலத்து மஹாசபையோம்‌ உடையார்‌ பொன்மலை உடைய நாயனார்‌ திருநாமத்துக்காணிக்கும்‌ உள்நிலங்களந்தபடியே .

2. களமும்‌ கொல்லை நிலமும்‌ நாற்பாற்‌ எல்லைக்கு உள்பட்ட நிலம்‌ நாயனார்‌ திருநா . . . ரை இட்டு . . . வோமாக எம்‌ நெடுநாபாட்டம்‌ ஆறு நாப்பாட்டமான ஏரிப்பேறு இவ்வமுககாடமலே கொள்ள இப்படி சம்ம[தி]த்து பிரமாணக்‌ கச்சாத்து

3. பண்ணிக்குடுத்தோம்‌ மஹாசபையே]ம்‌ கந்தாடை கேசவ பட்டன்‌ எழு[த்‌]து காஷூவ . . . . ஆழ்வான்‌ பட்டன்‌ எழுத்து அழகிய மணவாள பட்டன்‌ எழுத்து சத்துருக்க பட்டன்‌ எழுத்‌[து]

4. மூத்தசோமதேவ பட்டன்‌ எழு[த்‌]து வட்டபக்‌[க] நாராயணன்‌ எழு[த்‌]து கந்தாடை நாரரும்‌ . . . எழு[த்‌]து ஆளு[ம்‌]பிரான்‌ பட்டன்‌ எழு[த்‌]து லசபாதி பட்டன்‌ எழு[த்‌]து வலவீரவத்தப்பட்டன்‌ எழு[த்‌]து

106

5. வங்கிபுறத்து கேசவ பட்டன்‌ மக்காவிசேரி கேசவபட்டன்‌ எழு[த்‌]து கால சே . . . எழுத்து . . . . சீராம பட்டன்‌ எழுத்து . . . நந்திகுமாரப்பட்டன்‌ எழு[த்‌]து மாரிச பட்ட[ன்‌] எழுத்து தாமோதர பட்டன்‌

6. புலிப்பாக்கமுடையா [ன்‌ ] எழுத்து

107

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 708/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 14

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1264 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 10/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : தெலுங்குச்‌ சோழர்‌ ஊ.க.எண்‌ : 12

அரசன்‌ : விசய கண்டகோபாலன்‌

இடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலிப்பாக்கம்‌ என்கிற சோழசிகாமணிச்‌ சதுர்வேதிமங்கலத்து பொன்மலை உடைய நாயனார்‌ கோயிலைச்‌ சார்ந்த பிள்ளையார்‌ முதலிகளில்‌ இளவரசனின்‌ படைத்‌ தலைவன்‌ ஒருவன்‌ தான்‌ எடுப்பித்த துர்க்கை திருமேனிக்குச்‌ சந்திவிளக்கு எரிக்க இக்கோயிலில்‌ காணியுடைய திருஞானசம்பந்தன்‌ என்னும்‌ சிவபிராமணனிடம்‌ மூன்று பசுக்கள்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ 2. விஜயகண்ட கோபால தேவற்கு யாண்டு ௰- 3. வது புலிப்பாக்கமான சோழசிகாமணி சதுவே- 4. தி மங்கலத்து உடையார்‌ பொன்மலை உடைய ஸனா- 5. யனார்‌ கோயில்‌ பிள்ளையார்‌ முதலிகளில்‌ மருதந்நா- 6. நந்திபொன்னனான. . . எழுந்தருளிவித்த து[க்‌]ை 7. கயாற்கு வைத்த சன்தி விளக்குக்கு விட்ட பசு

8. இப்பசு மூ[ன்‌]றும்‌ இக்கோயில்‌ காணி உடைய

108

9. காஞ்சிகுறி கவிசியந்‌ திருவையாறுடையா- 10. னான திருஞாநசம்பன்தனேன்‌ இப்பசு மூன்‌- 11. றும்‌ கைக்கொண்டு ஒரு சந்தி விள-

12. க்கு எரிக்கக்‌ கடவேனாக சிலாலேகை

13. பண்ணிகுடுத்தேந்‌ திருவையாறுடை-

14. யான்‌ ஆன திருஞாநசம்பந்த பட்டநே-

15. ந்‌ இது ஸ்ரீகாஹேறற க்ஷ

த.நா. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 2709/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 14

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1264 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : 5/1932-33 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : தெலுங்குச்‌ சோழர்‌ ஊ.க.எண்‌ : 13

அரசன்‌ : விசையகண்ட கோபாலன்‌

குடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : களத்தூர்‌ கோட்டத்துப்‌ புலிப்பாக்கம்‌ எனும்‌ சோழசிகாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்து பொன்மலை உடைய நாயனார்‌ கோயிலில்‌ ஒரு சந்தி விளக்கெரிக்க . க. மத்ய *. . (கண ர்‌) . ௬. q . . என்கிற கனகராயன்‌ என்பவன்‌ மூன்று பசுக்களைத்‌ தானமாக வழங்கியுள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவ- 2. த்திகள்‌ சிவிசையகண்ட கோபால 3. தேவற்கு யாண்டு ௰௪ வது களத்தூர்‌- 4. க்‌ கோட்டத்துப்‌ புலிப்பாக்கமா- 5. சோளசிகாமணிச்‌ சதுவே-தி 6. மங்கலத்து உடையார்‌ பொன்ம- 7. லை உடைய நாயனார்க்கு இ(வ்‌]வூர்‌ உடஷ- 8. ன்‌ பூமாங்கழல்‌ பிச்சதேவன்‌ பொன்‌-

9. மலை உடையான்‌ திருப்பாலைவனமுை

110

, டயானான கனகராயனேன்‌ வைத்த சன்‌-

. தி விளக்கு ஒன்றுக்கு விட்டபசு இப்பசு

. மூன்றும்‌ இக்கோயில்‌ காணி உடைய சி-

. வப்‌ பிராமணன்‌ காஞ்சிக்குறிக்‌ கவிசிகனான . சொக்கப்பிள்ளையான பரமேனா௱ லட்ட-

. னேன்‌ கைக்கொண்டு இச்சந்தி விளக்‌-

. குச்‌ சன்திராதித்தவரை எரிக்க கடவேன்‌

111

த.நா.அ. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 710/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : கலி4375 (4975) வட்டம்‌; செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1874 ஊர்‌ : புலிப்பாக்கம்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு நக

எழுத்து : தமிழ்‌

அரசு : 5 ஊ.க.எண்‌ : 14

அரசன்‌ : 5

கடம்‌ : வியாக்ரபுலிசுவரர்‌ கோயில்‌ அருகில்‌ நடப்பட்டுள்ள கல்‌.

குறிப்புரை : திருவேற்காடு இராமலிங்க முதலியார்‌ குமாரர்‌ சுப்பறாய முதலியார்‌ இக்கோயிலினை திருப்பணி செய்துள்ளார்‌. மேலும்‌, பெரியபுராணத்தில்‌ குறிப்பிடப்பெற்றுள்ள 63 நாயன்மார்களில்‌ ஒருவரான முருகநாயனாரின்‌ வம்சத்தினர்‌ என்று இவர்கள்‌ உரிமை கொள்கின்றனர்‌. இவர்கள்‌ இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கலிவருடம்‌ 4375 தவறானதாகும்‌. இவ்வருடம்‌ 4975 ஆக இருந்திடவேண்டும்‌. கல்வெட்ரு : 1. கங்கை குலாதி துளுவ சிகாமணி கில்லியாத்திரி மகா- 2. ரிஷி கோத்திரத்தில்‌ பேறு பெற்ற அறுபத்து மூன்று சிவனடியா- 3. ரில்‌ ஒருவரான பெரிய புராணத்தில்‌ விவரித்திருக்கும்‌ முறு- 4. நாயனார்‌ வங்கிஷந்‌ திருவேற்காடு இராமலிங்க முதலியா- 5. ர்‌ குமாரருந்‌ கனம்‌ பொருந்திய துரைத்‌ தனத்தாரினும்‌ மதியா- 6. ல்‌ தமிழ்‌ விளக்கம்‌ மானிடத்தொழில்‌ விளக்கம்‌ உண்டாக்கியவருமான

திருவேற்காடு சுப்பறாய முதலியாரால்‌ இந்த ஆலயம்‌ சீராக்காலச்சுது யுகலநான காலத்தில்‌ ஆண்டு நாலாயிரத்து முன்னூத்தெழுபத்தஞ்சு 112

த.நா.௮. ஜதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7112017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு டது

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1082 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 363/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 1

அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌

இம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்கு குமுதம்‌.

குறிப்புரை : வல்ல நாட்டு நென்மலி ஊரிலுள்ள நஞ்சை புஞ்சை நிலங்கள்‌ சிலவற்றினைச்‌ சேர்த்து “குலோத்துங்கசோழன்‌ திருநீற்றுச்சோழ நல்லூர்‌” என்னும்‌ பெயரிட்டு புதிய ஊர்‌ ஒன்றினை உருவாக்கி திருவாலக்கோயில்‌ மகாதேவர்‌ கோயில்‌ இறைவன்‌ வழிபாட்டுக்காக மன்னன்‌ குலோத்துங்கன்‌ வழங்கிய நேரடி ஆணையாகும்‌. இவ்வாணையை தொண்டைமான்‌ என்னும்‌ குறுநிலத்‌ தலைவன்‌ செயல்படுத்திட ஆணையிட்டுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவன சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ தொண்டை மானாற்க்கு ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்க்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ நாட்டுக்‌ களத்தூர்த்‌ திருவாலக்கோயிலுடைய ஊஹாஜேவற்கு நிமந்த . . . ட்டுக்கு வேண்டுவனத்துக்கு இக்கோட்டத்து வல்ல நாட்டு நென்மலி இரு பூவிளை நிலம்‌ எட்டேயேழுமாக்காணியும்‌ ஒரு பூவிளை நிலம்‌ பதினாரையே யிரண்டு மா முக்காணியும்‌ ஆக நீர்‌ நிலம்‌ இருபத்தைஞ்சும்‌ ஆக்‌ ஒரு பூ

2. நிலம்‌ உட்பட நிலம்‌ முப்பத்து மூன்றேயேழு மாக்காணியினால்‌ வேலியொன்றும்‌ நெல்லு முப்பத்தைங்‌ கலமாக நெல்லு ஆயிரத்தொரு

நூற்றறுபத்தேழு கலனே யிருதூணி யிரு நாழியும்‌ புஞ்சை நிலம்‌ ஆறரையே மூன்று மா முக்காணியினால்‌ வேலி யொன்றுக்கு நெல்லு இரு கலமாக

113

நெல்லுப்பதின்‌ முக்கலனே தூணி நானாழியும்‌ ஆகப்‌ புஞ்சை . ...... நாற்பதேயொரு மாவினால்‌ வரிசைப்படி நெல்லு ஆயிரத்தொரு நூற்றெண்பத்தொரு கலனே யறு நாழியும்‌ யாண்டு

3. பன்னிரண்டாவது நாள்‌ இருநூற்றுத்‌ தொண்ணூற்று மூன்று முதல்‌ தேவதான இறையிலியாக இட்டுப்‌ பழம்‌ பேர்‌ தவிர்த்துக்‌ குலோத்துங்க சோழன்‌ திருநீற்றுச்சோழ நல்லூர்‌ என்று பேரிட்டு வரியிலாரும்‌ வரிக்கூறு செய்வார்களும்‌ எழுத்திட வரிபொ[த்‌]தக காட்டச்‌ சொன்னோம்‌ இவ்வூர்‌ பன்னிரண்டாவது நாள்‌ இருநூற்றுத்‌ தொண்ணூற்று மூன்று முதல்‌ தேவற்குத்‌ தேவதான இறையிலியாக இறுக்கப்‌ பண்ணுக எழுதினான்‌ திருமந்திர ஓலை அனபாய மூவேந்த வேளான்‌

4. இவை மலையப்பராஜன்‌ எழுத்து

114

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌: 7122017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1082 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 359/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ திருவாலக்‌ கோயிலுடைய மகாதேவர்‌ இறைவன்‌ வழிபாட்டிற்காக, இக்கோட்டத்து உழலூர்‌ என்கிற இராசராசநல்லூர்‌ ஊரின்‌ புற ஊரான அரும்பாக்கம்‌ ஊரின்‌ நிலங்களிலிருந்து குறிப்பிட்ட நிலங்களைப்‌ பிரித்து “அநபாயநல்லூர்‌” என்ற புதிய ஊரினை உருவாக்கி, மன்னன்‌ தனது

பெயரினைச்‌ சூட்டி கோயிலுக்குத்‌ தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீகோனேரிமேல்‌ கொண்டானுக்கு ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்த்‌ திருவாலக்கோயிலுடைய

[2]*ஹாமேவற்கு நிமந்தக்கட்டுக்கு வேண்டுவனத்துக்கு இக்‌

2. காட்டத்து உழலூரான ஸசஸச நல்லூர்‌ * பிறந்த அரும்பாக்கம்‌ ஒரு பூவிளை நிலம்‌ இருபத்தாறரைக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதின்‌ கலமாக நெல்லு ஆ[யிர*]த்து முன்னூற்று இருபத்தைங்கலம்‌ புஞ்சை நிலம்‌ ஆற-

3. ரையே அரைக்காணிக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு இருகலமாக நெல்லு

பதின்‌ முக்கலனே முக்குறுணி ஆக புஞ்சை நிலமுட்பட நில முப்பத்து இரண்டரையே அரைக்காணிக்கு வரிசைப்படி நெல்லு ஆயிரத்து முன்னூற்று

ஐம்ப-

* இராசராச நல்லூர்‌ - என்று வாசிக்க

115

4. த்தேழு கலனே முக்குறுணி இத்தேவற்கு தேவதான இறையிலியாக இட்டு பன்னிரண்டாவது நாள்‌ இருநூற்றுத்‌ தொண்ணூற்று மூன்று முதல்‌ இத்தேவற்கு தேவதான இறையிலியாக இட்டு பன்னிரண்டாவது நாள்‌ இரு நூற்று தொ-

5. எண்ணூற்று மூன்று முதல்‌ வரியிலார்க்கு[ம்‌] வரிக்கூறு செய்வார்களுக்குஞ்‌ சொல்லி பழம்பேர்‌ தவி[ர்‌]த்து அனபாய நல்லூ[ர்‌*] என்று பேர்‌ இட்டு சொன்னோம்‌ எழுதினேன்‌ திருமந்திரஓலை எழுத்து அனபாய மூவேந்த வேளான்‌ இவை மலைஅப்பிராஜன்‌ எழுத்து

116

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 713/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 9

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1127 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 360/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 3

அரசன்‌ : விக்கிரமசோழன்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ திருவாலக்கோயில்‌ இறைவனுக்கு இவ்வூரிலுள்ள சங்கரப்பாண்டியான்‌ (எண்ணெய்‌ வணிகர்‌) கொள்ளந்தை தேவன்‌ உத்திப்பொன்‌ என்பவன்‌ ஒரு நந்தாவிளக்கு வைத்துள்ளான்‌. இவ்விளக்கினை எரிக்கும்‌ பொறுப்பு கோமடத்து சைலராசி பண்டிதர்‌ மற்றும்‌ இம்மடத்தைச்‌ சார்ந்தவர்களிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ விக்கிரமசோழ ஜேவற்கு யாண்டு ஆவது ஜயங்கொண்ட சோழ 2. மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்து களத்தூர்‌ திருவாலக்கோயில்‌ ஜேவற்கு 3. களத்தூரில்‌ இருக்கும்‌ சங்கரப்பாடியான்‌ கொள்ளந்தை தேவன்‌ உத்திப்‌ பொந்‌ வை- 4. த்த திருநகாவிளக்கு இவ்விளக்கு ஒன்றும்‌ இக்கோயில்‌ காணி உடையார்‌ செலுத்‌-

5. தக்‌ கடவார்களாக மோமடத்து சைலராசி பணிதரும்‌ மடமுடையார்களு-

6. ம்‌ செலுத்த விட்டேந்‌ தேவன்‌ உத்திப்பொன்நேந்‌

117

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 714,/2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 10 செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1128 திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 358/1911

தமிழ்‌ முன்‌ பதிப்பு டத தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 4 விக்கிரம சோழன்‌

: திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி.

குறிப்புரை : களத்தூர்‌, கொடுவூர்‌, பட்டினம்‌ ஆகிய ஊர்களைச்‌ சார்ந்த சிலர்‌

1.

2.

3.

திருவாலக்கோயிலில்‌ உள்ள சந்திரசேகர்‌ திருமேனி வழிபாட்டிற்காக சிறுதண்டலத்தில்‌ உள்ள ஒரு குறிப்பிட்ட நிலத்தினை விலைக்கு வாங்கி கோயிலுக்குக்‌ கொடையளித்துள்ளனர்‌.

[ஸஹி]*ஸ்ரீ விக்கிரமசோழ சேவற்கு யா*[ண்‌]டு பத்தாவது ஜெயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூ-

ர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு களத்தூர்‌ தமிழதரையந்‌ அம்பி

நாடுடையானும்‌ நற்சாத்த வடுகன்‌ வே-

ம்படி சாத்தையும்‌ நற்சாத்த வடுகன்‌ உத்தமத்தடிகள்‌ திரிச்சிற்றம்பல முடையானும்‌ செம்பூர்க்‌ கோட்ட-

4. த்து பட்டின நாட்டுக்‌ கொடுவூர்‌ கிழவந்‌ குணப்பெருமான்‌ காணி காணும்‌

5.

8.

பட்டினத்து பட்டினமுழான்‌ அரை- யந்‌ ஆதிநாதனும்‌ நிலவிலை ஆவணக்‌ கையெழுத்து களத்தூர்‌ திருவாலக்‌ கோயிற்‌ சந்திரசேகர தேவர்க்கு எங்க[ள்‌] கா-

. ணியான சிறுதண்டலத்தில்‌ இத்தேவர்க்கு தேவதானமாக நாங்கள்‌

சேக்கிழான்‌ மகரிகாமனிடையில்‌ விலை கொண்‌-

டு விட்ட நிலமாவது மேல்பாற்கெல்லை கருணாகர வதிக்குக்‌ கிழக்கும்‌

வடபாற்கெல்லை மும்முடிசோழ வா[ய்‌]க்காலு- க்‌ காலுக்கு தெற்கும்‌ கீழ்பாற்கெல்லை கீழைத்தடாக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லை . . .

118

த.நா.௮. தால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 715/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 2

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1150 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 355/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து - : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌

அரசன்‌ : இரண்டாம்‌ இராசராசன்‌

இடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்‌ கோட்டத்து திருமயிலாப்பில்‌ ஊரைச்‌ சார்ந்த வியாபாரி வடுக வாணிகன்‌ சேந்தன்‌ வடுகநாதன்‌ என்பவன்‌ களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ ஊர்‌ திருவாலக்கோயில்‌ மகாதேவர்‌ இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான்‌. காளாமுகன்‌ கோமடத்தைச்‌ சார்ந்த ஞானராசி பண்டிதன்‌, சயிலராசி பண்டிதன்‌ ஆகிய இருவரும்‌ இவ்விளக்கினைத்‌ தொடர்ந்து எரிப்பதாக பொறுப்பேற்றுக்‌ கொண்டனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ தி,ல-வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ சேவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌-

2. க்‌ கோட்டத்துக்‌ களத்தூர்த்‌ திருவாலக்கோயிலுடைய 8ஹாசேவற்கு இம்மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டத்துத்‌ திருமயிலாப்பிலிருக்கும்‌ வி-

3. யாபாரி அத்தி பளுக்கு வாணிகன்‌ வடுக வாணிகன்‌ சேன்தந்‌ வடுகநாதன்‌ வைத்த ஸந்தி விளக்கு ஒன்று இவ்விளக்கொன்றும்‌ இக்கோயிலிற்‌ காணி-

4. யுடைய காளாமுகன்‌ மோமடத்து ஞானராசி பண்டிதனுங்‌ மோமடத்து ஸயிலராசி பண்டிதனும்‌ இவ்விருவோமும்‌ சந்திராதித்தவரை செலுத்‌-

5. தக்கடவோமாநோம்‌ இவ்விளக்கெரி[க]கைக்கு இட்ட தாராக்‌ குத்து விளக்கொன்று இடை அம்பதின்‌ பலம்‌ இக்காணி கைக்கொண்டோரே செலு

119

த.நா.௮. ஒதால்லீயல்‌ துறை தொடர்‌ எண்‌: 716/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 27

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கியி. 1205 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 357/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 6

அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ தெற்கு ஜகதி.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து ஊற்றுர்‌ ஊரில்‌ வாழும்‌ கொற்றந்தை பெருமானய்யகமுடையான்‌ என்பான்‌, தனது மகள்‌ நங்கை ஆண்டாள்‌ என்பவளின்‌ நலன்‌ வேண்டி இம்மண்டலத்து களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ திருவாலக்கோயில்‌ உடைய மகாதேவர்‌ கோயிலில்‌ ஒரு சந்தி விளக்கெரிக்க நான்கு பசுக்கள்‌ கோயிலுக்கு அளித்துள்ளான்‌. காளாமுகன்‌ கோமடத்தைச்‌ சார்ந்த ஞானராசி பண்டிதன்‌, சயிலராசி பண்டிதன்‌ ஆகிய இருவரும்‌ விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ மதுரையும்‌ பாண்டியன்‌ முடித்தலையுங்‌ கொண்டருளிய சிரீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௨௰௭ ஜயங்கொண்டசோ-

2. மண்டலத்துக்‌ களத்தூர்க்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ திருவாலக்‌ கோயிலுடைய 3ஹாதேவற்கு இம்மண்டலத்‌ தூற்றுக்காட்டுக்‌ கோட்டத்‌ தூற்றூர்க்‌ கொற்றந்தை பெருமா-

3. னாய்யனக முடையானேன்‌ மகள்‌ நங்கை யாண்டாளுக்கு நன்றாக இம்‌2ஹாதேவற்கு வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு விட்ட பசு இப்பசு நாலும்‌ இக்கோயிலிற்‌ காணியுடைய காளா-

4. முகன்‌ கோமடத்துச்‌ சயிலராசி பண்டிதனும்‌ ஞானராசி பண்டிதனும்‌ இவ்விளக்குச்‌ சந்திராதித்தவரை எரிக்கக்‌ கடவோமாகக்‌ கைக்கொண்டோம்‌ ஸ்ரீகாஹேோறோற க்க்ஷ

120

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7172/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 15

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1161 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 352/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌

அரசன்‌ : இரண்டாம்‌ இராஜராஜன்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : வெண்குன்றக்‌ கோட்டத்து குவளை என்னும்‌ ஊரைச்‌ சார்ந்த பாரசிவன்‌ தழுவக்குழைந்தான்‌ ஆளுடையான்‌ என்பவன்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ ஊரில்‌ உள்ள திருவாலக்‌ கோயிலுடைய மகாதேவர்‌ கோயிலில்‌. வைத்த சந்தி விளக்கினை இக்கோயில்‌ காளாமுகன்‌ மடத்தைச்‌ சார்ந்த ஞானராசி பண்டிதன்‌, சயிலராசி பண்டிதன்‌ ஆகிய இருவரும்‌ இவ்விளக்கினை எரிப்பதாகப்‌ பொறுப்பேற்றுள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ தி,ல-வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜேவற்கு யாண்டு பதின்‌ அஞ்சாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்தில்‌ களத்தூர்‌ கோட்டத்‌-

2. துக்‌ களத்தூர்‌ திருவாலக்கோயிலுடைய ஹாேவற்கு இம்மண்டலத்து வெண்குன்றக்‌ கோட்டத்துக்‌ குவளையிற்‌ பாரசிவந்‌ தழுவக்குழைந்தான்‌ ஆ-

3. ரூடையான்‌ வைத்த ஸந்தி விளக்கு ஒன்று இவ்விளக்கு ஒன்றும்‌ இக்கோயில்‌ காணி உடைய காளாமுகன்‌ கோமடத்து ஞாநராசி பண்டிதனுஞ்‌

4. யிலராசி பண்டிதனுஞ்‌ சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவோமாநோம்‌ இக்காணி கைக்கொண்டார்‌ செலுத்துக இது மஹாயேசுர இரககஷ

121

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 718/2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 28 செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1242 திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 365/1911 தமிழ்‌ முன்‌ பதிப்பு

தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 8 மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

: திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குச்சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌

நாட்டுக்‌ களத்தூர்‌ திருவாலக்கோயிலுடைய நாயனார்‌ கோயிலுக்கு வடக்கே உள்ள திருமலையில்‌ இரவு நேரத்தில்‌ விளக்கு எரிக்கவும்‌, இதற்கு தினம்‌ மூன்று நாழி எண்ணெய்‌ குடுக்கவும்‌, மலை மேல்‌ எண்ணெய்‌ இட்டு விளக்கெரிக்கின்ற நபருக்குக்‌ தினக்கூலியாக குறுணி நெல்லும்‌ வழங்கிடவும்‌ கரிகாலசோழத்‌ தமிழதரையன்‌ என்பவன்‌ 56 குழி நிலம்‌ தானமாக வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1.

ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீமாஜமாஜ தேவற்கு யாண்டு இருபத்தாறாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ நாட்டுக்‌ களத்தூர்‌ உடையார்‌ திருவாலக்‌ கோயிலுடைய நாயனார்‌ கோயிலுக்கு வடக்கில்‌ திருமலை மேல்‌

ணவ வன்க விளக்கு இடுவதாக . . . . . . . . மேல்‌ தேவன்‌ உத்தமன்‌ கரிகால சோழத்‌ தமிழதரையனேன்‌ வைத்த கீழ்‌ கழனியில்‌ என[க்‌]கருளின ஒன்பதாங்‌ கண்ணாற்றுக்‌ குண்டிலு குழி ௬௬ இக்குழி ஐம்பத்தாறும்‌ காணிபுரம்‌ இறையிலியுமாக விட்டேன்‌ இந்நிலம்‌ இத்தி

வன்‌ நாயனார்‌ ஸ்ரீபளர்‌(டாரத்தி*] . . . லைத்‌ திருவிளக்குக்கும்‌ ரா[த்‌]திரிக்கு முன்னாழி எண்ணையும்‌ ஏறி இடுகிற ஆளுக்கு கூலிக்கு குறுணி நெல்லும்‌ குடுத்து பண்டாரத்தார்‌ இத்திருமலைத்‌ திருவிளக்கு சந்திராதித்தவரை இடுவிப்பார்களாக இந்நிலம்‌ காணியும்‌ இறை

ம்க்‌ புண்டரிகன்‌ . . . . . . கரிகாலசோழத்‌ தமிழதரையனேன்‌

122

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 219,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 3

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1340 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 361/1911 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சம்புவராயர்‌ ஊ.க.எண்‌ : 9

அரசன்‌ : இராசநாராயணன்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு களத்தூர்‌ உடையார்‌ திருவாலக்கோயிலுடைய நாயனார்‌ கோயிலில்‌ உள்ள கைக்கோளரில்‌ அம்பலவர்‌ வேணாவுடையார்‌ தேவாண்டை காங்கராயன்‌ என்பவரிடமிருந்து, இக்கோயிலில்‌ அரை திருநந்தா விளக்கு எரிக்க வேண்டி, இக்கோயில்‌ மன்றாடி எழும்போதககோன்‌ 15 பசுக்களைப்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்‌. கல்வெட்ரு :

1. ஷஹி

2. நீ. சகலலோகச்‌ சக்கரவதி ஸ்ரீஇராசனாராயணன்‌ சம்புவராயர்க்கு யாண்டு வது ஆவணி ம-

3. ரதம்‌ ஜயங்கொ[னர்‌]*டசோழ மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு களத்தூரில்‌ உடை-

4. யார்‌ திருவால கோயிலுடைய நாயனார்‌ கோயில்‌ கைக்கோளரில்‌ அம்பலவர்‌ வேனாவுடையார்‌ தே-

5. வாண்டை காங்கயராயன்னேன்‌ இந்னாயனார்க்கு னான்‌ வைத்த திருநந்தாவிளக்கு அரைக்கு நான்‌ வி[ட்‌*]ட பசு பதின்‌ஐ-

6. ஞ்சும்‌ இக்கோயில்‌ திருவிளக்கு[க்‌]குடி மன்றாடி தளியக்கோன்‌ மகன்‌ எழும்போதக கோனேன்‌ இன்த ப[த்‌]தின்‌ ஐஞ்‌-

123

7. சும்‌ இன்னாள்‌ முதல்‌ கைக்கொண்டு சஈாதசிதவரை நாள்‌ ஒன்றுக்கு இராசகேசரி நாழியால்‌ ஆழாக்கு நெய்‌ அள-

8. க்க கடவேன்‌ தளியக்கோன்‌ எழும்போதக கோனேன்‌ இது ஸ்ரீகாஹேறா ஈகக்ஷெ

124

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 220,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 3

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1340 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 354/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு : சம்புவராயர்‌ ஊ.க.எண்‌ : 10

அரசன்‌ : இராசநாராயணன்‌

இடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : மல்லிநாதன்‌ இராசநாராயண சம்புவராயன்‌, களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ ஊரிலுள்ள உடையார்‌ திருவாலக்கோயில்‌ உடைய நாயனார்‌ கோயிலில்‌ விளக்கெரிக்க 15 பசுக்களை இவ்வூர்‌ மல்லன்‌ மகன்‌ எழும்போதககோன்‌ என்பவனிடம்‌ அளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஹி[ஸ்ரீ] இராசநாராயண சம்புவராயற்க்கு மூன்றாவது களத்தூர்‌ கோட்டத்து களத்தூர்‌ உடையார்‌ திருவாலகோயில்‌ உடைய நாயனார்க்கு சுரபியாக

2. மல்லிநாதன்‌ இராசநாராயண சம்புவராயனேன்‌ மல்லன்‌ மகன்‌ எழும்போதககோன்‌ வசமாக விட்ட பசு பதினஞ்சும்‌ சந்திராதித்தவரை செலு-

3. த்த கடவது ஆக கை[க்‌]கொண்டேன்‌ மல்லன்‌ மகன்‌ எழும்போத[க] கோனேன்‌

125

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 10

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு கி.பி. 1347

ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 362/1911

பொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ்‌

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சம்புவராயர்‌ ஊ.க.எண்‌ 11

அரசன்‌ : இராசநாராயணன்‌

இடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : இக்கோயில்‌ கைக்கோளர்களில்‌ அம்பலவர்‌ வேணாவுடையான்‌

தேவாண்டை காங்கயராயர்‌ என்பவருக்கு களத்தூர்ப்‌ பற்று நாட்டவர்கள்‌ காணியாக வழங்கிய களத்தூர்‌ ஊரின்‌ புற ஊரான நரியன்சேரி என்ற புண்டரிகநல்லூர்‌ ஊரினை சர்வமானியமாக வழங்கியுள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ இராசனாராயணன்‌ சம்புவராயற்கு 2. வது . . யக்களத்தூர்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு களத்தூரில்‌ உள்‌

3. இக்கோயில்‌ உடைய ஸனாயனார்‌ கோயில்‌ கைக்கோளரில்‌ அம்பலவர்‌

வேணாவு-

4. டையான்‌ தேவாண்டை காங்கயராயர்க்கு களத்தூர்‌ பற்று நாட்டார்ரோம்‌

5. இவர்‌ களத்தூர்‌ ஊரவர்‌ பக்கல்‌ காணி ஆக கொண்டு உடைய களத்தூர்‌

பிடா-

6. கையில்‌ நரியன்சேரியான புண்டரிக நல்லூர்‌ இவர்க்கு சகூரஈகித்தவரையும்‌

7. ஸூவ2ஊநட இறையிலி ஆக குடுத்தோம்‌ இவ்வூர்‌ தரப்படி பொன்‌ பதின்‌

மூன்‌-

தொடர்‌ எண்‌: 721/2017

126

8. றே மூன்று மாவும்‌ பத்தாவதுக்கு எதிராமாண்டு முதல்லுக்கு களத்தூர்‌

வகையி-

9. ல்‌ கோவையில்லும்‌ கழித்து நாட்டில்லே களத்தூர்‌ பற்றில்‌ இவூர்‌ கழிந்த

10.

17.

18.

19.

20.

காணி கோ-

வையிலே ஏற்றிக்‌ கொண்டோம்‌ இப்படிக்கு இவர்‌ தரம்‌ சஈாதித்தவரையும்‌ ஸுஃவமாந;

. இறையிலியாக கை[க்‌][கொண்டு நடத்தி கொ[ள்‌]ளவும்‌ பார்ப்பது இப்படிக்கு

இவை தம்மு

: அரையன்‌ எழுத்து இவை கேசவ பெருமாள்‌ எழுத்து இவை உடையார்‌

எழுத்து இவைக்கு

. குப்பை அறமளதான்‌ எழுத்து இப்படிக்கு வயலூர்‌ கிழவன்‌ எழுத்து இப்படிக்கு இவை கருங்‌-

. குப்பை வயல்‌ நாட்டு அரையன்‌ எழுத்து இப்படிக்கு இவை சேக்கிழான்‌

எழுத்து இப்படிக்கு இவை

. குண்டை கிழான்‌ ஆக கொண்டநாயகன்‌ எழுத்து இவை செல்கலுடையான்‌

எழுத்து இப்படிக்கு இவை

. குலோத்துங்கசோழ வேளான்‌ எழுத்து இவை தென்னவதரையன்‌ எழுத்து

இவை பூதூழான்‌ கொங்கரா-

யன்‌ எழுத்து இவை நெருமூர்‌ கிழவன்‌ ஆழ்வான்‌ பிள்ளை எழுத்து இவை பூதூழான்‌ விசையரான்‌ எழுத்து இ-

வை கழுக்குன்ற வாணர்‌ எழுத்து இவை தாழம்பாக்க கிழான்‌ உலகுதொழ நின்றான்‌ எழுத்து இப்படிக்கு

இவை திருக்கழுக்குன்றம்‌ உடையார்‌ எழுத்து இவை அழகிய மாதாண்டார்‌ எழுத்து இவை சிங்கர்‌ எழுத்து

இவை விக,2சோழ தமிழதரையன்‌ எழுத்து இவை திருவால கோயில்‌

உடையார்‌ எழுத்து

127

21.

22.

23.

24.

25.

இவை முடிகொண்டசோழ தமிழதரையன்‌ எழுத்து இவை ஏகாம்பர தேவர்‌ எழுத்து

இவை நெருமூர்‌ கிழவன்‌ எழுத்து இவை திருபுவனவீர தமிழதரையன்‌ எழுத்து இவை தழுவகு-

ழைன்தா[ன்‌ ] எழுத்து இவை கருங்குப்பையார்‌ எழுத்து இவை மழவதரைய வாணவராயன்‌ எழுத்து

இவை பல்லவராயன்‌ எழுத்து இவை திருவேகம்ப உடையான்‌ எழுத்து இவை பெரியனாயந்‌

எழுத்து குளத்தூழான்‌ இபரதவர்‌ எழுத்து இவை இராசனாராயண தமிழ தரையன்‌ எழுத்து

128

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 2222017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12

வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1349 ஊர்‌ திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 364/1911 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சம்புவராயர்‌ ஊ.க.எண்‌ : 12

அரசன்‌ : இராசநாராயணன்‌

இம்‌ திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌

திருவாலக்கோயிலின்‌ திருமடைவிளாகமும்‌ அதைச்‌ சூழ்ந்திருந்த நிலமும்‌, இங்கு குடியேறும்‌ குடிகளும்‌ அரசுக்கு செலுத்தப்படும்‌ வரிகளை நீக்கி சர்வமானியமாக கோயில்‌ தானத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிகள்‌ அனைத்தையும்‌ கோயில்‌ பூசைக்கும்‌, திருப்பணிக்கும்‌ பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ சகலலோக சக்கரவதிகள்‌ ஸ்ரீஇராசநாராயணன்‌ சம்புவராயற்‌-

2. க்கு யாண்டு ௨௨ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்‌ கோட்டத்‌-

3. து களத்தூர்‌ திருவாலகோயில்‌ உடைய னாயநார்‌ கோஇல்‌ தாநத்தாற்க்கு திருவா-

4. கோஇல்‌ உடைய நாயனார்‌ திருமடைவிளாகமும்‌ திருவிருப்பு சூழன்த திருநாமத்தியில்‌ காணி

5. நாற்பாற்‌ கெல்லைக்கு உள்ளிட்ட நஞ்சை புஞ்சை . . . . புறகலனையும்‌ மற்றும்‌ பல பட்டடையும்‌ ஏறும்‌ கு[டி*]-

6. யும்‌ ஸவாமாநியம்‌ ஆகவும்‌ சன்திராதித்தவரை ஆக பூசை திருப்பணி தாழ்வற நடக்கும்படி-

7. யாக குடுத்தோம்‌ இப்படி செய்வதே

129

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 723/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1286

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1364

ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 74/1932-33

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 13

அரசன்‌ : வீரபொக்கண்ண உடையார்‌

கடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ வெளிமதில்‌ சுவர்‌.

குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுகளாக உள்ளன. கம்பண உடையார்‌ குமாரன்‌

விருப்பண்ண உடையார்‌ திருவாலக்கோயிலுக்கு சில தானங்கள்‌ வழங்கியுள்ளார்‌. மேலும்‌, லிங்கராயர்‌ என்பவர்‌ இக்கோயிலில்‌ பங்குனி மாதம்‌ இறைவனுக்குப்‌ பூசை மற்றும்‌ கோயில்‌ திருப்பணிக்காகவும்‌ சில தானங்கள்‌ வழங்கப்பட்டுள்ளது.

1. . . . ஸமாவூடி ஆயிரத்து இருநூற்று எண்பத்து ஆறாவது . . .

2. 2வ௯ஸரத்து மீந நாயற்று பூறுவ பக்ஷத்து திங்கள்கிழமைய்யும்‌ . . .

3. காண்டசோழ மண்டலத்து களத்தூற்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு

4. நாயனார்க்கு இவருஷம்‌ பங்குனி மாதம்‌ மூன்றாம்‌ தியதி முதல்‌ . . . 5. ஸ்ரீவீரபொக்கண்ண உடையாரர்]க்கு . . .

6. லிங்கராயரு இன்னாயனார்க்கு பூசைக்கும்‌ திருப்பணிக்கும்‌

130

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 724/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1320 வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1398 ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 353/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு டக்‌

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : விஜயநகரர்‌ ஊ.க.எண்‌ : 14

அரசன்‌ : விருப்பண்ண உடையார்‌

இடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து களத்தூர்க்‌ கோட்டத்து களத்தூர்‌ நாட்டு களத்தூர்‌ ஊரில்‌ உள்ள திருவாலக்கோயில்‌ உடைய நாயனார்‌ கோயிலுக்குப்‌ பூசை மற்றும்‌ கோயில்‌ திருப்பணிக்காக வேண்டி உத்ததமசோழ விளாகம்‌ என்னும்‌ நிலத்தினை வீரகம்பண உடையார்‌ தானமளித்துள்ளார்‌. அந்நிலத்தில்‌ புண்டரிகன்‌ இராசேந்திர சோழ தமிழதரையன்‌ என்பவன்‌ திருநாமத்துக்காணியாக வழங்கிய நிலம்‌ போக மீதி நிலத்தினை விலைக்கு வாங்கி இக்கோயிலுக்குத்‌ திருநாமத்துக்காணியாக இவ்வூரைச்‌ சார்ந்த கைக்கோள முதலி திருச்சூலம்‌ உடையான்‌ வேணாவுடையான்‌ வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ .திபுவனச்சகூவதி ஸ்ரீவீரஅரியண உடையார்ர்‌] குமாரர்‌

விருப்பண உடையா-

2. ற்க்குச்‌ செல்லா நின்ற ச.மாவூம்‌ ஆயிரத்து முன்னூற்று இருபதின்‌ மேல்‌ செல்ல-

3. £ நின்ற மகர நாயற்று அபரபக்ஷத்து ௨டயமையும்‌ வியாழக்கிழமையும்‌ பெற்ற

4. மகத்து நாள்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூற்‌ கோட்டத்து களத்தூர்‌

5. நாட்டு களத்தூரில்‌ உடையார்‌ திருவாலக்கோயில்‌ உடைய நாயனாற்க்கு ஸ்ரீ-

131

~

12.

13.

14.

. வீரகம்பன உடையார்‌ பூசைக்கும்‌ திருப்பணிக்கும்‌ விட்ட உத்தம-

. சோழ விளாகத்தில்‌ கட்டளை இருந்த குடிநீங்‌[கா] காணி ௩ல்‌ னால்‌

௫*ம௰௯ருல்‌

புண்டரிகன்‌ இராஜேந்திரசோழத்‌ தமிழதரையன்‌ ஆட்கொண்டான்‌ மண்டல புருஷன்‌

. திருநாமத்துக்காணியாக உகம்‌ பண்ணிந க௮அ௱எம௰ரு நீக்கி

இக்கோயில்‌ கைக்‌-

. கோள முதலிகளில்‌ திருச்சூலம்‌ உடையான்‌ வேணாவுடையான்‌ இவ்வூர்‌

புணடரிக

. தமிழதரையர்‌ உள்ளிட்டார்‌ வீரஇராசேந்திரசோழத்‌ தமிழதரையர்‌ உள்ளிட்டார்‌

இரா-

சேந்திரசோழத்‌ தமிழதரையர்‌ உள்ளிட்டார்‌ கங்கைகொண்டசோழ தமிழதரையர்‌ உ-

ள்ளிட்டார்‌ இராசநாராயணத்‌ தமிழதரையர்‌ உள்ளிட்டார்‌ பக்கலிலும்‌ விலையாகக்‌ கொண்டு இந்நாயனாற்க்கு

திருநாமத்துக்‌ காணியாகக்‌ கொண்டு கல்லுவெட்டிக்‌ குடுத்தேன்‌ இக்கோயில்‌ கைக்கோள முதலிகளில்‌ வே-

15. ணாவுடையானேன்‌

132

த.நாஅ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 725/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 5

வட்டம்‌ : செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 14-நூற்‌.

ஊர்‌ : திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 73/1932-33

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட்‌

எழுத்து : தமிழ்‌

அரசு : விசயநகரர்‌ ஊ.க.எண்‌ : 15

அரசன்‌ : விருப்பண்ண உடையார்‌ ்‌

குடம்‌ : திருவாலீஸ்வரர்‌ கோயில்‌ முன்மண்டப கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : காங்கயப்‌ பல்லவதரையன்‌ என்பவர்‌ தனது மகள்‌ பொன்னியார்‌

என்பவளின்‌ நலன்‌ பெற வேண்டி திருவாலக்கோயிலுடைய நாயனார்‌ கோயிலுக்குத்‌ தானம்‌ வழங்கியுள்ளார்‌. கல்வெட்டு முழுமை பெறாமல்‌ உள்ளதால்‌, தானத்தின்‌ விவரம்‌ அறிய இயலவில்லை. கல்வெட்ரு :

1. ஷஹஹிஸ்ரீ விருப்பண உடையற்குச்‌

2. செல்லா நின்ற ஆங்கிர[ஸ] வருஷூ காற்தி-

3. கை மரு உடையார்‌ திருவால கோ-

4. யில்‌ உடைய னா[யனா]ர்கு காங்கயப்‌ பல்ல-

5. வதரையன்‌ என்‌ மகள்‌ பொன்நியார்‌-

6. கு நன்றாக

133

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: '7226,201:7

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சுகம்‌ 1326 வட்டம்‌ செங்கல்பட்டு வரலாற்று ஆண்டு : கி.பி. 1404 ஊர்‌ திருவானைக்கோயில்‌ இ.க.ஆ. அறிக்கை : 356/1911 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு விஜயநகரர்‌ ஊ.க.எண்‌ : 16

அரசன்‌ : பொக்கண உடையார்‌

கடம்‌ திருமாலீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ களத்தூர்‌ கோட்டத்துக்‌ களத்தூர்‌ ஊர்‌

திருவாலக்கோயில்‌ கைக்கோள முதலிகளில்‌ திருச்சூலமுடையான்‌ வேணாவுடையான்‌ என்பவன்‌ புதுப்பாக்கத்தில்‌ இருந்த குறிப்பிட்ட நிலத்தினை விலைக்கு வாங்கிக்‌ கோயிலுக்குத்‌ தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹி ஸ்ரீ” ஹோாணைகிறயறற ஹறிறாய விமாடந லாெஷெக்கு தப்புவசாய கண்டன்‌ ஸ்ரீவீமவ,தாப

2. பொக்கண உடையா[ர்‌]கு செல்லா நின்ற தாரண ஷ_ஃவ௬ஸறத்து தந, நாயற்று வாவ. பக்ஷத்து ஊசியும்‌ வியா-

3. முக்‌ கிழமையும்‌ பெற்ற அநுழத்து நாள்‌ ஜெயங்கொண்டசோழ மண்டல களத்தூர்‌ கோட்டத்து களத்தூரில்‌ உடைய திரு-

4. வாலக்‌ கோயிலுடைய நாயினார்‌ கோ[யி]ல்‌ கைக்கோள முதலிகளில்‌ திருசூலமுடையான்‌ வேணாவுடையானேந்‌ புதுப்பாக்கத்தில்‌

5. யிநாளது . . . நிலத்தேவதானமான குடிநீங்கா காணி வேலி தேவதாந அளவிநால்‌ ௩௲எ௱ரும்‌ ல்‌ நான்‌ இராஜேந்திரசோழ

6. தமிழதரையர்‌ உள்ளிட்டாரும்‌ இராஜவிபாடத்‌ தமிழதரையர்‌ பக்கலும்‌ கொண்டுடைய தேவர்‌ கண்டன்‌ ஈ௩௰ம்‌

134

8.

10.

11.

12.

13.

14.

15.

|

17.

- மத ஈ௨௰ம்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ ௯௨ & ஊகம்‌ கூ ரூம்‌

குண முக்கியன்‌ ௯௨ அமக

நம்பியன்‌ உஊ௱௫௰ம்‌ ஓம்‌ மேற்படி கீழ்‌ கூற்றில்‌ தெற்கே அடைய திறப்பு நீக்கி வடக்கு &௪ம௰ம்‌ அழகிய சோழன்‌ ௯௪ இரா

- . - நங்கை உ௱௰௰ம்‌ கலியுக கன்னகுடி ௯மசு ஆக கூ ௨௲ஹருமிருக்கு விலை ஆக குடுத்த ௫“ எ௰ரும்‌ இராசநாராயண

[*தமி]ழதரையர்‌ பக்கல்‌ கொண்டுடைய மாதேவன்‌ ஈ௨௰ம்‌ தேவர்‌ கண்டன்‌ & ஈ௯ய௰ம்‌ அமராயன்‌ அ௱ரும்‌ சாமதேவ

- குண . . . தயன்‌ ஈஉ௰ம்‌ அடைவி நங்கை ஈமம்‌ அசா ரும்‌ விலைக்கு குடுத்த ப-௨௰ரம்‌ கங்கைகொண்டசோழ

[*தமி]ழதரையர்‌ பக்கல்‌ கொண்டுடைய மாதேவன்‌ சு௰ம்‌ தேவர்‌ கண்டன்‌ அமரும்‌ அமராயன்‌ . . . .செம்மல தேவ .... திருநீலகண்டன்‌ இசுமம்‌ அடைவி நங்கை கமம்‌ ஆக

௩௱எமருக்கு விலைக்கு பாம௩ம்‌ ஆக ப௩தஎமிரும்‌ பெருமா

ளெங்கிய தேவன்‌ தமிழதரையர்‌ தேவர்‌ அறமளத்தனாயன்‌ பக்கல்‌ கொண்டுடைய மாதேவன்‌ & சும்‌ தேவர்‌ கண்ட

அமராயன்‌ எரு செம்மல தேவி ௩௰௫ திருநீலகண்டன்‌ & சும அடைவி நங்கை சும ஆக ந௩௱எமருக்கு விலை

தபாய௨6' ஆக ௩கஎ௱ருமிக்கு விலையாக கொண்ட பு ஈ௨௰ருகுயும்‌ குடுத்து இப்௨,கானடி பண்ணிநபடிக்கு ஸநா-

வேய றணகெெ

135

த.நா.௮. தொல்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 7272/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 6

வட்டம்‌ : தூம்பரம்‌ வரலாற்று ஆண்டு : -

ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 553/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 1

அரசன்‌ : விக்கிரம சோழன்‌

இடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : 'பூமாலை மிடைந்து' எனத்‌ தொடங்கும்‌ விக்கிரம சோழனின்‌ மெய்க்‌ கீர்த்தியின்‌ ஒரு சிறு பகுதி மட்டும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

1. ஷஹஹிஸ்ரீ பூமாலைமிடைந்து பொன்மாலை நிதமுத்தப்‌ பாமாலை மிடைந்த பருமணிந்திரள்‌ புயத்‌ திருநிலமடந்தையோடு ஜயமகள்‌ இருப்ப

136

த.நா.அ. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 728/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 3

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1181 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 551/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : வீரராசேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

கம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : திருநீர்மலை சிங்கப்பெருமாள்‌ இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச்‌ சார்ந்த வாணியன்‌ ஆயிரவண்ணன்‌ ஆள்கொண்ட வில்லி எனும்‌ திருக்கச்சிநம்பி தாசன்‌ என்பவன்‌ ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான்‌. இக்கோயிலைச்‌ சார்ந்த நம்பிமாரில்‌ நயிமிசை யஜ்ஞ நாராயண பட்டன்‌ என்பவன்‌ கண்டகோபாலன்‌ மாடை ஒன்று இவனிடமிருந்து பெற்றுக்கொண்டுச்‌ சந்தி விளக்கு ஒன்று எரிக்கச்‌ சம்மதித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜேஈ, சோழ கேவற்க்கு யாண்டு வது ஹிஹ நாயற்று உ-

2. வாவக்ஷத்து ஒஸமியும்‌ திங்கட்கிழமையும்‌ பெற்ற அவிட்டத்து நாள்‌ திருநீர்மலை நாயநார்‌ சிங்கபெருமாளுக்கு

3. பூவிருந்தமல்லி நகரத்து வாணியரில்‌ ஆயிரவண்ணந்‌ பெருமாள்‌ வில்லியான திருக்கச்சி நம்பி உரஸன்‌ வைத்த சந்‌-

4. தி விளக்கு இசந்தி விளக்கு ஒன்றுக்கு

5. இக்கோயில்‌ நம்பிமாரில்‌ நயிமிசை யஜநாராயண லட்டன்‌ ஆயப்பிள்ளையேன்‌ கை-

6. க்கொண்ட கண்டகோபாலன்‌ மாடை இம்மாடை ஒன்றுங்‌ கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவேன்‌.

137

த.நா.௮. தொல்லியல்‌ துறை தர்‌ எண்‌: 729/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 4

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1182 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 542/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ப்ரி

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 3

அரசன்‌ : வீரராஜேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

கடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : பூவிருந்தமல்லி நகரத்தைச்‌ சார்ந்த வாணியன்‌ ஒருவன்‌ திருநீர்மலை நாயனார்‌ நீர்வண்ணனுக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஸஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜே,_ சோழ ஜேவற்க்கு யாண்டு வது மஹர நாயற்று வவ” வக்ஷத்து ஒஸமியு-

2. ம்‌ திங்கட்கிழமையும்‌ பெற்ற அவிட்டத்து நாள்‌ திருநீர்மலை நாயநார்‌ நீர்வண்ணனுக்கு பூவிருந்தமல்லி நகரத்து வாணியரில்‌ ஆயிரவ-

3. ண்ணந்‌ பெருமாள்‌ . . . திருவரங்க தாஸன்‌ வைத்த சந்தி விளக்கு இது சந்தி விளக்கு இக்கோயில்‌ நம்பிமாரில்‌ நயிமிசை . .

138

கல்வெட்ரு :

1. ஹஷிய்ீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேன்திரசோழ தேவற்க்கு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌ சோழர்‌

தொடர்‌ எண்‌: 7830/2017

ஆட்சி ஆண்டு : 6 வரலாற்று ஆண்டு : கி.பி. 1183 இ.க.ஆ. அறிக்கை : 552/1912 முன்‌ பதிப்பு :

ஊ.க.எண்‌ : 4

வீரராசேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

குன்றத்தூர்‌ நாட்டு நந்தம்பாக்கம்‌ ஊர்த்‌ தலைவன்‌ விழுப்பரையன்‌ என்கிற சோழன்‌ என்பான்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டம்‌ என்னும்‌ குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு திருநீர்மலை நாயனார்‌ நீர்வண்ணன்‌ சன்னதியில்‌ சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு 'கண்டகோபாலன்‌ மாடை” ஒன்றுத்‌ தானமளித்துள்ளான்‌. இப்பொன்னினைப்‌ பெற்றுக்கொண்ட பாண்டவதூத பட்டர்‌ ஸ்ரீதர பட்டன்‌ என்பவன்‌ விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்‌.

: நரசிம்மர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌.

யாண்டு துலா நாயற்று பூவ* பக்ஷத்து

2. இருபத்து மூன்றாந்‌ தியதியுமான ,தியோஷயியும்‌ புதன்கிழமையும்‌ பெற்ற]

ரேவதி நாள்‌ ஜஐயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலி-

3. யூற்‌ கோட்டமான குலோத்துங்க்சோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டுத்‌ திருநீர்மலை நாயநார்‌ நீர்‌[வ]ண்ணனுக்கு இம்மண்டலத்து இக்‌-

4. கோட்டத்து குன்றத்தூர்‌ நாட்டு நந்தண்பாக்கிழான்‌ விழுப்பரையனான சோழன்‌ இந்னாயநாற்கு வைத்த சந்திவிளக்கு ஒன்று இவ்விளக்கு

139

இக்கோயிலைச்‌ சார்ந்த

5. இக்கோயில்‌ நம்பிமாரில்‌ நப்பிசை பாண்டவதூத பட்டர்‌ ஸ்ரீதரபட்டனேன்‌ கைக்கொண்ட கண்டகோபாலன்‌ புதுமாடை இம்மாடை

6. ஒன்றுங்‌ கைக்கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவேன்‌ பாண்டவ தூத பட்டன்‌ ஸ்ரீதர பட்டன்‌

140

த.நா.அ. 5தால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 731/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 12

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1190 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 540/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட்ரீ

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 5

அரசன்‌ : திரிபுவன வீரராஜேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

கம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஆமூர்‌ கோட்டத்து புலிப்பாக்கம்‌ எனும்‌ சீலசிந்தாமணிச்‌ சதுர்வேதி மங்கலத்தைச்‌ சார்ந்த வடுகனாதன்‌ மாரிப்பிள்ளை என்கிற அருமாதவன்‌ என்பவன்‌ திருநீர்மலை எம்பெருமானுக்குச்‌ சந்தி விளக்கு வைக்க ஒரு மாடைப்‌ பொன்‌ அளித்துள்ளான்‌. இக்கோயிலைச்‌ சார்ந்த நைமிசை திருநீர்மலை நம்பி என்கிற பிரான்‌ கோவிந்த பட்டன்‌ என்பான்‌ ஒரு மாடையைப்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாகச்‌ சம்மதித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஷிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திரசோழ தேவற்க்கு

2. யாண்டு ௰௨ வது மேஷ நாயற்று பூவ*வக்ஷத்து அ,யோமுமரியும்‌ திங்கள்‌ கி-

3. ழமையும்‌ பெற்ற புணர்பூசத்தினாள்‌ திருநீர்மலை எம்பெருமானுக்கு ஆமூற்‌ கோ-

4. ட்டத்து புலிப்பாக்கமான சீலசிந்தாமணி சதுர்வேதிமங்கலத்து புலிப்பாக்கமு-

5. டையான்‌ வடுகநாதந்‌ மாரிப்பிள்ளையான அருமாதாவனேன்‌ வைத்த சந்திவிளக்கு இ-

6. ச்சந்தி விளக்கு ஒன்றுக்கும்மாக கோயில்‌ நைமிசை திருநீர்மலை நம்பி ஆன பிரான்‌ கேசவ-

141

7. பட்டனேன்‌ கைக்கொண்ட மாடை இம்மாடை ஒன்றுங்‌ கொண்டு இத்திருவிளக்கு 8. சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவேன்‌ கேசவ பட்டனேன்‌

142

த.நா.௫. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7322017

காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 12

தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.1190 : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை :

தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 6

மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

: நீர்வண்ணர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புழற்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டு

திருநீர்மலை ஊரிலுள்ள திருநீர்மலை நாயனார்‌, சிங்கப்பெருமாள்‌, நாயனார்‌ நீர்வண்ணன்‌ ஆகியோருக்கு திருபுதியிதுக்கு அமுதுபடி, சாத்துபடி போன்றவற்றிற்காக ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து தியாகவல்லி வளநாட்டு கண்ணனூர்‌ ஊரில்‌ உள்ள ஐந்தரை வேலி நிலத்தினை மூலதனமாகக்‌ கொண்டு நடத்திடுவதற்கு திரையனூர்‌ என்கிற குலோத்துங்கசோழச்‌ சதுர்வேதிமங்கலத்து மகாசபையார்‌ இந்நிலத்தினைத்‌ திருவிடையாட்டமாக அளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1.

ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோநேரிமேல்கெண்டான்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு ம௨ வது திரையனூரான குலோத்துங்கசோழச்‌ சது[ர்‌]வேதிமங்கலத்து மஹாஸஹலையோம்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்து

. புலியூற்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டு திருநீர்மலை நாயனார்‌ சிங்கப்‌

பெருமாளுக்கும்‌ நாயனார்‌ நீர்வண்ணனுக்கும்‌ திருப்புதியிதுக்கு அமுதுபடி சாத்துபடிக்கு திருவிடையாட்டமாக ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து தியாகவ- ல்லி வளநாட்டு கண்ணனூரான குலோத்துங்கசோழச்‌ சதுர்வேதி மங்கலத்து ராஜநாராயண விளாகத்து விசூ,மசோழ வதிக்கு கிழக்கு மும்முடிசோழ

வாய்க்காலுக்கு . . . . .. .. . நான்காஞ்‌ சதிர[ம்‌முதல்‌ தெற்கு ஆறாங்‌ கண்ணாற்று

143

4. க்கு வடக்கு கீழ்‌ . . . ஞ்சது . . . உண்ணிலம்‌ ஒழிவின்றி ௫௫ இன்னிலம்‌ ஐந்தரைவேலியும்‌ திருநீர்மலை நாயநார்‌ சிங்கப்‌ பெருமாளுக்கும்‌ நீர்வண்ணனுக்கும்‌ திருப்புதியிது அமுதுபடி சாத்துப்படிக்குத்‌ திருவிடை -

5. யாட்டமாக . . . த்துக்கு உடலாக விட்டோம்‌ இவ்வூர்‌ மஹாஹலையோடி

பவ ஆ, ச்ச 8. - டு 0 Sy ட்‌ 5 ன்‌ i பப்பத்‌ கு வ்‌ 3௪ 313. 122105 3! பணை (ம ட்‌ 3 பப is

144

த.நாஅ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7383/2017

மாவட்டம்‌ : செங்கல்பட்டு ஆட்சி ஆண்டு : 28

வட்டம்‌ சைதாப்பேட்டை வரலாற்று ஆண்டு : கி.பி. 1206 ஊர்‌ திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : -

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு து

எழுத்து ; தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 7

அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

கடம்‌

குறிப்புரை : ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டத்து கோவூர்‌

என்கிற உலகமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன்‌ அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத்‌ திருநீர்லை திருமலையில்‌ உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும்‌, மலை அடிவாரத்தில்‌ உள்ள கருவண்ணமேனி எம்பெருமானுக்கும்‌ தேவையான வழிபாட்டுச்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ கோனேரிமேன்‌ கொண்டான்‌ ஓலை .ஜசில வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு [௨௮] வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்‌ கோட்டத்து குலோத்துங்கசோழ வளநாட்டு திருநீர்மலை திருமலை மேல்பற்று

2. இருந்தருளின ஸ்ரீநரசிங்கத்தெம்பெருமானுக்கும்‌ திருவடிவாரத்து நின்றருளின கருவண்ணமேனி எம்பெருமானுக்கும்‌ பல நிமந்தங்களுக்கு இறுப்பதாக இம்மண்டலத்து இக்கோட்டத்து இன்னாட்டு கோவூரான உலக மாதேவிச்‌ சது-

3. வே-திமங்கலத்து இரண்டாங்‌ கட்டளை கீழ்பாற்கெல்லை கறைப்பாக்கத்து பெருந்திருக்கோயிலுடையார்‌ கோயிலுக்கு மேற்கு நீர்‌ விழுக்காடு தெற்கு நோக்கிப்‌ போய்‌ கலிச்சியாற்றி . . . ற்று கலிச்சியாறே தெற்கு நோக்கிப்‌ போய்‌ கலிங்கேரிநே விடனும்‌ . . . . திரு-

145

4. [வி]ளக்காலிலேவட . . தென்பாற்கெல்லை . . . . . கெல்லை பெரு[விழிக்கு பெருங்காலே வடக்கு வடக்கு நோக்கிப்‌ போய்த்‌ கறைப்‌ பாக்கத்தான்‌ பிரிவு காலிலே வடபாற்கெல்லை கறைப்பாக்கத்தான்‌

5. [மறிங்‌]காலே கிழக்கு நோக்கிப்போய்‌ பெருந்திருக்கோயில்‌ மேலைநீர்‌ விழுக்காட்டில்‌ வற இன்னாற்பாக்கு எல்லைக்கு உள்ப்பட நீர்நிலமும்‌ குற்றேத்தமும்‌ ஆறு இடுகையும்‌ குளத்துள்‌ அடைகரையும்‌ நத்தமும்‌ நீர்‌

6. நிலையும்‌ நீரோடுகாலும்‌ உண்ணிலவொழிவின்றி இந்நிலம்‌ எழுபத்து

ஐவேலியும்‌ ஸ்ரீநரசிங்கத்தெம்பெருமானுக்கும்‌ கருவண்ணமேநி எம்பெருமானுக்கும்‌ இருபக்கா ... ... வேண்டும்‌ பெருமாள்களுக்குப்‌ பல நிம

146

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 232017

மாவட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 23 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.1210 திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 557/1912 தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 5

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 8

திரிபுவன வீரராசேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

3: நீர்வண்ணார்‌ கோயில்‌ ராமர்‌ சன்னதி தென்புறச்‌ சுவர்‌.

குறிப்புரை : அணைக்கரைச்சேரி என்கிற சோழகங்கதேவ நல்லூர்‌ ஊரைச்‌ சார்ந்த

பஞ்சநதிவாண நீலகங்கரையன்‌ நல்லநாயன்‌ என்றழைக்கப்பட்ட சோழகங்கதேவன்‌ என்பவன்‌ பம்மல்‌ நக்க நாயனார்க்‌ கோயிலுக்கு 10 வேலி நிலத்தினைத்‌ தேவதானமாக வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1.

ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ [சக்கர]வத்திகள்‌ ஸ்ரீவீரராஜேந்திரசோழ தேவற்கு யாண்டு ௨௰௩வது கற்கடக நாயற்று ஒவ” பக்ஷத்து உமியும்‌ பெற்ற ரோகினி நாள்‌ ஜயங்கொண்டசோழ மணி்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டத்து மேன்மாங்காட்டு நாட்டு வாயிஞ்‌ . . நல்லூரான சோழநின்பச்‌ சதுவே-திமங்‌-

கலத்துப்‌ பிடாகையா . . . ர்‌ சபையார்‌ பக்கல்‌ ஆரியரில்‌ திருவண்ணாமலையுடையானான ஐய்யந்‌ நுக்கசற்ப பிரமாராயர்‌ மகன்‌ வளத்து வாழ்வித்தார்‌ கொண்டு உடைய காணி அணைக்கரைச்சேரி ஆன சோழகங்கதேவ நல்லூரில்‌ உடையார்ப்‌ பம்மல்‌ நக்க நாயநார்க்குத்‌ தேவதானமாக நா-

. யநார்‌ சோழகங்க தே . . . . நிலம்‌ பத்து வேலிக்கு கீழ்பார்க்கெல்லை

சோறுடையான்சேரி எல்லைக்கும்‌ நடுவில்‌ தண்டு கரைக்கு மேற்க்கு கீழாய னேத்தமுள்படவும்‌ தென்பாற்க்‌ கெல்லை நடுவில்‌ சிற்றோடைக்கு வடக்கும்‌ மேல்பாற்க்‌ கெல்லை கருமா[ணிக்க] தாங்கலுக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை ஊர்‌ நத்த-

147

4. த்துக்கு தெற்க்கும்‌ ஆக . . . . கெல்லையுள்‌ நடுவுள்பட்ட மிகுதிக்‌ குறைவு உள்ளடங்க நிலம்‌ பத்து வேலியும்‌ தேவதானமாக இட்டோம்‌ பஞ்சநதிவாண நீலகங்கரையன்‌ நல்லநாயநான சோழகங்க தேவனேன்‌ இவை சோழ கங்கதேவன்‌ எழுத்து இத்தன்ம்மத்துக்கு விட்ட அகிதம்‌ சொன்னார்‌ உண்டாஇல்‌ கெங்‌-

5. கைக்கரையில்‌ குராற்‌[பசுவை கொன்றான்‌ பாவம்‌ கொள்ளக்‌ கடவன்‌ ஸ்ரீமாஹேறற ஈகக்ஷ:-

148

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 235,2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 34 தூம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1212 திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 556/1912 தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 9

திரிபுவன வீரராசேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

: நீர்வண்ணர்‌ கோயில்‌ ராமர்‌ சன்னதி தென்புற அதிட்டானம்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மணர்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டம்‌ என்கிற

குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டுப்‌ பிரிவிலுள்ள பம்மல்‌ ஊர்க்‌ கோயிலின்‌ இறைவன்‌ பம்ம நக்க நாயனாற்கு திருவைகாசி திருநாள்‌ வழிபாட்டுச்‌ செலவினங்களுக்காக, திருமடைவளாகத்தில்‌ இருப்பவர்களிடம்‌ வசூலிக்கப்படும்‌ வரியினைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள பஞ்சநதிவாணன்‌ நல்லநாயன்‌ என்கிற சோழகங்கதேவன்‌ ஏற்பாடு செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1

ஷஹிஸ்ரீ .தி,வூவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜேர. சோழ தேவற்கு யாண்டு ௩௰௪ வது 8ஷம நாயற்று ௨௫வ*வக்ஷத்து .ிதியையும்‌ புதன்‌ கிழமையும்‌ பெற்ற பூ-

. சத்து நாள்‌ ஐயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டமான

குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு [பம்மல்‌] உடையார்‌ பம்மல்‌ நக்க னாயனாற்கு பஞ்‌[சநதி]

. வாணன்‌ நல்லநாயனான சோழகங்கதேவநேன்‌ உடையார்‌ பம்மனக்க

நாயனாற்கு திருவைகாசி திருநாளைக்கு நாம்‌ இடும்‌ ..... க்கும்‌ உடலாக இன்னாயனார்‌ திரும[டை]

. விளாகத்து நியாயத்தார்‌ பேரில்க்‌ கடமை பொன்வரி நாட்டுவரி குடிமகண்மை

காணிக்கை . . . பட்டி குற்றம்‌ வே..... வார்‌ பெற கடமை பொன்‌ வரி குடிமகண்மை

149

5. காணிக்கை பெற்றுக்காசு நாட்டுவரி உப்பளம்‌] வரி பெற கடமை பொன்வரி நாட்டுவரி குடிமகண்மை காணிக்கை பெற்று காசு பெற ......

6. ட்டு வரி குடிமகண்மை .....

150

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7386/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு தக

வட்டம்‌ தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1178-1218 ஊர்‌ திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 559/1912 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எளர்‌ : 10

அரசன்‌ : வீரராஜேந்திரன்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

கடம்‌ 3: நீர்வண்ணர்‌ கோயில்‌ கோபுர வாயிலின்‌ இடதுபுறம்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்‌ கோட்டமான குலோத்துங்க

சோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு மடப்புறம்‌ தண்ணியாலத்தூர்‌ என்கிற ஊரில்‌ உள்ள பள்ளிப்படை அகரத்து விஸ்வேஸ்வர நாயனார்‌ இறைவனுக்குப்‌ பூசை மற்றும்‌ கோயில்‌ திருப்பணிகளுக்காக பஞ்சநதிவாணன்‌ நீலகங்கரையன்‌ என்பவன்‌ 12 வேலி எட்டு மா அளவு நிலம்‌ தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஹஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜேக, சோழ தேவற்க்கு . . . ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்‌ கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு மடப்புறம்‌ தண்ணியாலத்தூரில்‌ முதலியார்‌ பள்ளிபடை அகரத்து எழுந்தரு-

2. ளுவித்த உடையார்‌ விஜஞெறாா நாயனார்க்கு பஞ்சநதிவாணன்‌ நீலகங்கரையனேன்‌ பூ[சை]க்கும்‌ திருப்பணிக்கும்‌ உடலாக நாம்‌ விட்ட இத்தண்ணியாலத்தூரில்‌ திருக்கோயில்சூழ்‌ தடி உள்வரிப்படி விட்ட நிலம்‌ ஒரு வேலியும்‌ இக்கோட்டத்து இந்நாட்டு அரும்பள்ளியில்‌ தடி உள்வரிப்படி விட்ட நிலம்‌ ஒரு வே-

3. லியும்‌ இக்கோட்டத்து பேறூர்‌ நாட்டு வன்னிசேர்‌ பாக்கத்து அல்லிமூலை பற்று தடி உள்வரிபடியும்‌ இக்கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டு புழிச்சலூர்‌ பிறிவான வெட்டுவான்பட்டில்‌ நம்முடைய பூந்தோட்டங்களில்‌ திருனந்தவனமாக விட்ட ஆற்றங்கரைக்‌ கொல்லை ஒழுகின்படி குழி எண்ணூற்றினால்‌ நிலம்‌ எட்டுமாவும்‌ ஆக நி-

151

4. லம்‌ பன்னிரண்டே எட்டு மாவும்‌ திருக்கோயில்‌ சூழ்‌ பெருங்காலுக்கு மேற்கு .... ஆக நிலம்‌ ம௨அம ல்‌ கூக்கும்‌ இன்னாள்‌ முதல்‌ அரிப்பாடி காவலில்‌ ஊர்காவற்‌ பேர்கொள்ளும்‌ நாலில்‌ ஒன்று நீக்கி அல்லாத நாம்‌ கொள்ளும்‌ கடமை ஆயம்‌ காசு கடமை பட்டிகுற்றம்‌ . . காத்திகைப்‌ பச்சை

5. காணிக்கை வெட்டிக்காசு வெட்டி அரிமுக்கை உட்பட அனைத்தாயங்களும்‌ இன்னாயனார்‌ திருப்பணிக்கும்‌ உடலாக விட்டேன்‌ பஞ்சநதிவாண நீலகங்கரையனேன்‌ இது சாஹேறாற ஈகை

152

த.நா.௫. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7372/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 6

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1222

ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 533/1912

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தது

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 11

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலியூர்க்‌ கோட்டத்து மாங்காடு நாட்டு மலையம்பாக்கம்‌ ஊரைச்‌ சார்ந்த

கையரையன்‌ திருவகத்தீசுரமுடையான்‌ என்பவனிடமிருந்து ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டத்துச்‌ சுரத்தூர்‌ நாட்டு திருநீர்மலை எம்பெருமாள்‌ கோயிலில்‌ காணியுடைய நம்பிமாரில்‌ பாரத்வாஜ கோத்திரத்தைச்‌ சார்ந்த அருளாள பட்டன்‌ திருவேட்டை அழகியான்‌ என்பவன்‌ 1% பழங்காசுகள்‌ பெற்றுக்கொண்டு ஒரு திருவிளக்கெரிக்க சம்மதித்துள்ளச்‌ செய்தி. கல்வெட்ரு : 1. ஷஹஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராசராச தேவற்க்கு யாண்டு வது துலா நாயற்று ந்தி-

2. யதியும்‌ அபரபக்ஷத்து துவிதிகையுங்‌ கார்த்திகை நாயற்றுக்‌ கிழமையுமான நாள்‌ ஜயங்கொண்டசோழ மண்டல-

3. த்து புலியூற்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டு திருநீர்மலை எம்பெருமாளுக்கு இக்கோட்டத்து மாங்காட்டு நாட்டு ம-

4. லையம்பாக்கத்து கையரையன்‌(யகு) திருவகத்தீசுரமுடையாந்‌ வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு இக்‌-

5. கோயிலில்‌ காணியுடைய நம்பிமாரில்‌ மாறதாஜி அருளாள பட்டந்‌ திருவேட்டை அழகியாநேந்‌ கைக்கொ-

153

6. ண்ட பழங்காசு பழங்காசு ஒன்றரையுங்‌ கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செய்துக்‌ கடவோமாக

7. ச[ம்‌*]மதித்து கைக்கொண்டேன்‌ அருளாள பட்டந்‌ திருவேட்டை அழகியாநேந்‌

154

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7388/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 16

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1231 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 544/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு p

எழுத்து : கிரந்த கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 12 அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கம்‌ : திருநீர்மலை நீர்வண்ணர்க்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : பெருங்கனல்‌ வட்டம்பாக்கம்‌ ஊர்த்‌ தலைவன்‌ அருளாளப்‌ பெருமாள்‌ சீயன்‌ என்பானிடமிருந்து திருநீர்மலை எம்பெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்காக இக்கோயிலைச்‌ சேர்ந்த பாரத்வாஜ கோத்திரத்தைச்‌ சார்ந்த மலைக்கினிய நின்றான்‌ என்பவன்‌ ஒன்றே முக்கால்‌ மாடை பொன்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்‌.

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராசராச தேவற்கு யாண்டு வது மநு நாயற்று பூவ4வக்ஷீத்து பகமி-

2. யும்‌ நாயற்றுக்‌ கிழமையும்‌ பெற்ற அவிட்டத்து நாள்‌ திருநீர்மலை எம்பெரு ரானுக்குப்‌ பெருங்கனல்‌ வட்‌-

3. டம்பாக்கிழான்‌ அருளாளப்‌ பெருமாள்‌ சியன்‌ வைத்த சந்திவிளக்கு சந்திவிளக்கொன்றுக்கு இக்கோயிற்

4. காணியுடைய நம்பிமாரில்‌ மாாதாஜ ஆஸுூ[ஈ] மலைக்கினிய நின்றான்‌ ஹட்டன்‌ கைக்கொண்ட பழங்‌ -

5. காசு கக இப்பழங்காசு ஒன்றே முக்காலுங்‌ கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக்கடவே-

6. ன்‌ மலைக்கினிய நின்றான்‌ லட்டநேன்‌

155

த.நா.௮. ஏதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7839/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 16

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1232 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 534/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : -

எழுத்து தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 18 அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : மதுராந்தகப்‌ பொத்தப்பிச்‌ சோழன்‌ கண்டகோபாலன்‌ என்பவன்‌ திருநீர்மலை எம்பெருமானுக்கு “திருவாழிபரப்பினான்‌ சந்தி*யின்போது அமுதுபடி, சாத்துபடி, திருநந்தாவிளக்கு ஆகியவற்றிற்காகப்‌ பத்து வேலி நிலம்‌ தானமாக அளித்துள்ளான்‌.

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ

2. தேவற்கு யாண்டு வது நாள்‌ ௪௰ முதல்‌ மதுராந்த-

3. கப்‌ பொத்தப்பிச்சோழன்‌ கண்டகோபாலந்‌ திருநீர்ம-

4. லை எம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக திருவாழிபரப்பிநா- 5. ந்‌ சந்தி அமுதுபடி சாத்துபடியுந்‌ திருநந்தா விளக்கு ம-

6. லைஎதிர்க்‌ குன்றத்தூர்‌ பெருமதகுக்‌ கால்ப்போக்கில்‌ கழ-

7. னி ௫௭௬ மதுறமுடிபாத்து எல்லை கோக்குளவாய்‌ கண்ணாறு 8. ௪ம்‌ ஆக நிலம்‌ பத்து வேலியும்‌ திருவிடையாட்டமாக

9. அனைத்தாயங்களும்‌ உட்பட விட்டது இந்நிலங்‌ கொண்டு

10. இச்சந்தி சந்திராதித்தவரை செலுத்துவதே

156

த.நா.௮, ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: '740,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 19

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1235 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 562/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 14

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

கடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ - நரசிம்மர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : இக்கோயில்‌ சிங்கபெருமாள்‌ சன்னதியில்‌ ஒரு சந்தி விளக்கு எரிக்க கோவிந்த பட்டன்‌ என்பவன்‌ “கண்டகோபாலன்‌ மாடை” ஒன்று தானமாக வழங்கியுள்ளான்‌. இக்கோயிலில்‌ காணியுடைய கிருஷ்ணபட்ட சோமயாசி என்பவனின்‌ மகன்கள்‌ பாரத்வாஜி பட்டன்‌, சிங்கப்பெருமாள்‌ ஆகியோர்‌ ஒரு மாடைப்‌ பொன்‌ பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. திரிபுவநச்‌ சக்ரவத்திகள்‌ ஸ்ரீமாஜமாஜ மேவற்‌[கு*] யாண்டு ௨௯ வது மேஷ நா-

2. யற்று வவத்து ஜாஃபநியும்‌ திங்கள்‌ கிழமையும்‌ திருவோணத்து நாள்‌ ஐ-

3. யங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புழற்கோட்டத்து நின்றவூர்‌ ஹாமதாஜி உறு(ப்‌)பி-

4. ட்டூரனாய புலியூர்‌ கோட்டத்து . . ணியபுதூ[ர்‌ *] எழுதி உபைய லோவிந லட்டநேன்‌

5. இ[க்‌[கோயில்‌ சிங்கபெருமாளுக்கு ஒரு நி விளக்கொன்றுக்குக்‌ குடுத்த கண்டகோபாலன்‌ மாடை இம்மாடை ஒன்றுக்கும்‌

157

6. இக்கோயிலில்க்‌ காணி உடைய நைய்மிசை ஸ்ரீூஷ மட்ட ஷொமயாசி- 7. யார்‌ பிள்ளைகளில்‌ வாறதாஜி ஸட்டனும்‌ சிங்கப்‌ பெருமாளும்‌

8. கைக்கொண்டு வகாசிதவரை இத்திருவிளக்கொன்றும்‌ செலுத்துவோ மானோம்‌.

158

த.நா.௮௩ ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 741/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 23

வட்டம்‌ தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1239 ஊர்‌ திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 561/1912 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 15

அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

டம்‌ : நரசிம்மர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : பெருங்கனல்‌ வட்டம்பாக்கம்‌ ஊரைச்‌ சார்ந்த பட்டாலகன்‌ என்பவன்‌

திருநீர்மலை நாயனார்‌ சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ திரிபுவன(த்‌!) சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராசராச தேவற்கு ௨௰௩ வது மிதுன நாயற்று அபரபக்ஷத்து ஒஸமியும்‌ நாயற்று-

2. க்கிழமையும்‌ பெற்ற அறாதி நாள்‌ திருநீர்மலை நாயநார்‌ சிங்கப்பெருமாளுக்குப்‌ பெருங்‌[கன]ல்‌ வட்டம்பாக்கம்‌ பட்டாலகன்‌

3. . . . நேன்‌ வைத்து சந்திவிளக்குக்கு கொண்ட ........ கொண்டு இக்கோயில்‌ கணக்கன்‌ உடையார்‌ திருமிழிசை வாழ்வா]

1. “ச்‌: என்று இருக்கவேண்டும்‌.

159

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7422017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 10

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1260 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : தெலுங்குச்‌ சோழர்‌ ஊ.க.எண்‌ : 16

அரசன்‌ : விசையகண்டகோபாலன்‌

கடம்‌ $5

குறிப்புரை : பெருங்கனல்‌ ஊரைச்‌ சார்ந்த வட்டப்பாக்கம்‌ ஊர்த்‌ தலைவனின்‌ மகன்‌ பட்டாலக தேவன்‌ என்பவன்‌ திருநீர்மலை சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒரு மாடைப்‌ பொன்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ விசயகண்ட கோபால தேவற்க்கு யாண்டு ௰- 2. வது தை மாதத்தில்‌ மகர நாயற்று அபரபக்ஷத்து வகுமி- 3. யும்‌ நாயற்றுக்கிழமையும்‌ அத்தத்து நாள்‌ [நாயனார்‌] 4. சிங்க பெருமாளுக்கு பெருங்கனல்‌ வட்டம்பாக்கிழா[ன்‌] மகந்‌ 5. பட்டால தேவந்‌ வைத்த சந்தி விளக்கு ஒன்றும்‌ இக்கோ- 6. யிலில்‌ [நம்பிகளில்‌] [நைமிசை] அருளாள பட்டன்‌ கைக்கொண்‌-

7. மாடை இம்மாடை ஒன்றும்‌ கைக்கொண்டு

160

த.நா.௮. ஒதால்ல்யல்‌ துறை தொடர்‌ எண்‌: 743/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 37 வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1304 ஊர்‌ : திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 555/1912 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : பாண்டியர்‌ ஊ.க.எண்‌ i அரசன்‌ : மாறவர்மன்‌ குலசேகரபாண்டியன்‌

இடம்‌ : நீர்வண்ணர்‌ கோயில்‌ ராமர்‌ சன்னதி மேற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : பஞ்சநதிவாணன்‌ திருவேகம்பன்‌ என்கிற நீலகங்கன்‌ என்பவன்‌, தான்‌ பிறந்த பங்குனி மாதம்‌ ஹஸ்தம்‌ நாளன்று ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்‌ கோட்டம்‌ எனும்‌ குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு பம்மல்‌ என்னும்‌ ஊர்‌ கோயில்‌ இறைவன்‌ பம்மநக்க நாயனாருக்கு வழிபாடுகள்‌ நடத்திடுவதற்கு புலியூர்க்‌ கோட்டத்து கால்பாய்‌ நாட்டு வடக்குப்பட்டு என்னும்‌ ஊரிற்கு தனது பெயரால்‌ குமாரகோபால நல்லூர்‌ என்ற பெயரிட்டுத்‌ தானமாக வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ கோமாறபன்பர்‌ தில வனச்‌ சக்கரவத்திகள்‌ கு[ல*]சேகர தேவற்‌[கு *] யாண்டு ௩௰எ வது கற்கடக நாயற்று பூவஃபக்ஷத்து பஞ்சமியும்‌ புதன்கிழமையும்‌ பெற்ற உத்திரத்தின்‌ நாள்‌ ஜயங்கொண்ட சோழமண்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டமான குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு பம்மலில்‌

2. உடையார்‌ பம்மநக்க நாயனார்‌(ற்‌)கு பஞ்சநதிவாணன்‌ திருவேகம்பனான நீலகங்கனேன்‌ உடையார்‌ பம்மநக்க நாயனார்க்கு திருப்பங்குனி மாதம்‌ நம்‌ ஜன்ம நக்ஷ.குமான அத்தமாக எழுந்தருளுகிற திருநாள்படிக்கு இம்மண்டலத்து இக்கோட்டத்து கால்பாய்‌ நாட்டு பெரும்பாக்கமான இரா-

3. சஇராசநல்லூர்‌ வெள்ளைக்காப்பகளும்‌ நெடுங்கண்ணகளும்‌ பக்கல்‌ குத்தன்‌ பாக்கத்தில்‌ அகம்படியாரில்‌ திருக்காளத்தி உடையானான நரசிங்க பன்மன்‌

161

கொண்டுடைய வடக்குபட்டுக்கு நம்பேராலே குமாரகோபால நல்லூர்‌ என்று பேராவதாகவும்‌ இவ்ஊர்க்கு எல்லை ஆவது

கீழ்பார்க்கெல்லை வெருநூர்‌ மேல்பாற்கெல்லைக்கு மேற்கு வடக்கு நோக்கிப்‌ போகிற எங்காலுக்கு மேற்கும்‌ தெந்பாற்கெல்லை துற்கை பட்டியென்றும்‌ வடுகனேன்‌ நும்பேருடைய செய்களில்‌ வடவரம்பில்‌ கிழக்கு

. பேருடைய இக்காலமும்‌ மிழலைச்‌ செறுவையும்‌ எழுமூர்க்‌ குண்டலையும்‌ நடுவுற்‌ பிளந்து கிழக்கு நோக்கிப்‌ போய்‌ எங்காலுற்ற செவ்வைக்கு வடக்கும்‌ இன்னும்‌ இவ்‌ஏரிக்கரை ஊடறுத்து இச்செவ்வை நோக்கிப்‌ போகிற வடுகமென்‌-

கெல்லைக்குக்‌ கிழக்கும்‌ இன்னும்‌ மோடைபாக்கத்துக்‌ கீழ்பாற்கெல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை இம்மோடைபாக்கத்தில்‌ எல்லை கிழக்குத்‌ திரிந்த தெந்பாற்க்கு தெற்கும்‌ இன்னும்‌ பள்ளிகள்‌ காரனையில்‌ தெந்பாற்கெல்லைக்கு தெற்கும்‌

. ஆக இந்னாற்பாற்‌ கெல்லைக்கு மிகுதிக்குறை உள்ளடங்கின ௨௰௫ ஹூ கொல்லை நிலமும்‌ நத்தமு[ம்‌ *] மனையும்‌ படப்பும்‌ மன்றுங்‌ கன்று நிலை

பாழும்‌ மரமும்‌ கிணறும்‌ நருநீரோடுகாலும்‌ பொதுவும்‌ போதாரியும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட சகலப்பிராப்த்திகளும்‌ வுட்ப-

இத்திருக்காளத்தி உடையானான நரசிங்கபன்மன்‌ கொண்ட இவூரில்‌ னாற்பாற்கெல்லைக்கு உட்பட்ட நிலத்தில்‌

162

த.நா.௮. தொல்லியல்‌ துறை தூர்‌ எண்‌: 2744/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 16

வட்டம்‌ தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-நூற்‌. ஊர்‌ திருநீர்மலை இ.க.ஆ. அறிக்கை : 554/1912 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு து

எழுத்து : தமிழ்‌

அரசு பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 18

அரசன்‌ : திரிபுவன சுந்தரபாண்டியன்‌

: நீர்வண்ணார்‌ கோயில்‌ ராமர்‌ சன்னதி வடபுறச்‌ சுவர்‌.

குறிப்புரை : பம்மல்‌ ஊரில்‌ இருக்கும்‌ வியாபாரி குன்றமுடையான்‌ மெய்ஞ்ஞான

வித்தகன்‌ திருவெண்காடுடையான்‌ என்பவன்‌ பம்மனக்கர்‌ நாயனார்‌ வழிபாட்டிற்காகவும்‌, திருப்பங்குனி, திருவைகாசி ஆகிய திருநாள்களில்‌ வழிபாட்டுச்‌ செலவினங்களுக்காகவும்‌ கோயில்‌ தானத்தாரிடம்‌ தானம்‌ வழங்கியுள்ளான்‌. கல்வெட்டு முற்றுப்பெறொமல்‌ உள்ளதால்‌ தானத்தின்‌ முழுவிவரம்‌ அறிய இயலவில்லை.

கல்வெட்ரு :

1. [ஹஷ]ஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மசு வது உடையார்‌ *] பம்ம னக்கர்‌ நாயனார்‌ கோயில்த்‌ தானத்தாற்கு பம்மலி[ல்‌*] இருக்கும்‌ வியாபாரிகளில்க்‌ குன்றமுடையான்‌ மெஞ்ஞான வித்தகன்‌ திருவெண்காடுடையானே திருவெ .

2. திருப்பவனிக்கு திருப்பங்கூனித்‌ திருநாளுக்கும்‌ திருவைகாசித்‌ திருநாளுக்கு மேலும்‌ கணுந்‌ திருநாள்களுக்கும்‌ திருப்பவனிக்‌ குறைவறுப்புக்குப்‌ பிள்ளையார்‌ திருமுன்பாகத்‌ தானத்தாருடனுங்‌ கூட நிச்சயித்து நானுபைய கொண்டபடி-

3. க்கு அரிசி தூணிப்பதக்கும்‌ கறிஅமுதுக்கு வாழைக்காய்‌ ஒன்பதும்‌ வழுதலைக்காய்‌ ஐம்பதும்‌ தேங்காய்‌ ஒன்றும்‌ வாழைப்பழம்‌ பத்தும்‌ கருப்புக்கட்டி வட்டு இருபதும்‌ மிளகு அமுது உழக்கும்‌ உப்புஅமுது நாழியும்‌ தையிரர்‌]

163

4. னாழியும்‌ நெய்‌(ய்‌) அமுது உரியும்‌ விறகு கட்டு ஒன்றும்‌ திருச்செங்கழுநீர்த்‌ திருமாலை ஒரணையும்‌ திருநெற்றி மாலை ஒன்றும்‌ திருவாக்கழல்‌ ஒன்றும்‌ திருச்சடாபாரத்துக்கு வெள்ளைத்‌ தொடையும்‌ நாச்சியார்க்கு வெள்ளைத்‌ திருமாலை ஓரணையும்‌ தி... .

5. ய்‌ ஒன்றும்‌ திருவபிஷேகத்துக்கு தொடைப்பூவும்‌ கற்பூர வெள்ளை சாத்துப்படிக்குத்‌ திருமேற்பூச்சு பதின்கழஞ்சும்‌ கற்பூரம்‌ அரைக்கழஞ்சும்‌ அடைக்காயமுது பாக்கு இருபது வெற்றிலை நாற்பது சீபாதந்‌ தாங்கு வார்க்குப்‌ பணம்‌ இரண்டும்‌ திருவி . . . .

164

த.நாஅ. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 745/2017

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 35 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1213 பம்மல்‌ இ.க.ஆ. அறிக்கை :

தமிழ்‌ முன்‌ பதிப்பு 5

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 1

திரிபுவன ஸ்ரீவீரராசேந்திர சோழ தேவர்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌) புஷ்பகிரிநாதர்‌ கோயில்‌ கருவறை மேற்கு குமுதம்‌.

வீரராஜேந்திர சோழன்‌ என்ற பட்டப்‌ பெயர்‌ கொண்ட மூன்றாம்‌ குலோத்துங்கசோழ தேவனுடைய 35ஆவது ஆட்சியாண்டில்‌ ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டுத்‌ தாம்புரமான குணசீல நல்லூரில்‌ இருந்த நிலங்களில்‌ சிலவற்றினை திருவிடையாட்டமாக பம்மல்‌ அழகப்பெருமாள்‌ கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையில்‌ பஞ்சநதிவாணன்‌ நல்லானாயன்‌ நீலகங்கரையன்‌ ஒப்பமிட்டுள்ளான்‌. திருநீர்மலை எம்பெருமான்‌ திருவிடையாட்டம்‌, உள்ளூர்‌ தேவதானம்‌, திருவிடையாட்டம்‌, துர்க்கைபட்டி, பிடாரிபட்டி காவல்‌ வரிகள்‌ ஆகியவற்றினை நீக்கி எஞ்சிய நிலங்களின்‌ மீதான வரிகள்‌ திருவிடையாட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

1. ஷஹஹிஸ்ரீ .தி,வூவ[க]ச்‌ ௪௯, வத்திகள்‌ ஸ்ரீவீரராஜேக,_ சோழ தேவற்கு யாண்டு ௩௰ரு வது கற்கடக நா[ய]ற்று வ௫வ*வக்ஷத்து பஞ்சமியும்‌ நாயற்றுக்‌ கிழமையும்‌ பெற்ற உத்திரட்டாதி னாள்‌ ஜயங்கொண்டச்சோழ ம-

2. ண்டலத்து புலியூர்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டுத்‌ தாம்புரமான குணசீல நல்லூர்‌ நாற்பாற்கெல்லைக்குட்பட்ட விளைநிலத்திலும்‌ கொல்லை நிலத்தினும்‌ திருநீர்மலை எம்பெரு-

3. மான்‌ திருவிடையாட்டம்‌ குவியலுடன்‌ . . பிறிந்து கூடி நிலமும்‌ உள்ளூர்‌ தேவதானம்‌ திருவிடையாட்டம்‌ துக்கைப்பட்டி பிடாரிபட்டி நீக்கி அல்லாத கழநி குளவாய்க்‌ கொல்லை

165

4. நத்தம்‌ உட்பட இவ்வாண்டை ஆடிமாதம்‌ முதல்‌ பம்மல்‌ அழகப்பெருமாளுக்கு திருவிடையாட்டமாக இட்டோம்‌ இன்நிலத்துக்கு அரிப்பாடிகாவலில்‌ ஊர்‌-

5. காவற்பேர்கொள்ளும்‌ ஒன்றாக நீக்கி அல்லாத நாம்‌ கொள்ளும்‌ கடமையும்‌ ஆயம்‌ காசு கடமையும்‌ பட்டி குற்றமும்‌ காற்த்திகைப்பச்சைக்‌ காசும்‌

6. வெட்டிக்‌ காசும்‌ வெட்டி அரிமுக்கையும்‌ தரி(சு) நிலத்தில்‌ கடமையும்‌ ஆயமும்‌ காசு வற்க்கமும்‌ உள்ளூர்‌ தேவதானம்‌ திருவிடையாட்டம்‌ துற்கைப்பட்டி பிடா-

7. ரி பட்டியில்‌ ஆயமும்‌ க[£]சு கடமை வற்க்கமும்‌ உட்பட இன்னாயனார்‌ அழகப்பெருமானுக்கு இன்னாள்‌ முதல்‌ வரி நீங்கல்‌ திருவிடையாட்டமாக இட்டு பஞ்சனதி-

8. வாணன்‌ நல்லனாயன்‌ நீலகங்கரையனேன்‌ இவை நீலகங்கரையன்‌ எழுத்து. இத்தன்மத்துக்கு இலங்வநம்‌ பண்ணிநார்‌ உண்டாகில்‌ கெங்கைக்‌ கரையில்‌ குரால்பசுக்‌ கொன்றான்‌ பா-

9. வங்கொள்வார்‌ இது ஸ்ரீவைஷவ ரசைஷ

166

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 746/2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 21 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 பம்மல்‌ இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 2 மூன்றாம்‌ இராசராசன்‌

புஷ்பகிரிநாதர்‌ கோயில்‌ கருவறை தெற்கு குமுதப்பட்டை.

குறிப்புரை : குத்தந்பாக்கத்து மன்றாடிகளில்‌ பட்டன்‌ ஆன நீலகங்கரையக்கோன்‌

என்பவன்‌ பம்மல்‌ எம்பெருமான்‌ அழகப்பெருமாளுக்குச்‌ சந்தி விளக்கு ஒன்று எரிக்க இக்கோயிலில்‌ பூசை செய்யும்‌ நைமீசையத்தில்‌ புலமை பெற்ற பாண்டவ தூத பட்டன்‌ மகன்‌ நீர்வண்ணபெருமாள்‌ என்பவனிடம்‌ பாற்பசு ஒன்றும்‌ நாகு ஒன்றும்‌ (பெண்‌ கன்று) அளித்து விளக்கு எரிக்க வழிவகைச்‌ செய்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1.

ஷஹிஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு உ௰க ஐயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூற்‌ கோட்டமான குலோத்துங்கசோழ வளனாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பம்மலில்‌ எம்பெருமாந்‌ அழகப்பெருமாளுக்குக்‌ குத்தந்பாக்கத்து இருக்கு-

ம்‌ மன்றாடிகளில்‌ பட்டனான நீலகங்கரைய[க்‌](கு) கோன்‌ வைத்த சந்திவிளக்கு ஒன்றுக்கு இக்கோயிலில்‌ திருவடிப்பிடிப்பாரில்‌ நைமிசைப்‌ பாண்டவதூத பட்டன்‌ மகன்‌ நீர்வண்ணப்‌ பெருமாளேன்‌ உபையமாக இவந்‌ பக்கல்‌ இவ்வாண்டை வரிக்‌ நாயற்றுக்‌ கைக்கொ-

உண்ட பாற்பசு ஒந்றும்‌ நாகு ஒந்றும்‌ கைக்கொண்டு இன்னாள்‌ முதல்‌

சந்திராதித்தவரை இச்சந்திவிளக்கு ஒன்றும்‌ எரிக்கக்‌ கடவேனாகச்‌ சம்மதித்து மரிலாலேகை பண்ணிக்‌ குடுத்தேன்‌ பாண்டவதூத பட்டன்‌ மகன்‌ னீர்வண்ணப்பெருமாளேன்‌ . .

167

த.நா.௮. தொல்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 7472/2017

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 3

தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1073 திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 315/1901 தமிழ்‌ முன்‌ பதிப்பு : 541/4/॥ கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எனர்‌ 1

ஸ்ரீராஜேந்திரசோழ தேவர்‌ (முதலாம்‌ குலோத்துங்கன்‌)

: தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

: செம்பூர்க்‌ கோட்டத்து செம்பூர்‌ நாட்டுக்‌ கலிகுளத்துவாயுடையான்‌

கோயில்‌ மண்ணைகொண்டசோழ பல்லவராயன்‌ என்பவனிடமிருந்து புலியூர்க்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டுச்‌ சோழதிவாகரச்‌ சருப்பேதி மங்கலத்து திருச்சுரமுடையார்‌ கோயில்‌ சிவபிராமணர்கள்‌ 150 கலம்‌ நெல்‌ பெற்றுக்கொண்டு, ஆண்டுக்கு இதன்‌ வட்டியாக வரும்‌ 37 கலம்‌ நெல்லிலிருந்து திருச்‌ சுரமுடையார்‌ இறைவனுக்கு அமாவாசை, பெளர்ணமி, அட்டமி, திருவாதிரை ஆகிய நாட்களில்‌ சிறுகாலைச்‌ சந்தியின்போது பஞ்சகவ்யம்‌, பால்‌, தயிர்‌, கோமூத்திரம்‌, கோமயம்‌ ஆகியவற்றைக்‌ கொண்டு அபிஷேகம்‌, திருமஞ்சனம்‌, திருவாராதனை, திருவமுது செய்வதாகவும்‌, தினமும்‌ மந்திர புஷ்பம்‌ சாத்துவதாகவும்‌ உறுதியளித்துள்ளனர்‌.

1. ஷஹி ஸ்ரீ பூமியு ஷிருவு காமே புணர விக்கிரமத்தாற்‌ சக்கர நடாத்தி வீரசிங்காசநத்து புவநமுழுதுடையாளோடும்‌ வீற்றிருகருளிந கோராஜகேசரி வநராந உடையார்‌ ஸ்ரீராப ஜவ, ]சோழதேவர்க்கு யாண்டு மூந்றாவது புலியூர்‌ கோட்டத்துச்‌ சுரத்தூர்‌ நாட்டுச்‌ சோழதிவாகரச்‌ சருப்பேதி மங்கலத்து திருச்சுரமுடையார்‌ சிவ. ரஹணக்‌ மொகமந்‌ உஒயகிவாகர பட்டநாந கலியாணசுஞர பட்டநும்‌ ஊர[ன்‌] லட்டநாந தெட்ச்சிணாமூத்தி பட்டதும்‌ உள்ளிட்ட சிவவ. ரஹணரோம்‌ செம்பூர்க்‌ கோட்டத்து செம்பூர்‌ நாட்டு கலிகுளத்துவாயுடையாந்‌ கோயில்‌ மண்ணைகொண்ட சோழ பர[ல்‌ *]லவரயந்‌

168

பக்கல்‌ நாங்கள்‌ கொண்ட நெல்‌ நூற்றைம்பதிந்‌ கலத்திநால்‌ ஆண்டு வரை கலத்துக்கு முக்குறுணியாக பொலிசையால்‌ வஷ நெல்லு முப்பத்தேழுகலநே தூணிப்பதக்குங்‌ கொண்டு அமாவாஹியும்‌ பூஷுமாஹி-

யும்‌ . . ட்டமியும்‌ அட்டமியும்‌ திருவாதிரையுமாக மாஸம்‌ *] அஞ்சு நாளும்‌ சிறுகாலைச்சஷியிலே திரு[ச்சுர[முடையார்க்கு பஞ்சமவடம்‌ பால்‌ முழக்கும்‌ தயிர்‌ உரியும்‌ நெய்‌ உழக்கு[ம்‌] கோமூத்திரமுங்‌ கோமயமும்‌ கொண்டு அபிஷேகம்‌ பண்ணுவித்து திருமஞ்சணஞ்‌ செய்வித்து திருவாராதநையும்‌ பண்ணுவிக்க கடவோமாகவும்‌ திருவமுது நாநாழி அரிசியுங்‌ கறியமுது இரண்டும்‌ நெய்யமுது ஐயிரமுதும்‌ அடைக்காயமுதுங்‌ கொண்டு அமுது செய்விக்க க[ட]வாமாகவும்‌ நித்தப்படியும்‌ மஹிரபுஷ்பம்‌ சார்த்துவிக்க கடவோமாகவும்‌ இப்படி சஷிராதி[த்‌]தவரை முட்டாமல்‌ செலுத்தக்கடவோமாநோம்‌ இக்கோயிலில்‌ சிவ. ரஹணரோம்‌ இவர்கள்‌ பணிக்க எழுதிநேந்‌ இ[வ்‌*][வூ]ர்‌ ம[ஜுஷந்‌ அநகந்‌ தூதுவநேந்‌ இவை எ[ந்நெழுத்து ॥-

169

த.நா.௮. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 748/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 98 வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1108 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 315/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 54374/॥ எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டு வானவனமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்துத்‌ திருச்சுரமுடைய மகாதேவர்‌ கோயிலில்‌ இரண்டுச்‌ சந்தி விளக்கு எரிக்க இவ்வூரைச்‌ சேர்ந்த வெள்ளாளன்‌ பட்டன்‌ சோறுடையான்‌ என்பவன்‌ இக்கோயிலைச்‌ சார்ந்த சிவபிராமணர்கள்‌ வசம்‌ 24 ஆடுகள்‌ தானமளித்துள்ளான்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ!1*] கோவிறாஜகேசரிவநராந வதிகள்‌ ஸ்ரீகுலோத்துங்க சோழ மசேவற்கு யா-

2. ண்டு முப்பத்தெட்டாவது ஜஐயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ குலோத்துங்க சோழவளநாட்டு

3. சுரத்தூ[ர்‌ *] நாட்டு வாநவந்மாதேவிச்‌ சருப்பேதிமங்கலத்து திருச்சுரமுடைய 2ஹாஜேவர்க்கு இவ்வூரிருக்கும்‌ வெள்ளாளந்‌(ந) பட்டந்‌ சோறறு]-

4. டையாந்‌ வைய்த்த ஸஷி விளக்கு இரண்டு இரண்டுக்கு[ம்‌] இஷ ஷாகத்து ஸமிவஷாஹணர்‌ நூற்றெண்ம பட்டநும்‌ சீராள ப-

5. ட்டநும்‌ உள்ளிட்டார்‌ வசம்‌ விட்ட சாவாமூவாப்‌ பேராடு இருபத்துநாலு இவை வஷ_ாதிகவத்‌ இம2ஏ ஈக்ஷிப்பார்‌ ஸ்ரீபாதம்‌

6. என்‌ தலைமேல[து] இ[வ்‌]வூர்‌ இருக்கும்‌ வெள்ளாளன்‌ கங்கன்‌ . . . .

170

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 749,201

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சிஆண்டு : 39 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1109 திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 312/1901 தமிழ்‌ முன்‌ பதிப்பு : 538/VII தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 3

முதலாம்‌ குலோத்துங்கன்‌

: தர்மபுரீஸ்வரர்கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

: சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழன்‌ திருச்சுரம்‌ உடைய நாயனார்‌

கோயில்‌ பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாசாரியர்‌, தேவகன்மி, ஸ்ரீமாகேசுவரக்‌ கண்காணி, கோயிற்‌ கணக்கன்‌ ஆகியோருக்கு அனுப்பிய அரசாணையாகும்‌. ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்‌ கோட்டம்‌ எனும்‌ குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டுப்பிரிவில்‌ உள்ள பல்லாபுரம்‌ என்கிற வானவன்மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ திருச்‌ சுரமுடைய நாயநார்‌ கோயிலில்‌ திருவைகாசித்‌ திருநாளன்று திருவெழுச்சிப்படிக்காக முந்நலூர்‌ ஊரிலுள்ள நீர்நிலம்‌ முப்பது வேலியும்‌, கொல்லை நிலம்‌ பதினொரு வேலியும்‌ சேர்த்து திருநீற்றுச்சோழ நல்லூர்‌ என்னும்‌ பெயரிட்டு புதிய ஊரினை உருவாக்கி இறையிலித்‌ தேவதானமாக வழங்கியுள்ளான்‌. இந்நிலத்தின்‌ மூலம்‌ பெறப்படும்‌ கடமை, குடிமை ஆகியவற்றினைக்‌ கோயிலுக்கு அளித்திட வழிவகைச்‌ .அய்துள்ளான்‌.

1. சுங்கந்தவிர்த்த குலோத்துங்கசோழதேவர்‌ திருமுகப்படி [ஸஷிஞஸ்ரீ] திரிபுவநச்‌ சக்கரவத்தி கோநேரிம்மைகொண்டாந்‌ செயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்‌ கோட்டமாந குலோத்துங்கசோழ வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பல்லாபுரமாக வாநவந்மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து

2. உடையார்‌ திருச்சுரமுடைய நாயநார்‌ கோயில்‌ பதிபாத மூலப்பட்டுடைப்‌ பஞ்சாசாரியரும்‌ தேவகந்மியும்‌ ஸ்ரீமாகேசுரக்‌ கண்காணி செய்வாநும்‌ கோயிற்கணக்கநுங்‌ கண்டு தங்கள்‌ நாயநார்கோயில்‌ பூசைத்‌ தட்டு உண்டெந்றும்‌ திருநாள்‌ காணவேணுமெற்றும்‌ வாணராயர்‌ சொல்லுகை-

171

3. யில்‌ இக்கோட்டத்துக்‌ கால்வாய்‌ நாட்டு முந்நலூர்‌ பிரிவுட்ப்பட ஒரு பூவிளைநிலம்‌ முப்பது வேலியும்‌ கொல்லைநிலம்‌ பதிநொருவேலியும்‌ ஆக நிலம்‌ நாற்பத்தொருவேலியுந்‌ தேவதாநமாக இட்டு ஊர்‌ பழம்பேர்‌ தவிர்ந்து திருநீற்றுச்சோழநல்லூர்‌ எந்று நாமகரணம்‌ பண்ணி ஊரடங்கலும்‌

4. இறையிலி தேவதாநமாக இட்டு வைய்காசித்‌ திருநாள்‌ திருவெழுச்சிப்படிக்கு இவ்வூர்‌ ஆயமும்‌ அந்தராயத்தால்‌ காசு நெல்‌ உட்பட தேவற்கே குடுத்தோமெந்று வரியிலார்‌[க்‌*]கும்‌ வரிப்பொத்தகஞ்‌ செய்வார்களுக்குஞ்‌ சொன்நோம்‌ தாங்களும்‌ இந்நாள்முதல்‌ கைய்கொண்டு கடமையுந்‌ தண்டி-

5. க்‌ குடிமையுஞ்‌ செய்வித்துக்‌ கொள்வதே திருமந்திரழலை குலோத்துங்க சோழ மூவேந்தவேளாந்‌ எழுத்து யாண்டு ௩௰௯ னாள்‌ ஈ௭எ இவை தொண்டைமா னெழுத்து இவை வாணராயந்‌ எழுத்து இப்படிக்கு முந்நலூராந திருநீற்றுச்சோழ நல்லூர்க்குத்‌ திருமுகம்‌ இட்டது இது பந்மாகேசுர க்ஷ

172

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: :250,2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 5

வட்டம்‌ தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. (1070-1120) ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 316/1901

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 542/VI

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 4

அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ராஜேந்திரசோழ வளநாட்டுப்‌ புழல்‌ நாட்டுச்‌ செம்பியன்‌ திருமங்கலம்‌ ஊர்த்தலைவன்‌ சீயாரூர்‌ வெள்ளி என்கிற தென்னவன்‌ பல்லவராயன்‌ என்பவனுக்கு இக்கோயில்‌ இறைவனுக்கு திருஅர்த்தசாம பூசை வழிபாட்டிற்காக நிலம்‌ ஒன்றினை மகாசபையினர்‌ விற்று நிலவிலை ஆவணம்‌ செய்துக்‌ கொடுத்துள்ளனர்‌. இந்நிலத்தின்‌ மீது வசூலிக்கப்படும்‌ வரிகளையும்‌ நீக்கி வழங்கியுள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹஹிஸ்ரீ[॥*] புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள்‌ நிலவ மலர்மகள்‌ புண[ர] உரிமையிற்‌ சிறக மணிமுடி சூடி மீனவர்‌ நிலைகெட வில்லவர்‌ குலைதர ஏனை மன்னவர்‌ இரியலுற்‌ றுழிதரத்‌ திக்கனைத்து ஒன்‌ சக்கர நடாத்தி விஜைகலிஷேகம்‌ பண்ணி வீ மஹஸிஹானனத்து உலகுடையாளோடும்‌ வீற்றி . . . .

2. நிலவிலை ஆவணக்‌ கைஎழுத்து இத்சேவற்குத்‌ திருவத-சாமத்துத்‌ வேண்டும்‌ படிக்கு மாஜேஷ,சோழ வளநாட்டுப்‌ புழல்நாட்டுச்‌ செம்பியன்‌ திருமங்கலத்துத்‌ திருமங்கலங்கிழான்‌ சீய]ாருர்‌ வெள்ளியாந தென்நவன்‌ பல்லவராயன்‌ எங்கள்‌ பக்கற்‌ கொண்டு விடுகிற நிலத்துக்குக்‌ கீழ்பாற்கெல்லை ஸ்ரீதேவிவதிக்கு மேற்கு . . . .

3. ஹூமிக்கு வடக்கு மே[ல்‌]பாற்கெல்லை மாதேவிச்செறுவுக்கும்‌ ஆரியம்‌[பா]க்கத்து நாகமையபட்டன்‌ ஷூமிக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை

173

>

இவ்வாரியம்பாக்கத்து நாகமையபட்டர்‌ பூமி[க்‌*]கும்‌ இவ்வூர்‌ ஸ்ரீகயிலாஸமுடை[யார்‌] சேவதானத்துக்கு தெற்கும்‌ நான்கெல்லை அகத்துப்பட்ட நிலம்‌ ஹூஹாரம்‌ பண்ணிச்‌ சதுறங்கட்டின பதிநாறு சாண்கோலால்‌ அ.....

. த்தோம்‌ இரந்த] நிலத்துக்கு வேலிக்காசுள்ளிட்ட அஷராய மென்றும்‌

நீர்விலை என்றும்‌ நில[மு]ழுத குடிமக்களை ஆள்வரி என்றும்‌ எச்சோற்றுக்‌ கூற்றுநெல்‌ வெட்டி அமஞ்சி என்று காட்டவும்‌ கொள்ளவும்‌ பெறாதோமாகவும்‌ இப்படி அல்லது செய்யில்‌ மங்கை இடைக்‌ குமரிஇடை நடுவுபட்டார்‌ செய்த பாபம்‌ அநுபவிக்கக்கடவோமாகவும்‌ இப்படிக்கு ஸம்மதித்து விற்றுக்கு[டு*]த்தோம்‌ 2ஊஹராஸலெயோம்‌

174

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 7512017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 6

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1124 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 322/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 548/VI எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ டத.

அரசன்‌ : விக்கிரம சோழன்‌

கம்‌ : தர்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலிப்புறம்‌ ஊரைச்‌ சார்ந்த கேசவபட்டன்‌ என்பானின்‌ மனைவி துர்கை சானி என்னும்‌ பிராமணப்‌ பெண்ணிடமிருந்து, ஜயங்கொண்டசோழ மண்டலத்து குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர்‌ நாட்டுப்‌ பிரிவைச்‌ சார்ந்த வானவன்மகாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர்‌ கோயில்‌ சிவபிராமணர்களான நூற்றெண்ம பட்டன்‌, சீராள பட்டன்‌ உள்ளிட்டோர்‌ 12 ஆடுகள்‌ பெற்றுக்கொண்டு, இக்கோயிலில்‌ ஒரு நந்தா விளக்கெரிக்கச்‌ சம்மதித்துள்ளனர்‌.

கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ கோவிராஜகேஸரி உடிரான வசூ வத்திகள்‌ ஸ்ரீவிக,2சோழ மேவற்‌-

2. க்கு யாண்டு ஆறாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து குலோத்துங்கசோழ

3. வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டு வானவந்ஹாஜேவிச்‌ சதுப்பேதிமங்கலத்து திருச்சுர-

4. முடைய ஹாஜேவர்க்குப்‌ புலிபுறத்து கேசவபட்டந்‌ ஸாணி துற்கைச்‌ சாநி வைத்த

5. ஸதி விளக்கு ஒந்றுக்கும்‌ இஷாநத்து மரிவப்பிராணேம்‌ நூற்றெண்‌£ ஹ-

6. ட்டனும்‌ சீராளலட்டனுள்ளிட்டார்‌ பக்கல்‌ விட்ட சாவாமூவாப்பேராடு பந்நிர

7. ண்டும்‌ ச. [ர *]தித்தவற்‌ செலுத்தக்கடவோம்‌

175

த.நா.௮. தால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 752/2017

மாவட்டம்‌ காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 8

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1127

ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 314/1901

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 540//॥॥

எழுத்து : கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 6

அரசன்‌ : விக்கிரம சோழன்‌

கடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை ஜயங்கொண்டசோழ மண்டலத்து குலோத்துங்கசோழ வளநாட்டு பேறூர்‌

நாட்டுப்‌ பிரிவு மணற்பாக்கம்‌ ஊரார்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பல்லாபுரம்‌ என்கிற வானவன்மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர்‌ வழிபாட்டிற்கு, திருமந்திரபோநகம்‌ வழங்குவதற்காக, பேறூர்‌ நாட்டு நென்மேலி ஊரைச்‌ சார்ந்த பள்ளி சாத்தை செல்வன்‌ எனும்‌ தொண்டை நாட்டய்யன்‌ என்பவனிடமிருந்து பணம்‌ பெற்றுக்கொண்டு 970 குழி நிலத்தினை விற்பனைச்‌ செய்துக்‌ கொடுத்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க சயமாது விரும்பத்‌

தன்னிருப[து]மலர்‌

ம[ன்‌]னிய உரிமை[யி]ல்‌ மணிமுடி சூடிச்‌

[0*]சங்கோல்‌ நி[ன்‌]று [திசைதோறும்‌ வளர்ப்ப(க்க) வெங்கலி நீக்‌[கி] மெய்யற[ஷ]ழைப்ப கலிங்கமேரியக்‌ கடம-

2. லை நடாத்தி வலங்கொளாழி வ[ன*]ரயாழி நடாத்தி இருசுடரளவும்‌

ஒருகுடை நிழற்ற வீற்றிருஞருளிய

கோப்பரகேசரிபற்மராந

வீரஹிஃஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும்‌ கி,லூவகவகசூவர்த்திகள்‌

ஸ்ரீவிகூமசோழ ஜேவற்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்டசோழ மண்‌-

3. டலத்துக்‌ குலோத்துங்கசோழ வளநாட்டுப்‌ பேறூர்‌ நாட்டு மணற்பாக்கத்து ஊரோம்‌ இன்நாட்டுச்‌ சுரத்தூ[ர்‌ *] நாட்டுப்‌ பல்லாபுரமான வானவன்மாதேவிச்‌

சதுவெ-சிமங்கலத்து

திருச்சுரமுடையஊஹா ஜேவர்‌

ஆதிசண்டேஸா[ர *]ற்கு நிலவிலை ஆவணக்‌ கையெழு-

176

கோயிலில்‌

4. த்து இத்தேவற்கு திருமகிரபோநகத்துக்கு வேண்டும்படிக்கு இன்நாட்டுப்‌ பேறூர்‌ நாட்டு மேட்டின்மேநென்மலிப்‌ பள்ளி சாத்தை செல்வநாந தொண்டை நாட்டய்யன்‌ எங்கள்பக்கல்‌ பொஷிட்டுக்‌ கொண்டு இறையிழிச்சி விடுகிற நிலமாவது எங்க[ளூ]ர்‌ கீழ்கழநி மழபட்டியுங்‌

5. குண்டிலுங்‌ குழி நாநூறும்‌ பளுக்கு வாணியன்‌ கழுவல்‌ குழி முன்னூறும்‌ கீழைக்கடுங்கலிப்பட்டி குழி இருனூற்று எழுபதும்‌ ஆக குழி தொளாயிரத்‌ தெழுபதுக்கும்‌ கீ[ழ்‌ * ]பாற்கெல்லை மேட்டின்மேநென்மலியில்‌ தென்கழநிக்கு நீர்பாய்க வாய்க்காலுக்கு மேற்கு-

6.ம்‌ தென்பாற்கெல்லை உவச்சப்பட்டி வடவரம்புக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை ஆனைமேட்டுக்கு நீர்பா[ய்‌*]ஷ வாய்க்காலுக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை மேலைக்கடுங்கலிப்பட்டித்‌ தென்வரம்புக்கு தெற்கும்‌ கீழைக்கடுங்கலிப்பட்டிக்கு மேல்பாற்கெல்லை மே-

7. லைக்கடுங்கலிப்பட்டித்‌ தென்வரம்புக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை நேமிரமுமமுடைய 8ஹா மேவர்‌ ஜேவலாநம்‌ வி[ள]க்குப்பட்டியின்‌ தென்வரம்புக்குத்‌ தெற்கும்‌ இன்நான்கெல்லை அகத்துழ்ப்பட்ட நில[ம்‌] பதின [ா]று சாண்கோலால்‌ குழி தொளாயிரத்தெழுபதும்‌ திருச்சுரவிளாகமெ-

8. ன்னு நாமத்தால்‌ உண்ணிலமொழிவின்றியேய்‌ இன்நிலத்துக்கு உரிய நீரும்‌ நீரோடுகா[லு*]ம்‌ மேநோக்கின மரமும்‌ கீழ்ணோக்கிந கிணறுங்‌ கிணற்றில்‌ நீரும்‌ நீரோடுகாலும்‌ உண்ணிலமொழிவின்றி இன்நான்கெல்லையகத்து உட்ப்பட்ட நிலத்துக்கு வேலிக்காசு உட்பட அஷ-

9. ராயம்‌ நீர்‌*]விலை யென்[று*]ம்‌ இன்நிலம்‌ உழுகுடிமக்களை ஆள்வரி வெட்டியமஞ்சி எச்சோறு கூற்றுநெல்லென்று காட்டவுங்‌ கொள்ளவும்‌ பெறாதோமாகவும்‌ இப்படியல்லது செயில்‌ மஃமெமெயிடைக்குமரி *

* கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை

148

த.நா.௮. தால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 753/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 1 14

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1132 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 315/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 544741 எழுத்து: கிரந்தங்கலந்ததமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ 7

அரசன்‌ : விக்கிரமசோழன்‌

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ குலோத்துங்கசோழ வளநாட்டு புலியூர்க்‌ கோட்டத்து பேறூர்‌ நாட்டுப்‌ பிரிவைச்‌ சார்ந்த கசவம்பாக்கத்து ஊர்‌ நிர்வாகத்தினர்‌, சுரத்தூர்‌ நாட்டுப்‌ பல்லாபுரம்‌ என்கிற வானவன்மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர்‌ கோயில்‌ பள்ளியறை நம்பிராட்டியார்‌ இறைவிக்கு திருப்படிமாற்று வழிபாட்டிற்காக, திருச்சுரம்‌ ஊரைச்‌ சார்ந்த கண்ணப்பன்‌ பொன்‌ தம்பி முகுந்தன்‌ எனும்‌ விக்கிரமசோழ மலையரையன்‌ என்பவன்‌ 1000 குழி நிலத்தினை விலைக்கு வாங்கி, கோயிலுக்கு விற்றுக்கொடுத்த நிலவிலையாவணம்‌ ஆகும்‌.

கல்வெட்டு :

1. ஹஷிஸீ[।।*] பூமாது புணரப்‌ புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்‌[ப]த்‌ தன்நிருபதுமலர்‌ மன்னவர்‌ சூட மன்னிய வுரிமையாலணிமுடி சூடிச்செங்கோல்‌ சென்று திசைதோறும்‌ வளர்ப்ப வெங்கலி நீக்கி மெ[ய்‌]யறந்‌ தழைப்பக்‌ கலிங்‌[க*]மிரியக்‌ கட-

2. மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி திரி இருசுடாளவும்‌ ஒருகுடை நிழற்ற வீரஸிஹாஹநத்து தி,ஹூவநமுழுதுடையாளோடும்‌ வீற்றிரு[த]ருளிய மரக, வ[த்தி]கள்‌ ஸ்ரீவிகூமசோழசேவற்க்கு யாண்டு பதிநாலாவது ஜயஃகொ[ண்டசோழ]

3. மண்டலத்‌[துக்‌] குலோத்துங்கசோழ [வளநாட்டு புலி(யூ]ர்க்‌ கோட்டத்துப்‌ பேறூர்‌ னாட்‌[டு]க்‌ கசவம்பாக்கத்து ஊரோம்‌ நிலவிலை யாவணக்‌

178

கைய்யெழுத்து இன்னாட்டுச்‌ சுரத்தூர்‌ னாட்டுப்‌ பல்லாபுர(த)மாந வாநவன்‌ ஊஹாஜேவிச்‌ சதுவே-சிமங்கலத்துத்‌ திருச்சுர-

4. முடைய ஊஹாதேவர்‌ கோயிலில்‌ ஆதிவண்டேஸாரற்கு விற்றுக்குடுத்த [நி]லமாவது இத்தேவர்‌ கோயிலிற்‌ பள்ளியறை [நம்‌]பிராட்டியாற்குத்‌ திருப்படிமாற்றுக்கு இன்னாட்டுத்‌ திருச்‌[சுர]த்துக்‌ கண்ண[ப்பன்‌] [பொன்‌ [த]ம்பி முகுஞ[நாந] விக்கிரமசோழ மலையரையன்‌ கொண்டு விட்ட நிலம்‌

5. கருவம்பாக்கத்து மேல்கழநியில்‌ மூன்று பட்டியுங்‌ குண்டிலும்‌ சோமாசிப்‌ பட்டி[யி]லும்‌ கீழ்பாற்கெல்லை வில்லிபாக்கிழாநும்‌ கூள[ங்‌]கழுவலுக்கு மேற்கு தென்பாற்கெல்லை கண்டராதித்தன்‌ வாய்க்காலுக்கு [வ]டக்கும்‌ மேல்பாற்கெல்லை [இ]வ்வாய்க்காலுக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை சோமாசி-

6. ப்பட்டியில்‌ அளவ விட்ட வரம்புக்குத்‌ தெற்கும்‌ இன்னாற்பாற்கெல்லைக்கு நடுவு குழி [॥*]

179

த.நா.அ. வதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: '254,2201:7

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 4

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1167 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 315/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 545/VII எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 8

அரசன்‌ : இரண்டாம்‌ இராசாதிராசன்‌

கம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்‌ குலோத்துங்கசோழ வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டு பல்லாபுரம்‌ எனும்‌ வானவன்மாதேவிச்‌ சதுர்வேதி மங்கலத்து ஆளுடையார்‌ திருச்சுரமுடையார்‌ கோயிலில்‌ இவ்வூர்‌ காடி பள்ளி நூற்றெண்ம முதவரையன்‌ பேரனும்‌ அருளாளன்‌ என்கிற கலிங்கத்‌ தரையனின்‌ மகனுமான நாயகன்‌ என்பவன்‌ சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்காக மூன்று பசுக்கள்‌ கொடையளித்துள்ளான்‌. இம்மூன்று பசுக்களையும்‌ பெற்றுக்கொண்டு திங்கள்தோறும்‌ நாழி நெய்‌ கோயிலில்‌ அளப்பதாக இவ்வூர்‌ மன்றாடி முல்லைநாயகக்‌ கோன்‌ என்பவன்‌ சம்மதம்‌ தெரிவித்துள்ளான்‌.

கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக தி,புவனச்சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீஇராஜாயிராஜ சேவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்ட-

2. சோழ மண்டலத்துக்‌ குலோத்துங்கசோழ வளநாட்டு[ச்‌] சுரத்தூர்‌ ந[ா*]ட்டு பல்லாபுரமான வானவன்‌ மஹாதேவிச்‌ சதுவே-திமங்கலத்து

3. ஆளுடையார்‌ திரு[ச்‌*]சுரமுடையாரர்‌]க்கு இர[வ்‌*][வூ]ர்‌ காடிபள்ளி நூற்றெண்மமூதரையன்‌ மகன்‌ அரு[ளராளன்‌(ன) கலிங்கத்தரையன்‌ மகன்‌ நாயகன்‌

4. வைத்த ஸரி விளக்கு ஒன்‌[றினு]க்கு இவ்‌*]வூர்‌ மன்றாடி [வி]ச்சாதரக்‌ கே[ா]ன்‌ மகன்‌ முல்லைநாயகக்‌ கோ-

180

5. ன்‌ பக்கல்‌ விட்ட பசு மூன்றுங்‌ கொண்டு தி[ங்‌][க*]ள்‌ [நா]ழி [நெய்‌ கோயிலில்லளக்க[க்‌ *] கடவதாக கைக்கொ-

6. ண்டேன்‌ ஸ்ரீமா*]ஹேறார ரகக (॥!]

181

த.நாஅ. ஒதால்லியல்‌ துறை ஒதாடர்‌ எண்‌: 755/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 4

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1167 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 321/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 547 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 9

அரசன்‌ : இரண்டாம்‌ இராசாதிராசன்‌

இம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டம்‌ எனும்‌ குலோத்துங்கசோழ வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பிரிவான பல்லாபுரம்‌ என்கிற வானவனமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து திருச்சுரமுடையார்‌ கோயிலில்‌ ஒரு நந்தா விளக்கு எரிக்கத்‌ தேவையான நெய்யிற்காக 31 பசுக்களும்‌ ஒரு காளையும்‌ திருச்சுரம்‌ ஊரைச்‌ சார்ந்த கண்ணப்பன்‌ மலை அரையன்‌ மகன்‌ அருளாளப்‌ பெருமாள்‌ என்றழைக்கப்படும்‌ இராஜராஜ மலை அரையன்‌ அளித்துள்ளான்‌. இவ்வூர்‌ மன்றாடி ஆனைக்கோன்‌ என்பானின்‌ மகன்கள்‌ தினமும்‌ அருமொழிதேவன்‌ மரக்கால்‌ அளவுக்கு இணையாக உழக்கு நெய்‌ அளப்பதாக உறுதியளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு :

1. ஷஹிஸ்ரீ[॥*] திருவாய்க்கேழ்வி முந்நாக கி,வூவரச்சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீராஜாயிறாஜ சேவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்‌ கோட்டமான

2. குலோத்துங்கசோழ வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டு பல்லாபுரமான வானவன்‌ மாதேவிச்‌ சதுவே*கிமங்கலத்து ஆளுடையார்‌ திருச்‌[சு]ரமுடையார்க்குத்‌

திருச்சுரக்கண்ணப்பன்‌ மலைஅரையன்‌ மகந்‌ அரு-

3. ளா(ள]ப்‌ பெருமா[ளரான இராஜராஜ [ம]லைஅரையன்‌(ன) வைத்த திருநந்தா[வி]ளக்கு ஒன்றுக்கு விட்ட பசு முப்பத்தொன்று இஷபதேவரும்‌ உட்பட முப்பத்திரண்டு [இ]வ்வூர்‌ மன்றாடி ஆலைக்கோன்‌ மக்கள்‌ அரு-

182

4. ளாளனுஞ்‌ செல்வனுங்‌ குலமாணிக்கமுங்‌ காமனுஞ்‌ சத்தியு மிவ்வனைவோங்்‌ கைக்கொண்டு சஷ;ாதித்த[வரைர அருமொழிதேவன்‌ மரக்காலுக்கு ஒக்கும்‌ உழக்கால்‌ நித்தம்‌ உழக்காக வந்த நெய்‌ ஆண்‌-

5. டுவரை தொண்ணூற்று நாழியுங்‌ கோயி(லி]ல்‌ அளந்து ஆண்டாண்டு ரேதராறுந்‌ தரவு கொண்டு காட்டக்கடவதாகவு மிப்படிக்கு இசைந்து இத்திருநந்தாவிளக்குப்‌ பசுச்‌ சாவா-

6. மூவாக்‌ கா[ணி]யாகக்‌ கைக்கொண்டோம்‌ இவ்வனைவோம்‌ ஸ்ரீராஹேறா£ மடி

183

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 756/2017

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 31 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1201 திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 311/1901 தமிழ்‌ முன்‌ பதிப்பு : 539/VII தமிழ்‌

சோழர்‌ ஊ.க.எண்‌ : 10 மூன்றாம்‌ குலோத்துங்கன்‌

: தர்மபுரீஸ்வரர்கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : திருச்சுரக்கண்ணப்பன்‌ ஆதிநாதன்‌ மனவாலைய முகந்தன்‌ என்கிற

சித்திரமேழி முனையதரையன்‌ என்பவன்‌ செயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புலியூர்க்கோட்டத்துச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பிரிவு பல்லாபுரம்‌ எனும்‌ வானவனமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்து ஆளுடையார்‌ திரிச்சுரமுடையார்‌ கோயில்‌ இறைவனுக்குத்‌ திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு 10 எருமைகள்‌ வழங்கியுள்ளான்‌.

கல்வெட்ரு :

1.

ஹஹிய்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திக[ள்‌] மதுரை[யு]ம்‌ [ஈ]ழமுங்‌ கருவூரும்‌ பாண்டியன்‌ முடித்தலையுங்‌ கொண்‌-

டரு[ளி]ன ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௩௰க-றாவது செயங்கொண்ட சோழமண்டலத்துப்‌

. புலியூற்‌ கோட்டத்துச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பல்லாபுரமான வானவனமாதேவிச்‌

சதுர்வேதிமங்கத்து

. [ஆளு]டையார்‌ திரிச்சுரமுடையாற்குத்‌ திருச்சுரக்கண்ணப்ப[ன்‌ ஆ]திநாதன்‌

மனவாலைய முகந்தானான [சி]த்‌[தி]ரமே[ழி] [மு]-

[னை]யரையநேன்‌ வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட எருமை இ(வ்‌*]வெருமை பத்தும்‌ இக்கோட்‌ [ட ]-

184

6. த்து மலையம்பாக்கத்து மன்றாடி பெருமாள்‌ மகன்‌ சேரி[க]கோனேன்‌ இவ்வெருமை பத்தும்‌ காணிமாடாகக்‌ கைக்கெணி]-

7. [டு] அருமொழிதேவன்‌ உழக்கால்‌ நாள்‌ ஒன்றுக்கு உழக்கால்‌ வந்த நெய்‌ சந்திராதித்தவரை கோயிற்‌ திருமுற்றப்பண்டாரத்தில்‌ [அள *]-

8. ந்து தரவு கொள்ளக்கடவேன்‌ பெருமாள்சேரிக்‌ கோனேன்‌ மாகேர[சு]ரர்‌ இர(க்‌)ககஷ

185

த.நா. ஒதால்லியல்‌ துறை தர்‌ எண்‌: '252/201:2

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 37

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1215 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 311/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 537/VII எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 11 அரசன்‌ : திரிபுவன வீரதேவர்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌)

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : பூந்தமலி என்கிற உய்யக்கொண்டாந்‌ சோழபுரம்‌ வாணிகர்‌ நகரச்‌ சபையினர்‌ திருச்சுரம்‌ கோயில்‌ திருச்சுரமுடைய நாயனார்க்குத்‌ திருவடி நிலை (பீடம்‌), திருவாலத்தி தட்டு, கொம்பு (ஊதுகுழல்‌) ஆகியவை தானமளித்துள்ளனர்‌. கல்வெட்ரு : 1. [ஹ*]ஷி[ஸ்ரீ] திரிபுவன வீரதேவற்கு யாண்டு ௩௰லஎ வது ஆளுடையார்‌ திருச்சுரமுடைய நாய- 2. னாற்குத்‌ திருவடிநிலை இரண்டிநாலிடை பதிநைம்‌* பலமும்‌ திருவாலத்தித்தட்டி இரண்டினா லிடை எழுபதிந்‌ 3. பலமும்‌ கொம்பு இரண்டிநா லிடை ஐம்பத்தைம்‌ பலமும்‌ செய்வித்து இட்டோம்‌ பூந்தமலியான உய்யக்கொண்‌-

4. டாந்சோழபுரத்து வாணிகர்‌ நகரத்தோம்‌ இவை நாடறியக்‌ கொள்ளை போச்சரகில்‌ இடக்கடவோம்‌

5. வாணிகரோம்‌ இது பந்மாகேசுரர்‌ ஈகக்ஷ

* பதினைந்து பலம்‌ - என்று வாசிக்க.

186

த.நா.௫. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7582017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 16

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1232 ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 320/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 546/VII எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ டத்‌ |". அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசன்‌

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : மணிமங்கலம்‌ என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்த குடிப்பள்ளி சாத்தன்‌ மகாதேவன்‌ என்பவன்‌ ஆளுடையார்‌ திருச்சுரமுடையார்‌ இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கெரிக்க ஆறு பசுக்கள்‌ தானமளித்துள்ளான்‌. ஒரு பசுவுக்கு நாலு ஆடுகள்‌ வீதம்‌ ஆறு பசுக்களுக்கு 24 ஆடுகளைக்‌ கொண்டு தினமும்‌ நெய்யளக்க மாங்காட்டு நாட்டு மலையம்பாக்கம்‌ ஊரினனான இடையன்‌ கருணாகரக்‌ கோன்‌ உறுதியளித்துள்ளான்‌.

கல்வெட்ரு : 1. ஹஹஷிய்ீ [தி,)ல£வ௩ச்‌ சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பதினாறாவது ஜயங்கொண்டசோழ மண்‌(சோமண்‌)டலத்துக்‌ குலோத்துங்க

சோழ வளநாட்டுச்‌ சுரத்தூர்‌ நாட்டுப்‌ பல்லாபுரமான வானவன்‌ மாதேவிச்‌ சதுர்வேதிமங்கல-

2. த்து ஆளுடையார்‌ திருச்சுரமுடையார்க்கு இந்நாட்டு மணிமங்கலத்துக்‌ குடிப்பள்ளி சாத்தந்‌ மகாதேவந்‌ வைத்த ஸந்திவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு மூன்றும்‌ . . .

3. [ம்‌] ஆகப்‌ பசு ஆறுக்கும்‌ பசு ஒன்று ஆடு [நா]லாக ஆடு இருபத்துநாலும்‌ இந்நாட்டு மாங்காட்டு நாட்டு மலையம்பா[க்க *]த்திலிருக்கு[ம்‌] மன்றாடி ம[லை] கருணாகரக்‌ கோநேந்‌ சாவாழுவாப்‌

187

த.நா.அ. எதால்லியல்‌ துறை தார்‌ எண்‌: 759/2017

கல்வெட்ரு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 38 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.1306 திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 323/1901 தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5497/॥ கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

பாண்டியர்‌ ஊ.க.எண்‌ : 13 மாறவர்வர்மன்‌ குலசேகரதேவர்‌

: தர்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

: இளவரசர்‌ நீலகங்கரையர்‌ படைத்தளபதிகளில்‌ ஒருவரான வாணாண்டை

என்கிற தொண்டைமானார்‌ என்பவர்‌ பல்லாபுரம்‌ என்கிற வானவன்மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்துத்‌ திருச்சுரமுடைய மகாதேவர்‌ கோயிலில்‌ திருவிளக்கு ஒன்று எரிப்பதற்காக இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ 92 பசுக்களைப்‌ பெற்றுக்கொண்டு எரிப்பதாகச்‌ சம்மதம்‌ தெரிவித்துள்ளனர்‌.

1. ஷஹிஸ்ரீ[॥1*] [கோமாற]பன்மர்‌ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ-

2. குலசேகர[தேவற்‌]கு யாண்டு [௩]௰[அ]ஆவது ஜயங்கொண்டசோழ ம-

3. ண்டலத்து[(ப்‌ புலியூ]ர்க்‌ கோட்டமான குலோத்துங்கசோழ வளநாட்டு

4. சுரத்‌[தூர்‌ நாட்டுப்‌ ப]ல்லாபுரமான வானவன்மாதேவிச்‌ சது வே-திமங்‌-

5. கலத்து [ஆளுடையார்‌] திருச்சுரமுடைய நாயனாற்கு பிள்ளையாரா [ன]

6. [நிரலக[ங்கரை]யர்‌ முதலிகளில்‌ வ(ணா]ண்டையான தொண்டைமானார்‌

7. [வை]த்த திருநு]ந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு [முப்ப]த்திரண்டும்‌ ஜஷப(ம்‌]

. . . கோயில்‌ [காணியுடைய] மிவவரா[ஷ]ணர்‌ மெ[ார]கமன்‌ நாற்ப-

188

10. .

11.

12.

13.

. [த்தெண்‌]ணாயிர [ஹ]ட்டன்‌ [உ]ள்‌[ளி]ட்ட[ாரும்‌] இக்குடி சேனாபதி மட்டன்‌

உள்ளிட்டாரு[ம்‌]

E ரும்‌ வி(ன்னாயலட்டன்‌ உள்ளிட்டாரும்‌ கெளஸிகன்‌ மானதிரலட்ட [ன்‌]

[உ]ள்ளிட்டா[௬ு]ம்‌ இவ்வாண்டை பங்குனி மாத முதல்‌ கைக்கொண்‌(டு]

இ(வ்‌]- விளக்கு ஒ[ன்றும்‌] சந்திராதி[த்‌ *]தவ[ரை] செல்லுவதாக சில[ாலகை ப-

ண்ணிக்‌ குடுத்தோம்‌ இவ்வ[னை]வரோம்‌ இது ஸ்ரீவார ஹே] [க்ஷ

189

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 760/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு 3: 5

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. ஊர்‌ : திரிசூலம்‌ இ.க.ஆ. அறிக்கை : 324/1901 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 550/VII எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 14 அரசன்‌ : விக்கிரம சோழன்‌

இடம்‌ : தர்மபுரீஸ்வரர்கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : இக்கல்வெட்டின்‌ பின்பகுதி கட்டடப்பகுதிக்குள்‌ மறைந்துள்ளது. திருச்சுரமுடைய மகாதேவர்‌ இறைவன்‌ பெயர்‌ மட்டும்‌ அறியமுடிகிறது.

1. ஷஹிஸ்ரீ பூமாது புணரப்‌ புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்பத்‌ தன்நிருபதுமலர்‌ மன்னவர்‌ சூட மனநிய வுரிமையில்‌ மணிமுடி சூடிச்‌ செங்கோல்‌ நின்று . . .

2. நடாத்தி இரு சுடரளவும்‌ ஒரு குடை நிழற்ற வீரஷஹி-ஷஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும்‌ வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி படிரான தில£வக வசூவகிகள்‌ ஸ்ரீவிகூமசோழ சேவர்க்கு யா . . .

3. ச்‌ சருப்பேதிமங்கலத்து திருச்சுரமுடைய 8ஹாமேவற்கு இவ்வூரிலிருக்கும்‌ பள்ளி பொ...

190

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7612017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : 5

வட்டம்‌ தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 875

ஊர்‌ ஆலந்தூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : தமிழ்‌

அரசு பல்லவர்‌ ஊ.க.எண்‌ பவது

அரசன்‌: கம்பவர்மன்‌

கடம்‌ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்‌ நுழைவாயில்‌ தளத்தில்‌ பதித்துக்‌

கட்டப்பட்டுள்ளது.

குறிப்புரை : இக்கல்வெட்டு மாங்காடு ஊரைச்‌ சார்ந்தது. மாங்காட்டில்‌ இருந்த

“திருவராந்தானம்‌ ? எனப்பட்ட சமணப்பள்ளிக்கு திருவழுதுக்காக வேண்டி ஆர்க்காட்டுக்‌ கூற்றத்து பரிசை ஊர்த்‌ தலைவன்‌ அமர்நிலையார்‌ என்பாரின்‌ மகளும்‌, சமணப்பள்ளியின்‌ ஆசிரியர்‌ அனந்த வீரக்குரவரின்‌ மாணக்கியருமான அடிகள்‌ என்பவன்‌ அறுபது காடி நெல்‌ அளித்துள்ளாள்‌. மேலும்‌, முப்பது பலம்‌ எடை கொண்ட தட்டு ஒன்றும்‌ வழங்கியுள்ளாள்‌.

கல்வெட்ரு :

1. ்ரகோவிசைய கம்பவிக்கிரமவர்‌2ற்கு யாண்டைந்தாவதின்‌ சித்திரை

்‌: முதலாகப்‌ புலியூர்க்‌ கோட்டத்து மாங்காட்டு நாட்டு மாங்காடு திருவராந்தானத்துக்கு [ஆர்க்‌]-

2. காட்டுக்‌ கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார்‌ அமர்நிலையார்‌ மகளார்‌ இப்பள்ளி உடைய அநந்த வீரக்குரவர்‌ மாணாக்கியார்‌ கு . . . அடிகள்‌ திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின்‌

3. [காடி] முந்நாழி நெல்லாலட்டுவிக்கவோமானோம்‌ அவிச்சொரியுந்தால முப்பதின்‌ பலத்தாலிட்டார்‌ இதுக்கு முட்டாமைச்‌ .... .

191

த.நா.அ. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 762/2017

மாவட்டம்‌ : காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு டது.

வட்டம்‌ : தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்‌ ஊர்‌ : நங்கநல்லூர்‌ இ.க.ஆ. அறிக்கை : -

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு

எழுத்து : கிரந்தம்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ த்‌

அரசன்‌ : கம்பவர்மன்‌

டம்‌ : தர்மலிங்கேஸ்வரர்‌ கோயில்‌ வெளிப்புற வடக்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : இக்கோயிலில்‌ திருப்பள்ளியெழுச்சியின்‌ போது மத்தளம்‌ கொட்டுவதற்காக சோழ நாட்டுத்‌ தென்கரை மங்கலத்தைச்‌ சார்ந்த ஒருவன்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ கோவிராஜ . . . க்கு யாண்டு சு ஆவது புலியூர்க்‌ கோட்டத்து சுரத்தூர்‌ நாட்டு . . . முர தேவற்கு வ.சகித்தவற்‌ பள்ளியெழிச்சி கொட்டுவதற்கு சோழநாட்டுத்‌ தென்கரை மங்கலத்து . . . யுடையான்‌ சோழன்‌

192

த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 763-66/2017

கல்வெட்டு :

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : -

தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 16-நூற்‌. பள்ளிக்கரணை இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு து

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

- ஊ.க.எண்‌ : 1,234

ஆதிபுரீஸ்வரர்கோயில்‌ கருவறை வடக்குக்‌ குமுதம்‌.

இக்கோயில்‌ இறைவனுக்கு சேவை செய்தவர்களின்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன்‌ பண்டிதர்‌, சத்தநாதன்‌, சப்தநாதன்‌, மாதவ பண்டிதர்‌, நரசயன்‌, சேவகப்பெருமாள்‌, திகமலர்‌ உடையான, பொன்னம்பலநாத பண்டிதர்‌ ஆகியோரின்‌ பெயர்கள்‌ காணப்படுகின்றன.

I 1. செவுத பெருமாள்‌ பண்டிதர்‌ புத்திரன்‌ தேவன்‌ பண்டிதர்‌ தேவன்‌ பண்டி ஸத்தநாதன்‌ ௭கெ..ஸ..... நாகி சதாஹேவை

1] ஆதிபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறைப்பட்டி 1. ஸவூநாதந்‌ ஸா ஸேவை 11] கருவறை மேற்குப்‌ பட்டி

மாதவ பண்டிதர்‌ சதாசேர்வை நரஸயந்‌ ஸஉாஸேவை

சேவக பெருமாள்‌ ஹூ ஸேவை

IV 1. சிவப்பிராமண நாயந்‌ மகந்‌ திகமலர்‌ வுடையாந்‌ சதா சேர்வை 2. தம்பர்‌ பொன்னம்பலனாத

பண்டிதர்‌ ஸூ ஸேவை 3. பண்டிதர்கள்‌ சீபாதம்‌ சே . . .

193

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7672/2017

மாவட்டம்‌

வட்டம்‌

காஞ்சிபுரம்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1744 தாம்பரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி 1525 பள்ளிக்கரணை இ.க.ஆ. அறிக்கை : -

தமிழ்‌ முன்‌ பதிப்பு

கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

விஜயநகரர்‌ ஊ.க.எண்‌ : 8 கிருஷ்ணதேவராயர்‌

ஆதிபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு மற்றும்‌ தெற்கு குமுதம்‌.

குறிப்புரை : பள்ளியாகாரணையில்‌ குடியிருக்கும்‌ குடிகளுக்கும்‌, காசாக வரி

செலுத்தும்‌ குடிகளுக்கும்‌ மாதம்‌ ஒன்றுக்கு ஒன்றே கால்‌ வசூலித்து, பார்வதீஸ்வரமுடையார்‌ கோயிலுக்கும்‌ வீராத்தாள்‌ கோயிலுக்கும்‌ பாதிபாதியாக பிரித்துக்‌ கொண்டு இக்கோயில்களின்‌ திருப்பணிகளுக்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்‌ திருபாணப்‌ பெருமாள்‌ கோயிலுக்கும்‌ தானம்‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்ரு :

1.

2.

ஷஹிஸ்ரீ நூ 8ஹா மண்டலேசர்‌ ஹரியராய விபாடன்‌ பாஷைக்கு தப்பவராய கண்ட மூவராயர்‌ கண்ட கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதாந்‌ துலுக்கதல விபாடன்‌ மஜவே[ட்‌ *]டை கண்டராயன்‌ பூவ. கிண பமரிம உத்திரசமுத்திராதிபதி ஸ்ரீவீரபிறுதாப மஹாராய ஸ்ரீமந்‌ மகா மண்டலேசுர மேதிகாமீசர கண்ட கடாரி துளுவ நரசிங்கராய திம்மராய வீரவசந்தராய ஆஷமேவ மகாராயறற்கு]

செல்லா நின்ற சகாஸூ ௲௪ஈச௰௫௪க்கு மேல்‌ செல்ல நின்ற சிசுபானு ஸவேஸறத ஹே நாயற்று பூவ-பக்ஷத்து வ,மமயும்‌ க௯[,*] வாரம்‌ கயுகி நக்ஷகும்‌ பெற்ற நாளையில்‌ செயங்கொண்டசோழ மண்ட [ல *]த்து புலியூற்‌ கோட்டத்தில்‌ சுரத்தூர்‌ நாட்டில்‌ பள்ளியா காரணையில்‌ உடையார்‌ ஆதீமுமமுடையார்‌ காணப்‌ லோகுத்தில்‌ மேவன்‌ பண்டிதரும்‌ ஹுூகுவகுநநாக பொன்னாம்பலனாத பண்டிதரும்‌

194

3

வ,வைகா ஹோர௬$க ௬௯ணகமாக செல்லா நின்ற பள்ளியா காரணையில்‌ மடப்பற நிலம்‌ சேத்தபடி . . . பாஷதநாகர்‌ கோவிலுக்கு தெற்கு சூல கல்லுக்கு வடக்கு மேலை வழிக்கு கிழக்கு வீராத்தாள்‌ கோயிலுக்கு மேற்கு யின்னாற்பாற்கெல்லைக்கும்‌ நடுகுடியேறியிருக்‌[க] கடையாகவும்‌ குடியளுக்குமிடத்து காசாயவர்கத்து குடியளுக்கு காணிக்கை ஊர்‌ வெச்சம்‌ உள்பட மாதம்‌ ஒன்‌

றேகால்‌ பணம்‌ விழுக்காடு கொண்டு வீராத்தாள்‌ பாவ*தீறமுடையாற்கு திருப்பணி னடத்த கடைவாராகவும்‌ இந்தயிறைவரி பாற்வதீசுரமுடையாற்கு பாதியும்‌ வீராத்தாளுக்கு பாதியும்‌ ஆக திருப்பணி நடத்த கடைவாராகவும்‌ யிதுக்கு யாதொருவர்‌ அகிதம்‌ பண்ணாமல்‌ யிருக்கவும்‌ இதுக்கு அகிதம்‌ பண்ணினால்‌ கெங்கை கரையில்‌ கோவதை பண்‌(ணி]

டன தோஷத்திலே போககடைவாராகவும்‌ ௨௰௪ குலஓக்ஷகி [திருப]ாணப்‌

பெொ)ருமாளுக்கு திருப்பணிக்கு யிரண்டு தறி விடவும்‌ யிந்த பிரமாணத்துக்கு தொண்டை மண்டல தாசி செய்வார்‌ திம்மபாரோம்‌ யிப்பிறமாணத்துக்கு காரம்பாக்கமுடையார்‌

195

த.நா.அ., எதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 768/2017

மாவட்டம்‌ : சென்னை ஆட்சி ஆண்டு : 4

வட்டம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - நூற்‌. ஊர்‌ வேளச்சேரி இ.க.ஆ. அறிக்கை : 317/1911

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ.19/97 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு சோழர்‌ ஊ.க.எண்‌ : 1

அரசன்‌

கடம்‌ : செல்லியம்மன்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலியூர்க்‌ கோட்டத்து வெளிச்சேரி சபையார்‌ இவ்வூரிலுள்ள காளா பிடாரி

இறைவிக்கு ஒரு நந்தா விளக்குக்கும்‌ திருஅமுதுக்கும்‌ வேண்டிப்‌ பயிரிடப்படாத நிலம்‌ (மஞ்சிக்கம்‌) ஒன்றினைக்‌ கொடுத்துள்ளனர்‌.

1. ஹஹிஸ்ரீ [॥*] கோப்பரகேஸரி ஸ்ர[ர்‌]க்கு யாண்டு நான்காவது புலியூர்‌ கோட்டத்‌-

2. து வெளிச்சேரி ஸலெயோம்‌ எம்மூர்க்‌ காஷாலடாரிக்கு வத ாதி- 3. த்தவல்லொரு ந.நாவிளக்கும்‌ இரண்டு திருவமிர்துக்கும்‌ ஆக வைத்த 4. மஞ்சிக்கம்‌ தென்கழ(ன்‌)நிக்கீழ்‌ கழிக்காட்டு ஒூதிக்கு கீழ்பாற்கெல்‌- 5. லைய்‌ செருப்பள்ளி நாராயணலட்டனும்‌ குலபுத்தி நாரணக்‌ கிரமவி- 6. [த]தநும்‌ உடைய ஹூதியின்‌ மேற்க்கும்‌

7. தென்பாற்கெல்லை குட்டிமஞ்சுரச்‌ சட்டய [விகூம] சநநும்‌ இவன்‌ தம்பியும்‌ உடை [ய]

8. லூதியின்‌ வடக்கும்‌ மே[ல்‌*]பாற்கெல்லை காலின்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை ௭*

* கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.

196

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை எதாடர்‌ எண்‌: 2769/2017

மாவட்டம்‌ : சென்னை ஆட்சி ஆண்டு : 5

வட்டம்‌ ரக வரலாற்று ஆண்டு : கி.பி. 962

ஊர்‌ ்‌ : வேளச்சேரி இ.க.ஆ. அறிக்கை : 315/1911

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ. 3/114 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 2

அரசன்‌ : மதுரை கொண்ட கோவிராஜகேசரி (சுந்தரசோழன்‌)

கடம்‌ : தண்டீஸ்வரர்‌ கோயில்‌ உண்ணாழிகைத்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலியூர்க்‌ கோட்டத்துக்‌ கோட்டூர்‌ நாட்டு வெளிச்சேரி ஊர்‌ நிர்வாகச்‌ சபையான ஆளுங்கணத்து உறுப்பினர்‌ தென்னூர்‌ தேவகுமார கிரமவித்தன்‌ என்பவன்‌ இவ்வூர்‌ தண்டீஸ்வரர்‌ கோயிலில்‌ ஒரு நுந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ மதிரை கொண்ட கோவிராஜகேஸரி பீர்க்கு யாண்டு 2. சாவது புலியூர்‌ கோட்டத்து கோட்டூர்‌ நாட்டு வெளிச்சேரி யாளுங்க- 3. ணத்தாருள்‌ தெந்னூர்‌ ஜேவகுமார சூ மவித்தநிவூர்‌ திருதண்டீமு- 4. ஜேவர்க்கு வராதித்தவற்‌ ஒரு நுந்தா விளக்கெரிப்பதற்க்கு வைத்த

5. சாவாமூவா போராடு தொண்ணூறு இம ஈக்ஷிப்பார்‌ பநாஹேஸாறர்‌ ॥-

197

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 720,2012

மாவட்டம்‌ : சென்னை ஆட்சி ஆண்டு : 7

வட்டம்‌ 5 வரலாற்று ஆண்டு : கி.பி.964

ஊர்‌ : வேளச்சேரி இ.க.ஆ. அறிக்கை : 306/1911

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ. 3/116 எழுத்து : கிரந்த கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 3

அரசன்‌ : சுந்தரசோழன்‌

குடம்‌ : தண்டீஸ்வரர்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : சோழநாட்டு ஆற்காட்டுக்‌ கூற்றத்து ஒன்பதிற்றுவேலி என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்த இந்திரன்‌ பழிநத்தடிகள்‌ மற்றும்‌ இவன்‌ தம்பி அண்ணாமலை ஆகிய இரு வெள்ளாளர்களும்‌ புலியூர்க்‌ கோட்டத்து வெளிச்சேரி மகாசபையினரிடம்‌ விலை கொடுத்து நிலம்‌ ஒன்றினை வாங்கி வெளிச்சேரி திருத்தண்டீஸ்வரர்‌ கோயிலுக்குத்‌ தானமளித்துள்‌ ளனர்‌. இந்நிலத்தினைப்‌ பெற்றுக்கொண்ட சிவபிராமணர்கள்‌ இக்கோயிலில்‌ விளக்கெரிக்கவும்‌, இக்கோயிலில்‌ தானம்‌ வழங்கியவர்கள்‌ எடுப்பித்துள்ள பிள்ளையார்‌ வழிபாட்டிற்குத்‌ திருஅமுதுப்‌ படைப்பதாகவும்‌ உறுதியளித்துள்ளனர்‌.

கல்வெட்ரு : 1. ஹஹஷிய்ீ [॥*] மதிரைகொண்ட கோவிராஜகேஸரி பன்மற்கு 2. யாண்டு ஆவது] புலியூர்‌ கோட்ட[த்‌ *]து வெளிச்சேரி 2ஹரஸலெயே- 3. [ாமெமம்மூர்க்‌ எ, ஹ[ஷாநத்‌]தே கூட்ட குறைவற கூடி இருந்து விற்கின்‌[ற] 4. நிலம்‌ இவூர்‌ கீழ்‌[பிடா]கைக்‌ காறகத்து அதம்புழானழி ஏரி அக-

5. ப்பட்ட [நி]லம்‌ . . . . . இ।வ்‌*]வழி யா . . . . மேற்கு தெந்‌- 6. பாற்கெல்லை மா[னயிட்டுகா[லு]க்கு வட[க்‌]கு மேல்பாற்கெல்லை தட்டநேரியோ-

198

7. டே அடைந வழிக்கு கிழக்கு வடபாற்கெல்லை கோட்டூர்காலுக்கு

தெற்க்குமிநான்கெல்‌-

8. லையக[த்‌]துட்பட்ட நில[த்து நடுவு பி . . வயூர்‌[னி]லம்‌ நீக்கி

9.

10.

15.

16.

17.

18.

வெட்‌

உண்ணிலமொழிவின்றி விற்றுகுடு-

த்தோமிது இ[வ்‌*]வாறு வி[லை]க்காணங்‌ கீழிரைத்‌ [த]ந்து விற்பித்து கொண்டாந்‌ சோணாட்டு [ஆரர்‌-

காட்டு கூற்[ற]த்து வெள்ளாள([]னன்‌ பதிற்றுவே[லி]உடையாநிந_ன்‌ பழிநத்தடிகளுமிவன்‌ '

. தம்பி அண்ணாமலையு மிவ்விருவர்‌ பக்கலுமி லூஒயொல்‌

விலைப்பொருள்‌-

_ எற[க்‌*]கொண்டு (விற்றுக்‌ குடுத்தோமிமூதியா[ல்‌] வ, இறையுமெச்சோறும்‌

அமஞ்‌-

சி வெட்டி வேதினை அநராயதிஃயுமெப்பேற்பட்ட இறையும்‌ [க]ாட்ட பெறாதோமா-

. நோம்‌] [க]ாட்டிநாரை படிஹேறாயறே ம20ரஸந முதலாக தான்‌ வேண்டிந

விட-

த்திலே மெய்வெற்றுவகை இவ்விருநூறு காணம்‌ தண்டமிட ஒட்டிக்குடுத்தோம்‌-

2ஹாஸலெயோம்‌ இப்பூமி உழைக்கும்‌ இரண்டு குடிக்கு ஸவூபரிஹாரமா[க] ஒட்டி-

க்குடு[த்‌ *]தோ[ம்‌*] 2ஊரஸலெயோமிவர்கள்‌ பணி[க்‌ *]க வெழுதிநேன்‌

வைகாஸநன்‌ பெ[ரு]மா[ந்‌ ப]- ட்டநேன்‌[1*] இப்பரிசு இந்‌ பழநதடிகளு“மிவன்றம்பி அண்ணாமலை யெநுமெ]-

, பழனத்தடிகளும்‌ இவன்‌ - என்று படிக்க. . அந்தராயாதி - என்று வாசிக்க. . வைகாநஸன்‌ - என்று படிக்க.

199

21.

23.

24.

25.

26.

27.

டங்கள்‌ வெளி[ச்‌*]சேரி [2]ரஸலெயார்‌ பக்கல்‌ கொண்ட பரிசே

இ।வ்‌*][வூ]ர்‌ திருதண்டீரர[த்‌ *]து ம[ஹா]-

. மேவார்‌ *]க்கு சஜாதித்தவற்‌ ஒரு [ந]ன்தாவிள [க்‌ *]கெரி[ப்‌ * ]பதற்கும்‌

இக்கோயிலில்‌ யாங்கள்‌ ஸ்ரீகோயி-

ல்‌ [லெ]டு(ப்‌*][பி]த்து வ, கிஷஷெ செய்வித்த கணவதியார்‌[க்‌*]கு உ[ச்‌*]சியம்போது இருநாழியரிசி [யா] -

. ல்‌ திருவமுது காட்டுவதாகவும்‌ குடு[த்‌ *]தோமிவ[ர்‌ *]கள்‌ குடுத்த இல

கொண்டு இர *]ஈாவிள[க்‌ *]- கெரி(ப்‌ *]பதாகவும்‌ கணவதியார்‌ [க்‌ *]கு திருவமுது காட்டிக்‌

கொள்வதாகவுமிவூதி கொண்டோ[ம்‌*] திருதண்டீ-

யர[த்‌*]து திருவு[ண்‌ *]ணாழிகை உடைய மமிவவாஹணந்‌ மெமாமறமிவநேநும்‌ அமிர்தர[ஞ்ச]-

[ன *]சிவ[நே]நும்‌ பொந்மலைசிவநேநும்‌ இ[வ்‌*]வனைவோம்‌ இப்‌ *]பணி சாதித்தவற்‌ மு[ட்‌ *]டா[மை-

சைவோமாநோம்‌ *]5 முட்டி[ன்‌] ப[டி] இரட்‌[டி] சைவோமாநோம்‌* இம?*மிஈ க்ஷி[ப்‌ *]பாரெண்பதுந”

ணரப்‌]பெரும[க்க]ளுமந்‌[றா]ழ்‌ கோவும்‌ பராஹேஸாற(ரு]ம்‌॥-

4. பழனத்தடி - என்று படிக்க. 5. செய்வோமாநோம்‌ - என்று படிக்க. 6. ரெண்பதிந்‌ - என்று படிக்க.

200

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 2721,2017

மாவட்டம்‌ : சென்னை ஆட்சி ஆண்டு : 15

வட்டம்‌ : - வரலாற்று ஆண்டு : கி.பி 1009

ஊர்‌ : வேளச்சேரி இ.க.ஆ. அறிக்கை : 316/1911

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.க.தொ. 3/191 எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோழர்‌ ஊ.க.எண்‌ : 4

அரசன்‌ : பார்த்திவேந்திராதிவர்மன்‌

இடம்‌ : செல்லியம்மன்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : சோழநாட்டு மழநாட்டுப்‌ பிரிவில்‌ உள்ள திருவேட்பூர்‌ என்ற ஊரைச்‌ சார்ந்த திருவேட்ப்பூர்‌ உடையான்‌ தேவடிகள்‌ என்பான்‌ புலியூர்‌ கோட்டத்து வெளிச்சேரியில்‌ உள்ள சப்தமாதர்கள்‌ (ஏழு கன்னிகையர்‌) வழிபாட்டிற்கு வேண்டி, இவ்வூர்‌ மகாசபையாரிடம்‌ விலை கொடுத்து நிலம்‌ ஒன்றினை வாங்கித்‌ தானமளித்துள்ளான்‌. கல்வெட்ரு : 1. ஷஹிஸ்ரீ கோப்பா.தி* வேநாயிபதி வதற்கு யாண்டு பத்தாவது புலியூ- 2. ர்‌ கோட்டத்து வெளிச்சேரி ஊஹலையோம்‌ எம்மூர்‌ ஷவ.ஆஅக்களு- 3. க்குச்‌ சோழநாட்டு மழநாட்டுத்‌ திருவேட்பூர்த்‌ திருவேட்ப்பூரூடையான்‌ தேவடி- 4. கள்‌ சூ. காலமு[ம்‌] நிச்சற்படி வைத்த திருவமிர்து ஒன்று இதனுக்கு இவ- 5. ன்‌ விலைகொண்டு வைத்த ஜூதி இவ்வூர்த்‌ தென்கழனிப்‌ பூதிபாக்கன்‌ 6. செறுவு தடி நாலினா[லும்‌ நிலம்‌] யிரினூற்றுக்குழி இரண்டேற்றிக்‌ குழி ஐஞ்நூற்று

7. முப்பத்தொன்றரையே அரைக்காணியாலும்‌ எப்பேர்ப்பட்ட இறையும்‌

201

8. ஒழியப்‌ பணித்து இறைஇழிச்சிக்‌ குடுத்தோம்‌ 2ஊரஸலையோம்‌

9. ஹசி நாங்களே கொண்டு நிசதம்‌ ஒரு திருவமிர்து செய்விக்க கடவோம்‌ ஸ்ரீகோ-

10. யிலுடைய மாஅமிவரோம்‌ கடைக்கூட்டி வெட்டுவிச்சார்‌ காளியபட்டர்‌

202

த.நா.௮. ஒதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 7222012

மாவட்டம்‌ : சென்னை ஆட்சி ஆண்டு : 10 வட்டம்‌ : 5 வரலாற்று ஆண்டு : கி.பி. 995 ஊர்‌ : வேளச்சேரி இ.க.ஆ. அறிக்கை : 304/1911 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு டது

எழுத்து : கிரந்தங்‌ கலந்த தமிழ்‌

அரசு : சோமர்‌ ஊ.க.எண்‌ : 5

அரசன்‌ : முதலாம்‌ இராசராசன்‌

கடம்‌ : தண்டீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌.

குறிப்புரை : புலியூர்க்‌ கோட்டத்துக்‌ கோட்டூர்‌ நாட்டு வெளிச்சேரி புறஊர்ப்‌ பகுதியான தரமணியில்‌